பிட்காயின் மற்றும் ப்ளாக் செயின் தொழில் நுட்பம் Bitcoin & Block Chain Technology

பிட்காயின் மற்றும் ப்ளாக் செயின் தொழில் நுட்பம்

Bitcoin & Block Chain Technology

DOWNLOAD AS PDF பிட்காயின் மற்றும் ப்ளாக் செயின் தொழில் நுட்பம்

பணத்திற்கு பல பரிமானங்கள் உண்டு – ஒன்று, அது எந்த நாட்டைச் சேர்ந்தது; இரண்டு, அந்த நாட்டு அரசால் அல்லது மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது என்பதாகும். ஆனால் எந்தவொரு நாட்டையும் சேராமல், எந்தவொரு நிறுவனத்தையும் சேராமல் கணினி மூலம் அடையாளம் தெரியாத சிலரால் உருவாக்கப்படுது பிட்காயின்.

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் (Bitcoin) என்பது சட்கோஷி நகமொட்டாவால் உருவாக்கப்பட்ட ஒரு (Cryptocurrency) எண்ணிம நாணயமுறை ஆகும். இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மெண்பொருளும்  இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல் இரு நபர்கள், தங்களிடையே பணப் பரிவர்த்தனை செய்வதையும், அந்தப் பரிவர்த்தனையை உறுதி செய்து, அதே நேரத்தில் இருவரின் அடையாளங்களைப் பாதுகாத்து வைக்கவும் ஒரு கனித கனினி முறையை பயன்படுத்தி செயல்படுகிறது

பெரும்பாலான நாணயமுறைகளைப் போலன்றி பிட்காயின் நாணயத்தைக் கட்டுப்படுத்தும் நடுவண் அமைப்பு ஏதும் இல்லை. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவது மூலம் இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன மோசடிகளை தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமெ செலவளிக்க  முடியும் . ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.

ப்ளாக் செயின் தொழில் நுட்பம்

ப்ளாக் செயின் தொழில் நுட்பம் என்பது ஒரு திறந்த வெளி மின்  பேரேடு( electronic open Ledger)  யார் வேண்டுமானாலும் இந்த மின்னனு பேரேட்டில் மாற்றம் செய்ய இயலும் ஆனால் இதில் மாற்றம் செய்வதற்கு பரிவர்த்தனையில் உள்ள இருவரும் இனைந்து கனித குறியீடுகளை அடிப்படையாக வைத்து மட்டுமே  மாற்றம் செய்ய இயலும். எடுத்துக்காட்டாக விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் முன்னர் கொடுக்கப்ப்பட்ட தகவல்களை மாற்றிக்கொள்ள இயலும் ஆனால் விக்கிபீடியாவை பொறுத்தவரையில் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மையம் ஒன்று இருக்கும் அதன்மூலமும் தகவல்களை கட்டுப்படுத்த இயலும்.

ஆனால் ப்ளாக் செயின் தொழில் நுட்பத்தில் மூன்றாம் நபர் இல்லாமல் அதில் ஈடுபட்டிருக்கும் இருவரும் ஒப்புதலுடன் தான் மாற்றம் செய்ய முடியும், அதே போல் திறந்த வெளி மின் பேரேட்டை அனைத்து பயனாளர்களும் பார்க்கும் வண்ணம் இருக்கும். எனவே யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக பிட்காயின் பரிவர்த்தனை நடைபெற இயலாது. சில குறுப்பிட்ட கால அளவில் நடைபெறும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும், ஒரு ப்ளாக் (Block) என்ற அளவில் ஒன்று சேர்க்கப்படும். பிறகு அந்த ப்ளாக் ஏற்கனவே உள்ள ஒரு ப்ளாக் செயினில் சேர்க்கப்படும். பிட்காயின் சமூகத்தில் உள்ளவர்கள் இந்த ஓப்பன் லெட்ஜர் மற்றும் ப்ளாக் செயின் உருவாக்கத்தில் ஈடுபடுகின்றனர்.

கவனத்தில் கொள்ளக்கூடியவை

  • இங்கே பிட்காயினைப் பொறுத்தவரை எந்த ஒரு மூன்றாம் நபரும் கண்கானிக்க முடியாது. உதாராணமாக வங்கியில் இனையப்பரிவர்த்தனை மூலம் நாம் இன்னொருவருக்கு பணம் அனுப்பினால் அது பணம் அனுப்பிய நமக்கு , பணம் பெற்றவர் மற்றும் ஆகிய மூவரும் அறிய இயலும் ஆனால் ப்ளாக் செயின் தொழில் நுட்பத்தில் பிட்காயின் இயங்குவதால் பணம் அனுப்பியவருக்கும் பணத்தை பெற்றவருக்கும் மட்டுமே பரிவர்த்தனை பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

  • மேலும் இது அரசாலோ பிற மத்திய வங்கியாலோ அனுமதிக்கப்பட்ட கட்டளைப் பணம் (Fiat money) கிடையாது .

  • இந்தியாவில் இப்பணம் சட்டவிரோத பணமாக கருதப்படும்

TNPSC GROUP II INTERVIEW EXPLAINED | DEPARTMENT RELATED| CURRENT ISSUES

Dear Aspirants

I first congratulate those who cleared the mains because you are taken two steps towards your success by passing Prelims and Main examination. The book tries to guide the typical process of TNPSC Interview. It discuss the myths and misconception and the basic philosophy of interview preparations and what the interviewer seeks to find the right candidate for service not a job. If you notice the Notification of the recruitment TNPSC said it invites application for the post of Combined Civil service Examination only.

I believe that any aspirants who get an interview call have the calibre to be a successful person. The interview plays a important role of final judgment of Success. The board do not seek any specific personality train, Aspirants come in many personality types just like the common man. The board only seeks to weed out the candidate who may not be fit for a service under the government among the aspirants. The focus of the book is to help in your interview preparation to get your success. The book divided into various topics that guide you various aspects of interviews and point towards factors lead to success in interviews.

DOWNLOAD LINK

 A GUIDE TO TNPSC INTERVIEW 1

Wish you all the Success

Iyachamy Murugan

Iyachamy Academy

Chennai

 

( I request the readers to share their feedback of the book through m.iyacahamy@gmail.com or 9952521550 via Whatsapp)

 

INTRODUCTION TO INTERVIEW

[embedyt] https://www.youtube.com/watch?v=A-pG7oEbGCg[/embedyt]

VIDEO – 1

[embedyt] https://www.youtube.com/watch?v=eJoUpIzoJr4[/embedyt]

VIDEO – 2

[embedyt] https://www.youtube.com/watch?v=q09PRIxHakQ[/embedyt]

MOCK INTERVIEW 1

[embedyt] https://www.youtube.com/watch?v=-QFIAoRPYoY[/embedyt]

MOCK INTERVIEW 2

[embedyt] https://www.youtube.com/watch?v=A0dTnkVd5Hc[/embedyt]

MOCK INTERVIEW 3

[embedyt] https://www.youtube.com/watch?v=lwJU_Zlb52Y[/embedyt]

HOW TO PREPARE AND WHAT TO PREPARE FOR TNPSC GROUP II INTERVIEW

Interview

(The Articles try to answer the basic things for TNPSC Group I & II Interview)

DOWNLOAD HOW TO PREPARE TNPSC GROUP II INTERVIEW

Common Misconceptions

  • An interview is a type of “test” where an applicant sits passively and answers questions
  • Interviews involve unpredictable questions
  • One cannot prepare for an interview; it is best to just “wing-it”
  • Interviewers are looking for ways to trap the interviewee
  • If you were unable to answer all the questions, you did poorly

TNPSC Interview About

The candidate will be interviewed by a Board who will have before them a record of his/her career. He/she will be asked questions on matters of general interest. The object of the interview is to assess the personal suitability of the candidate for a career in public service by a Board of competent and unbiased observers. The test is intended to judge the mental calibre of a candidate. In broad terms this is really an assessment of not only his intellectual qualities but also social traits and his interest in current affairs.

Generally state Public service Commission Interview is differs from UPSC and Other Job Interviews. It’s purely based on the candidate information when he applied for it the Questions falls in the following categories

  1. Self Introduction
  2. District profile
  3. Graduation related questions
  4. Current Issues India/ Tamilnadu
  5. Department related questions those who are working with govt
  6. Various post related questions in Group II / I

[embedyt] https://www.youtube.com/watch?v=A-pG7oEbGCg[/embedyt]

SELF INTRODUCTION

First thing you should thank the interviewer for shortlisted

Name:                             am XYZ (say with confidentially)

Place:                    XYZ (any important things Associated with your Place, if you are from Tiruchy then say am Rock Fort City)

Qualification:      say your qualification with major subject if you have higher percentage in your graduation then disclose otherwise just says degree with your college / university name. Awards if any

Experience          if you have any work experience whether Govt / private (if you joined post after mains result say it don’t hide). Year of experience with designation.

Family Background: when you talk about your family member first mentioning with number. Start with mentioning your parents then come down to siblings no need to mention their name just the profession or occupation they do. (For example including family consist of four members, my father working as XYZ profession, mother working as XYZ , Sister working as XVYS profession)

Role model:         say your role model and justify why you chose him as role model?

Hobby:        learn to phrase your hobby with unique way. For example instead of simply saying cycling as your hobby you could phrase it as I like up cycling in the during early morning.

Kindly keep in mind the below things (they may try to make u nervous by asking such simple things)

  • Your roll number
  • Height / weight /age
  • Meaning of your name
  • Why you choosing govt job as a career
  • Famous personalities related with your hobby
  • Questions asked in the mains examination ( they may make nervous you)

What to prepare?

  1. Prepare from your basic Graduation related questions. (Pick two topics you know very well they may ask)
  2. District profile
  • History
  • Politics
  • Personalities
  • Culture
  • Tourism
  • General statistics (census 2011)
  • Recent developments and current affairs
  • Personalities
  • Development
  • Social problems
  1. Current Issues happening in India/Tamilnadu ( will be Given when mock Interview Conducted in IYACHAMY ACADMEY )
  2. Department related questions those who are working with govt ( for Example any one working with Revenue dept he must know the dept hierarchy and various policies and schemes ) ( will be Given when mock Interview Conducted in IYACHAMY ACADMEY )
  3. Various post related roles and responsibilities ( Sub register , DCTO , Revenue Inspector like ) ( will be Given when mock Interview Conducted in IYACHAMY ACADMEY )

General Advice

  • Greet the interviewer first
  • Wait until you are offered a chair before sitting. Sit upright and always look alert and interested. Be a good listener as well as a good talker. Smile!
  • Be confident: the key of a successful interview is confidence.
  • Speak clearly and vary your tone to show you are interested and enthusiastic.
  • Take time to think about each question before answering so that you can give a good response.
  • Listen to questions carefully and let the interviewer lead the conversation. If you don’t understand a question, ask for it to be explained or repeated.
  • It’s essential that whichever language you speak in, you should have a good command over the language.
  • Speak clearly and concisely, so you express your thoughts in the best way possible.
  • Remember to maintain eye contact with the interviewer’s
  • Research about various posts before your interview and prepare at least 2-3 questions that you will ask the interviewer about the job/course/organization.
  • Practice positive body language.
  • Remember not to fidget, stand still and relaxed and while sitting sit casually.
  • Take note of the surroundings. Sometimes questions may be just asked to test your observation powers.
  • Before the interview practice with a friend/relative and record your answers. You will be able to listen/see where you fumble and where you need to improve.
  • Focus on speaking positively and avoiding negativity. This gives a more positive effect of your interview and will more likely get you a positive response.
  • Be professional while you speak.
  • Be polite and calm. Showing anger is definitely not a good idea.
  • Remember to reach the venue early and arrive for the interview on time.

Dress code

  • Wear clean clothes. Your clothes must be well-washed, ironed and without any stains.
  • Avoid wearing too tight or too loose clothes.
  • Women should preferably wear formal Indian wear to the interview. If you are not comfortable with a sari, a salwar suit would do. Make sure whatever you wear is of a light color. It should be cotton.
  • Very little or no make-up is fine.
  • Avoid high heels unless you are comfortable walking in them and they don’t make a lot of noise.
  • Tie your hair neatly.
  • Men should wear light colored formal shirts and dark trousers.
  • A neck-tie is ok if you are comfortable.
  • Wear formal well-polished shoes with dark socks.
  • Avoid expensive and flashy jeweler.
  • You can wear a formal watch

Attention

Those who want to take classes & mock interview at IYACHAMY Academy Register to 9952521550 or iyachamyacademy@gmail.com  with your Name and District and Educational Qualification. After the Mock interview is over the Candidates will get Current affairs and Department related information those who working with government and Qualification related question paper.

https://iyachamy.com/downloads/tnpsc-group-ii-main-oral-test-guidance-noc-pstm-conduct-certificate-format/

இந்தியாவும் சூறாவளியும் – புயலுக்கு பேர்வைக்கும் முறை

இந்தியாவும் சூறாவளியும்

download India and Cyclone – Iyachamy Academy

இந்தியா இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கபடக்குடிய நாடாகும் ,குறிப்பாக , புயல்,வெள்ளம், நில நடுக்கம் நிலச்சரிவு, வறட்சி போன்றவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது அந்த வகையில் இந்தியாவில் மே மற்றும் ஜீன் , நவம்பர்  , டிசம்பர் ஆகிய காலகட்டங்களில் புயல் அதிகமாக உருவாகின்றது. ஆனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் ஏற்படும் சூறாவளிகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவாகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை 13 மானிலங்கள் கடற்கரையைக் கொண்டுள்ளது அவற்றில் குறிப்பாக , ஆந்திரம் , ஒரிசா, தமிழ் நாடு, மேற்குவங்கம் ஆகிய மானிலம் புயலால் அதிக பாதிப்பிற்குள்ளாகிறது.

சூறாவளிகள் ( Cyclones)

சூறாவளிகளை நடைமுறை வழக்கில் புயல் என்பர். வானிலை வரைபடத்தில் குறாவளி நெருங்கிய சம அழுத்தக் கோடு களால் காண்பிக்கப்படும். சூறாவளி என்பது, ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாகும். வளிமண்டலத்தில் பகுதியான இதன் மையத்தில் அழுத்தம் மிகக் குறைவாக இருக்கும். எனவே, காற்று பல்வேறு திசைகளிலிருந்து இதன் மையத்தை நோக்கிக் குவிகின்றது. பெரல்ஸ் விதிப்படி காற்று நேராக வீசாமல் விலகி வீசுகிறது. இது சுழற்சியான காற்றுகளை உண்டாக்குவதால் சூறாவளி எனப் பெயர் பெற்றது.

வட அர்த்த கோளத்தில் சூறாவளியில் காற்று வலப் புறமாக விலகி வீசுகிறது. எனவே அக்காற்றுகள் எதிர்ச் சூறாவளித் திசையில் வீசுகின்றன. அதே சமயத்தில் தென் அர்த்த கோளத்தில் காற்றுக் கடிகாரக் காற்றுத் திசையில் வீசு கின்றன. ஏனெனில் காற்று இங்கு இடப் புறமாக விலக்கப் படுகிறது.

வெப்ப மண்டலத்தில் உண்டாகும் சூறாவளிகளை வெப்ப மண்டலச் சூறாவளிகள்’ என்றும், வெப்ப மண்டலத்திற்கு வெளியே தோன்றும் சூறாவளிகளை வேப்ப மண்டலத்திற்கு அப்பாற்பட்ட சூறாவளிகள் அல்லது “மிதவெப்ப மண்டலச் சூறாவளிகள் என்பர்

வெப்ப மண்டலச் சூறாவளிகள் ( Tropical Cyclone )

வெப்பமண்டல சூறாவளிகள் அடிக்கடி பேராழிகளில் 60° முதல் 120 வரையுள்ள அட்சங்களில் தோன்றுகின்றன. அவை சாதாரணமாக மேற்காக நகர்ந்து மேற்குக் கோடியில் துருவத்தை நோக்கி வீசுகின்றன.

வெப்ப மண்டலச் சூறாவளிகள் வழக்கமாக உருவத்தில் சிறியவை. அவற்றின் இடை விட்டம் சில கி. மீ. களிலிருந்து பல நூறு கி மீ.கள் வரை பரவியுள்ளது. பூமத்தியரேகைப் பகுதிகளில் இதன் விட்டம் துருவப் பகுதி விட்டத்தைக் காட்டிலும் குறைந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் கொரியாவிஸ் விசை மத்தியரேகையில் குறைவாக இருப்பதே யாகும். வெப்ப மண்டலச் சூறாவளிகளை வானிலை வரை படத்தில் நெருங்கிய சம அழுத்தக் கோடுகளால் குறிக்கப்படும். எனவேதான் சுழற்காற்றுகளும் பெருமழையும் காணப்படுகின்றன. ஆனால் சூறாவளியின் மையம்’ அல்லது ‘கண்’ எந்தவித மாறுதலும் இல்லாமல் காணப்படுகிறது. மையப்பகுதி அமைதியாகவும் லேசான மற்றும் மாறுபட்ட காற்றுகளுடனும் காணப்படுகிறது.வெப்ப மண்டல சூறாவளி மணிக்கு 15 முதல் 30 கி.மீ. வேகம்வரை நகர்கிறது. சிலசமயங்களில் இது வீசும் வேகம் 200 கி மீ. க்குமேல் இருப்பதும் உண்டு.

வெப்பமண்டல சூறாவளிகள் தோன்றக் காரணம்

வெப்ப நிலையில் காணப்படும் நிலையில்லாத் தன்மையாகும். கொரியாலிஸ் விசை பூமத்தியரேகையில் குறைவாக உள்ளதால் பூமத்தியரேகை அமைதி மண்டலம் (Doldrums) பூமத்திய ரேகையை விட்டுத் தூரத்தில் இருக்கும் போது அதிகமான சூறாவளிகள் தோன்றுகின்றன. இவை பெரும்பாலும் கோடைகாலத்தின் பின்பகுதியிலும் மற்றும் முன் இலையுதிர்காலத்திலும் அதிக அளவு தோன்றுகின்றன.

  1. மிகப்பெரிய கடல்பரப்பு வெப்ப நிலை 270 செல்சியஸ்க்கு அதிகமாக இருக்கும்போது
  2. கொரியாலிஸ் விசை செயல்பாட்டில் இருக்கும்போது
  3. செங்குத்தாக வீசும் காற்றில் சிறிய அளவில் மாறுபாடு இருக்கும்போது
  4. காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும்போது

வெப்ப மண்டலச் சூறாவளிகளைப் பல்வேறு இடங்களில் பல் வேறு பெயர்களால் குறிக்கின்றனர். இந்தியாவில் சூறாவளி என்றும், மேற்கு இந்தியத் தீவுகளில் (பெரும் புயல்) ஹரிக் கேன் என்றும், கிழக்கு ஆசியாவில் டைப்பூன் என்றும், மற்றும் ஆஸ்திரேலியாவில் வில்லி-வில்லீஸ் என்றும் குறிப்பிடு கின்றனர்.

இந்தியாவில் புயல் பாதிப்புக்குள்ளாகும் இடங்கள்

மித வெப்ப மண்டலச் சூறாவளிகள் ( Extra tropical Cyclone )

வெப்ப மண்டலமல்லாத சூறாவளிகளை மத்திய அட்ச ரேகைச் சூறாவளிகள் என்பர், வெப்ப மண்டலச் சூறாவளிகளைப் போல் அல்லாமல் இவை மிகப்பெரிய வழியுடையதாகும். இச் சூறாவளிகளின் விட்டம் பல ஆயிரம் கி. மீ.கள் உடைய தாகவும் சில சமயங்களில் பல மில்லியன் கி.மீட்டர் வழியுடைய தாகவும் இருக்கும். இவை நீள்வட்ட வடிவமுடையவை; நீளம் அதிகமாக அதிகமாகக் குறைந்த செறிவுடையதாக இருக்கும்.

இச்சூறாவளிகள் வளி முகங்களினளவாகத் தோன்றுகின்றன. மத்திய அட்ச ரேகைப் பகுதிகள் குளிர் வளிப்பகுதிகளும் வெப்ப வளிப்பகுதிகளும் கூடும் இடமாகையால் இவை இங்கு அதிகம் காணப்படுகின்றன. காற்று இங்குக் குவிந்து வளிமுகத்தின் வழியாக மேலெழும்புவதாலும் குறைந்த அழுத்தமுடையதாலும் அவை சூறாவளிகள் தோன்ற இடமாகின்றன. சூறாவளி வளர்கின்றபோது அழுத்தச் சரிவு மையத்தை நோக்கி இழுக்கும். அப்போது கொரியாலிஸ் விசையின் காரணமாகக் காற்றுகள் சுழன்று வீசுகின்றன.

வெப்ப மண்டலமில்லாத சூறாவளிகள் வளிமுக மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காக வீசுகின்றன. அவற்றின் சராசரி வேகம் மணிக்கு 30 கி.மீ. -லிருந்து 50 கி. மீ. வரை மாறுபடுகிறது. இவற்றின் வேக அளவு கோடைக் காலத்தைக் காட்டிலும் குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும்.

எதிர்ச் சூறாவாளிகள் ( Anti Cyclone)

எதிர்ச்சூறாவளிகள் சூறாவளிக்கு மாறுபட்ட நிலைமையினை உடையவை என்பதைக் குறிக்கும். எதிர்ச் சூறவாளிகள் குவிகின்ற மற்றும் விரிந்து வீசுகின்ற பண்புகளைக் கொண்ட காற்றைக் கொண்டவை. இங்கு அதிக அழுத்தம் மையத்திலுள்ளது; வெளியே செல்லச் செல்ல அழுத்தம் குறைகிறது. கொரியாலிஸ் விசை காரணமாகக் காற்றுச் சுற்றோட்டம் வட அரைக் கோளத்தில் கடிகார திசையிலும், தென் அரைக்கோளத்தில் எதிர்க்கடிகார திசையிலும் காற்று சுழலும்.

அரபிக்கடலைக் காட்டிலும் ஏன் வங்காள விரிகுடாவில் அதிகப் புயல்கள் உருவாகின்றது?

வங்காள விரிகுடா அரபிக்கடலைக் காட்டிலும் அதிக வெப்பமாக இருப்பதால் இங்கு காற்றின் அழுத்தம் குறைந்து கானப்படுகிறது . இது புயல் உருவாக உகந்த சூழ்நிலையாக இருக்கிறது.

புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை

ஏன் புயலுக்கு பேர்கள் வைக்கப்படுகின்றன?

ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.

பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

இந்தியப் பெருங்கடல்

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

வரலாற்றுக்கு முந்தைய காலம்|சிந்து சமவெளி நாகரிகம் பாடக்குறிப்புகள்

வரலாற்றுக்கு முந்திய காலம் : ( Pre Historic Period)

மனித குல வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளைப் பற்றிய விவரங்களை குறிப்பிடும் காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. இக்காலம் பற்றிய ஆவணங்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இயற்கையின் அழிவிலிருந்து மிஞ்சிய சில தடயங்கள், உலகின் பழங்கால மனிதர்கள் உபயோகித்த ஆயுதங்கள், கருவிகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கற்காலம், உலோக காலம் என வரலாற்றுக்கு முந்திய காலத்தை வகைப்படுத்துகின்றனர். மனிதன் கற்களிலாலான ஆயுதங்களையும் கருவிகளையும் உபயோகித்த காலத்தையே கற்காலம் என்று அழைக்கிறோம். கற்காலத்தை பழைய கற்காலம் அல்லது பேலியோலிதிக்காலம்(Palaeolithic Age) என்றும் புதிய கற்காலம் அல்லது நியோலிதிக்காலம் (Neolithic Age) எனவும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.

பழைய கற்கால வாழ்க்கை : Palaeolithic Age

 பழைய கற்காலத்தில் மனிதன் உணவைத் தேடி நாடோடியாக அலைந்தான். பழங்கள், காய்கள், கிழங்குகள் மற்றும் கொட்டைகளை சேகரித்து உண்டான். பின் மிருகங்களை வேட்டையாடினான். சிக்கி முக்கிக் கற்களை உரசி நெருப்பைக் கண்டு பிடித்தான். இலைகளாலும், மரப்பட்டை களாலும், மிருகங்களின் தோலினாலும் தன் உடலைப் பாதுகாத்துக் கொண்டான்.

இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகாமையிலேயே உள்ளன. பழைய கற்கால மக்கள் வசித்த பாறை இடுக்குகளும், குகைகளும் துணைக் கண்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. சில இடங்களில் அவர்கள் இவைகளால் வேயப்பட்ட குடிசைகளிலும் வாழ்ந்தனர். இந்தியாவில் காணப்படும் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள் வருமாறு :

  • வடமேற்கு இந்தியாவில் சோன் பள்ளத்தாக்கு மற்றும் பொட்வார் பீடபூமி
  • வடஇந்தியாவில் சிவாலிக் குன்றுகள்
  • மத்திய பிரதேசத்தில் பிம்பேட்கா
  • நர்மதைப் பள்ளத்தாக்கில் ஆதம்கார் குன்று
  • ஆந்திரப் பிரதேசத்தில் கர்நூல்
  • சென்னைக் கருகிலுள்ள அத்திரம்பாக்கம்

புதிய கற்கால வாழ்க்கை : Neolithic Age

புதிய கற்காலத்தில் மனிதன் வேளாண்மையில் ஈடுபட ஆரம்பித்தான். பயிர்களின் வளர்ச்சிக்கு செழுமையான சமவெளிகளைத் தேர்ந்தெடுத்து நாகரிக வாழ்க்கைக்கு வழிவகுத்தான். மிருகங்களை வளர்க்கக் கற்றுக் கொண்டான். இந்த காலகட்டத்தில் சக்கரம் கண்டு பிடிக்கப் பட்டது. இக்கண்டுபிடிப்பு மனிதனின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சக்கரங்களின் உதவியினால் வண்டிகள் செய்து பெருஞ் சுமைகளை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல மனிதன் கற்றுக் கொண்டான். இதை அறிவியல் வளர்ச்சியின் முதல்படி என்று கூறலாம். மிகச்சிறிய நேரம் காட்டி (கடிகாரம்) முதல் பிரம்மாண்டமான ஆகாய விமானம் வரை சக்கரமே அடிப்படையாக உள்ளது. சக்கரத்தின் உதவியினால் கற்கால மனிதன் மட்பாண்டங்கள் உருவாக்கவும் கற்றுக் கொண்டான். இப்படியாக புதிய கற்கால மனிதன் நாகரிக வளர்ச்சிக்கு அடிகோலினான்.  

இடைக்கற்காலம்- Mesolithic

மனிதகுல வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை இடைக் கற்காலம் என்று அழைக்கிறோம். இது சுமார் கி.மு. 10000 முதல் கி.மு. 6000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும். பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்களை இக்கால வரலாறு எடுத்துரைக்கிறது. இடைக்கற்கால சின்னங்கள், குஜராத்தில் லாங்கன்ச், மத்திய பிரதேசத்தில் ஆதம்கார், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களிலிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி ஒரளவு யூகிக்க முடிகிறது.

உலோக கால வாழ்க்கை : Chalcolithic

உலோகங்களின் கண்டு பிடிப்பு மனிதனின் மிகப்பெரிய சாதனையாகும். ஆயுதங்கள் செய்வதற்கு உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கால கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் ஆற்றுப் படுகைகளின் அருகிலேயே வசித்தனர். எனவே ஆற்றங்கரைகளில் நாகரிகம் வளர்ந்தது. உலோக காலத்தை செம்புக்காலம், வெண்கலக் காலம் மற்றும் இரும்புக் காலம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இரும்புக் காலத்தில் கலப்பைகளும், கத்திகளும் இரும்பால் செய்யப் பட்டன. எல்லா வகைகளிலும் மனித குலத்தின் முன்னேற்றம் ஏற்பட இக்காலம் வழிவகை செய்தது.

பொதுவாக, ஆற்றங்கரைகளிலேயே செம்பு – கற்காலப் பண்பாடுகள் வளர்ச்சியடைந்தன. குறிப்பாக, ஹரப்பா பண்பாடு செம்பு – கற்காலப் பண்பாட்டின் ஒரு பகுதியேயாகும். தென்னிந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரா, பெண்ணாறு, காவிரி ஆகிய நதிகளின் பள்ளத்தாக்குகளில் இக்காலத்தில் குடியானவ சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன. உலோக காலத்தின் தொடக்கத்தில் இவர்கள் உலோகத்தைப் பயன்படுத்தவில்லை என்றாலும், சுமார் கி.மு. 2000 ஆண்டுவாக்கில் செம்பும் வெண்கலமும் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள பையம்பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றாலான பொருட்கள், சுடுமண் உருவங்கள், மண்பாண்டங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன

ஹரப்பப் பண்பாடு  ( Harappa Civilization)

சான்றுகள் Resources  :  மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா என்னு மிடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலமாக ஹரப்பப் பண்பாடு பற்றி நமக்கு தெரிய வந்துள்ளது. சர் ஜான் மார்ஷல் தன் குழுவுடன் மொகஞ்சதாரோவின் பல இடங்களில் ஆராய்ச்சி செய்தார். இந்த அகழ்வாராய்ச்சிJ.M. மக்கே, G.F. டேல்ஸ் மற்றும் M.S. வாட்ஸ் ஆகியோரால் தொடரப்பட்டது. இதன் விளைவாக மிக மேன்மையான நாகரிகம் இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்பே இருந்தது என நமக்குத் தெரிகின்றது. சர் ஜான் மார்ஷல் குழுவினரின் கண்டுபிடிப்புகள் ஹரப்பப் பண்பாடு பற்றிய அடிப்படைச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

கி.பி.1921-ல் ஹரப்பா என்னுமிடத்தில் நடந்த அகழ் வாராய்ச்சியின்போது இந்த சான்றுகள் கிடைத்ததால் இதை ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கிறோம். சிந்து நதியின் உபநதியான ராவி (Ravi) நதிக்கரையில் அமைந்த இடம் ஹரப்பா. பாக்கிஸ்தானிலுள்ள மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் ஒடும் நதி ராவி, ஹரப்பா நாகரிகம் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டிற்கு அடுத்த ஆண்டு, கி.பி.1922-ல் சிந்து மாகாணத்தில் உள்ள (தற்போது பாக்கிஸ்தானைச் சேர்ந்தது) லர்கானா மாவட்டத்தில் உள்ள மொகஞ்சதாரோ என்னும் நகரம் தோண்டி எடுக்கப்பட்டது.

நகரங்களை கண்டுபிடித்தவர்கள்

 நகரம்  நதிக்கரை கண்டுபிடித்த ஆண்டு கண்டுபிடித்தவர்
ஹரப்பா ராவி 1921 தயாராம் சஹானி
மொஹஞ்சதரோ சிந்து 1922 ஆர் டி பானர்ஜி
ரோபார் சட்லஜ் 1953 சர்மா
லோத்தல் போகவா 1957 எஸ் ஆர் ராவ்
காளிபங்கன் காக்கர் 1959 பி.பி லால்
பன்வாலி காக்கர் 1974 ஆர் எஸ் பிஸ்ட்

 

ஹரப்பப் பண்பாடு சிந்து நதிக்கரையில் செழித் தோங்கியது. பழைய நாகரிகங்கள் ஏன் ஆற்றங்கரையிலேயே வளர்ந்தன என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவைகளில் ஒரு சில பின்வருமாறு :

  1. பெரிய குடியிருப்புகளுக்குத் தேவையான தண்ணிர் ஆறுகளிலிருந்து தாராளமாகக் கிடைத்தது.
  2. ஆறுகளைச் சார்ந்துள்ள நிலப்பகுதிகள் செழுமை வாய்ந்தவை. எனவே பலதரப்பட்ட பயிர்களை எளிதாகப் பயிர்செய்ய முடிந்தது.
  3. சாலைகள் இல்லாத காலகட்டத்தில் ஆறுகள் மிக மலிவான, எளிதான போக்குவரத்திற்குச் சாதகமாய் அமைந்தன.

சுற்றுப்புறச் சூழல் :

 சிந்து, ஹரப்பா பிரதேசங்கள் ஈரப்பதம் நிலவிய நிலங்களைக் கொண்டதாகக் காணப்பட்டன. எனவே புலி, யானை மற்றும் காண்டாமிருகங்கள் வசித்த அடர்ந்த காடுகள் அங்கு இருந்தன. நகரங்களுக்குத் தேவையான செங்கற்களை தயாரிக்கும் செங்கல் சூளைகளுக்கு வேண்டிய மரங்கள் அக்காடுகளிலிருந்து கிடைத்தன.

காலம் :

 இந்நாகரிகம் சால்கோலித்திக் காலம் (Chalcolithic Period) அல்லது செம்பு கற்காலம் என்று அழைக்கப்பட்ட புதிய உலோக காலத்தைச் சேர்ந்தது. இக்காலத்தில் தகரத்தையும், தாமிரத்தையும் சேர்த்து வெண்கலம் என்ற புதிய உலோகம் தயாரிக்கப்பட்டது. இந்த வெண்கலம் உறுதியாகவும், மக்களின் தேவைக்கு ஏற்பவும் இருந்தது. தரத்தில் மேம்பட்ட கருவிகள் விவசாய வளர்ச்சிக்கு உதவின. சிந்து சமவெளி மக்களுக்கு இரும்பின் பயன் பற்றி தெரியாது. சர் ஜான் மார்ஷலின் கருத்துப்படி சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 3250 முதல் கி.மு. 2750 வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பரப்பு :

ஹரப்பப் பண்பாடு சிந்து, குஜராத், ஹரியானாவை உள்ளடக்கிய பிரிக்கப்படாத பஞ்சாப், ஜம்மு, உத்திரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதி, ராஜத்தானத்தின் வடபகுதி (காலிபங்கன்) ஆகிய இடங்களில் பரவியிருந்தது. இப்பகுதிகளில் காணப்பட்ட தடயங்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் காணப்பட்ட சான்றுகளை ஒத்திருந்தன.

மற்ற நாகரிகங்களுடன் தொடர்பு : சிந்து சமவெளி மக்கள் சுமேரியா, பாபிலோனியா, எகிப்து போன்ற நாடுகளுடன் கடல் கடந்து வாணிபம் செய்தனர். மேற்கு நாடுகளான சுமேரியா, அக்காட், பாபிலோனியா, எகிப்து, அசிரியா ஆகிய நாடுகளுக்குச் சமமாக சிந்து சமவெளி மக்கள் திகழ்ந்தனர்.

திட்டமிட்ட நகரங்கள் :

மொகஞ்சதாரோவும், ஹரப்பாவும் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்கள். மிகப்பெரிய இந்த இரு நகரங்களுக்கும் இடையில் 600 கி.மீ. இடைவெளி இருந்தாலும் தொழில்நுட்பமும் கட்டட அமைப்பும் ஒரே மாதிரியாக இருந்தன. அவைகள் அநேகமாக இரட்டைத் தலைநகரங்களாக (Twin Capitals) இருந்திருக்கக் கூடும். மொகஞ்சதாரோ என்றால் “இறந்தவர்களின் நகரம்’ என்பது பொருள். மொகஞ்சதாரோ நகர அமைப்பை மூன்று வகை யாகப் பிரிக்கலாம். அவை நகரின் உயரமான பகுதியான கோட்டை அல்லது சிட்டாடல் (Citadal), சற்றே தாழ்ந்த பகுதியில் அமைந்த நகரம் (Lower Town), ஊருக்கு வெளியே அமைந்த சிறிய குடிசைகள் ஆகியன ஆகும்.

கோட்டைப்பகுதி அல்லது சிட்டாடல் :

இந்த இடம் நகரின் உயரமான பகுதியில் காணப்பட்டது. அது சாதாரணமாக கோட்டை அல்லது நிர்வாகம் செய்யும் பகுதியாக அழைக்கப்பட்டது. அங்கு மக்கள் வாழ்ந்திருக்கக்கூடும். அவர்களில் ஆட்சியாளர் களும், சமயத்தலைவர்களும், செல்வந்தர்களும் அடங்குவர். சிந்து நதியின் வெள்ளப் பெருக்கிலிருந்து நகரைக் காக்க பிரம்மாண்ட சுவர்கள் கோட்டையைச் சுற்றிக் கட்டப்பட்டன. அக்கோட்டையில் மிகப் பெரிய தானியக் களஞ்சியம், மக்கள் கூடும் நகர மன்றம் (Town Hall), அமைந்திருந்தன.

பெருங்குளம் :

கோட்டையில் காணப்படும் இந்த பெரியகுளம் 11.88 மீட்டர் நீளமும் 7.01 மீட்டர் அகலமும் 2.43 மீட்டர் ஆழமும் உடையதாகக் காணப்பட்டது. இருபக்கங் களிலும் படிக்கட்டுகள் அமைந்த அக்குளம் செங்கற்களும், சுண்ணாம்பும் மணலும் கலந்த கலவையைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது. அக்குளத்தின் மேல்பகுதியில் சுத்தமான தண்ணிர் உள்ளே வரவும், கீழ்பகுதியில் உபயோகித்த நீர் வெளியே செல்லவும் வழி வகைகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் குளத்து நீர் எப்போதும் சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. குளத்தின் அருகில் காணப்படும் சிறிய அறைகள் உடை மாற்றும் அறைகளாக இருந்திருக்கக்கூடும். அந்த அறைகள் ஒன்றில் பெரிய கிணறு ஒன்று அமைந்திருந்தது.

தானியக் களஞ்சியம் :

மொகஞ்சதாரோவில் காணப்படும் மிகப்பெரிய கட்டட அமைப்பு தானியக் களஞ்சியம் ஆகும். அது 45.71 மீட்டர் நீளமும், 15.23 மீட்டர் அகலமும் கொண்டது. ஹரப்பாவில் 6 தானியக் களஞ்சியங்கள் இருந்தன. தானியக் களஞ்சியங்களின் தென்பகுதியில் வட்ட வடிவில் அமைந்த செங்கற்களாலான மேடைகள் காணப்பட்டன. இவை தானியங்களை பிரித்தெடுக்கும் இடமாகக் கருதப்படுகின்றன.

நகர மன்றம் :

நகரமன்றம் அல்லது பொதுக்கூடம் 61 மீட்டர் நீளமும் 23.4 மீட்டர் அகலமும் கொண்ட மிகப் பிரம்மாண்டமான அமைப்பைக் கொண்டது. நகரமன்ற கட்டடச்சுவரின் அடர்த்தி 1.2 மீட்டரிலிருந்து 1.5 மீட்டர் வரை அமைந்திருந்தது. அது நிர்வாகச் சம்பந்தமான கட்டடமாகவும், மக்கள் கூடும் இடமாகவும், பிரார்த்தனை கூடமாகவும், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கமாகவும் இருந்திருக்கக்கூடும்.

தாழ்ந்த பகுதியில் அமைந்த நகரம் :

அது கோட்டைப் பகுதியை ஒட்டிய தாழ்வானப் பகுதி நகரப்பகுதியாகும். அங்கு சிறு வியாபாரிகளும், கைவினைக் கலைஞர்களும் வசித்தனர். அந்த நகரம் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டு அகல சாலை களைக் கொண்டதாகக் காணப்பட்டது. சாலைகள் கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த சாலைகள் ஒன்றையொன்று செங்கோண நிலைகளில் வெட்டும் வகையில் அமைந்திருந்தன. எனவேதான் எஞ்சிய செங்கற்களின் வரிசையை அங்கு நம்மால் காண முடிகிறது. அங்கு செயல்பட்ட கழிவுநீர் கால்வாய் திட்டம் பாராட்டிற்குரியது. தெரு விளக்குகளுக்கான வசதிகளும் இருந்தன.

வீடுகள் :

வீடுகள் ஒரிரு மாடிகள் கொண்டதாக இருந்தன. எல்லா வீடுகளும் ஒரே மாதிரியான சுட்ட செங்கல் கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீடும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள், ஒரு குளியலறை, ஒரு சமையலறை மற்றும் வீட்டுடன் சேர்ந்த முற்றம், வெளியிடம் ஆகியன கொண்டதாக இருந்தன. வீடுகளில் கதவுகளும், சிறிய ஜன்னல்களும் காணப்பட்டன. சமையல் அறைக்கு வெகு அருகில் தானியங்கள் அரைக்கும் கற்களாலான அரவைக் கற்கள் (Grinding stones) காணப்பட்டன.

கழிவுநீர் கால்வாய் திட்டம் :

சமையலறையிலிருந்தும் குளியல் அறையிலிருந்தும் வெளியேறிய கழிவுநீர் வெளியே செல்ல வழி செய்யப்பட்டிருந்தது. தெருக்களின் ஒரங்களில் கழிவுநீர்கால்வாய்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. கழிவுநீர் ஓட்டம் சரிவர அமையுமாறு பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. அப்பாதைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டன.

மக்களின் தொழில் :

சிந்து சமவெளி மக்களில் விவசாயிகள், நெசவாளர்கள், மண்பானைகள் செய்வோர், உலோக வேலையில் வணிகர் என பலதரப்பட்ட மக்கள் காணப்பட்டனர். விவசாயம் மக்களின் முக்கியத் தொழில் ஆகும். வளமான நிலங்களில் விவசாயிகள் இருமுறை விவசாயம் செய்தனர். நெற்பயிர் மற்றும் பருத்தி ஆகியவற்றை முதன்முதலில் விளைவித்தவர்கள் சிந்து சமவெளி மக்களேயாவர். நீர்பாசன முறையின் பல வகைகளும் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. கரும்பு பயிரிடுதல் பற்றி அவர்களுக்கு தெரியாது. அவர்கள் கலப்பையையும், அரிவாளையும் உபயோகித்தனர். மட்பானை செய்தல் பெயர் பெற்ற தொழிலாகத் திகழ்ந்தது. குயவர்கள் பானை செய்யும் சக்கரத்தை உபயோகிப் பதில் மிகத்திறமை பெற்றவர்களாக இருந்தனர்.

கால்நடை வளர்ப்பு : சிந்துசமவெளி மக்கள் காளை, எருது, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி, கழுதை, ஒட்டகம் ஆகிய வற்றை பழக்கி வைத்திருந்தனர்.

நூல் நூற்றலும் நெசவுத் தொழிலும் :

சிந்து சமவெளி மக்கள் நூல்நூற்பதிலும் ஆடைகள் நெய்வதிலும் திறமை பெற்றிருந்தனர். வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளின் உரோமத்திலிருந்து கம்பள ஆடைகளைத் தயார் செய்தனர்.

பொம்மை செய்தல் மற்றும் சிற்ப வேலை : டெர கோட்டா எனப்படும் சுடு மட்பாண்டத் தொழில் மக்களின் முக்கியத் தொழிலாகத் திகழ்ந்தது. பொம்மைகள், மிருகங்களின் சிறு உருவச் சிலைகள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் எருதுகளால் இழுக்கப்படும் ஒட்டுனருடன் கூடிய பொம்மை வண்டி குறிப்பிடத்தக்கது. மக்கள் வணங்கிய திமில்காளை, புறா போன்றவைகளின் உருவம் பொறித்த சில சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பெண் கடவுளர்களின் உருவங்கள் சமய நோக்கிற்கு பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

சின்னங்கள் : இங்கு 2000க்கும் மேற்பட்ட சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் மிருகங்களின் உருவங்களும் சித்திர எழுத்துக்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. சுடுமண் சுதையினால் வேகவைக்கப்பட்ட இந்தச் சின்னங்கள் வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும். மேலும் சிந்துசமவெளி மக்களின் வாழ்க்கை முறை, சமயம், தொழில், பழக்கவழக்கம் மற்றும் வாணிபம் பற்றிய விவரங்களை அறிய இவை உதவுகின்றன.

கட்டடத் தொழில் :

ஏராளமான மக்கள் கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். செங்கற்கள் உற்பத்தியும் முக்கியதொரு தொழிலாக இருந்தது. செங்கற்கள் அனைத்துமே ஏறக்குறைய ஒரே அளவில் இருந்தன.

கலைகள் மற்றும் கைவினை

பல்வேறு கைத்தொழில்களில் தேர்ச்சிபெற்ற கைவினைஞர்கள் இக்காலத்தில் வாழ்ந்தனர். பொற்கொல்லர்கள், செங்கல் செய்வோர், கல் அறுப்போர், நெசவுத் தொழிலாளர், படகு கட்டுவோர், சுடுமண் கலைஞர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். வெண்கலம் மற்றும் செம்பாலான பாத்திரங்கள் ஹரப்பா பண்பாட்டு உலோகத் தொழிலுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தங்கம் மற்றும் வெள்ளியாலான ஆபரணங்கள் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மட்பாண்டங்கள் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மட்பாண்டங்கள் பெரும்பாலும் சாதாரணமாக இருந்தன. ஒருசில இடங்களில் சிகப்பு மற்றும் கருப்பு வண்ணம்பூசிய மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன. அரிய வகை கற்களாலான மணிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.  வெண்கலத்திலான நாட்டிய மங்கையின் சிலை   மற்றும் தாடியுடன் கூடிய மனிதன் சிலை ஆகியவை மொகஞ்சதரோவில் காணப்பட்டது.

வாணிபம் :

சிந்து சமவெளி மக்கள் உள்நாட்டு, வெளி நாட்டு வாணிகங்களிலும் ஈடுபட்டிருந்தனர். மெசபட்டோமியோவின் சின்னங்கள் பல சிந்து சமவெளி நகரங்களிலும், சிந்து சமவெளிச் சின்னங்கள் பல மெசபட்டோமியா பகுதியிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. குஜராத்தில் உள்ள லோத்தல் என்ற இடத்தில் துறைமுகம் ஒன்று இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி நடந்திருக்கக்கூடும். வியாபாரிகள் செல்வச் செழிப்பான வாழ்க் கையை நடத்தினர். பொருட்களை அளக்க அளவுகோலைப் பயன்படுத்தினர். மேலும் எடைக் கற்களும், அளவுகளும் உபயோகத்தில் இருந்தன. அவர்கள் 16ன் மடங்குகளை அளவுகளாக பயன்படுத்தினர்.

அரசியல் அமைப்பு:

செல்வமுடைய வணிகர்களும், சமயத் தலைவர்களும் நகர நிர்வாகத்தை மேற்கொண்டனர். அங்கு உள்ளாட்சி அமைப்பும் காணப்பட்டது. அவை நகரத்தின் சுகாதார வசதிகளில் கவனம் செலுத்தின. அவை வணிகத்தினையும் ஒழுங்குபடுத்தின. நகர நிர்வாகம் வரியை தானியமாக வசூலித்தது. நகராட்சி நகரின் சட்டம், ஒழுங்கினைப் பராமரித்தது.

சமூக வாழ்க்கை :

சமுதாயம் மூன்று வித சமூக குழுக்களைக் கொண்டிருந்தது. முதல் குழு அல்லது ஆளும் குழுவைச் சேர்ந்தவர்கள் கோட்டைப் பகுதியில் வசித்தனர். செல்வம் மிக்க வணிகர்களும் சமயத் தலைவர்களும் அக் குழுவில் இடம் பெற்றனர். இரண்டாவது பிரிவில் சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள், கைத்தொழிலாளர்கள் இருந்தனர். மூன்றாவது வகையைச் சேர்ந்த தொழிலாளிகள் சிறு குடிசைகளில் வசித்தனர். பொதுவாகக் கூறினால் சமூக அமைப்பானது வரையறுக்கப்பட்ட கட்டுக்கோப்புடன் காணப்பட்டது.

மக்களின் வாழ்க்கை :

சிந்து சமவெளி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஒய்வுநேரம் அவர்களுக்கு நிரம்பக் கிடைத்தது. மக்களின் உணவு, பழக்கவழக்கங்கள், உடை, பொழுது போக்கு ஆகியவற்றில் பெருத்த முன்னேற்றம் காணப்பட்டது.

உணவு :

கோதுமையும், பார்லியும் முக்கிய உணவாகக் கருதப்பட்டன. அதைத் தவிர பால், மாமிசம், மீன், பழங்கள், பேரீச்சை ஆகியவற்றையும் அவர்கள் உபயோகித்தனர்.

ஆடைகளும் நகைகளும்

 இடுப்பைச் சுற்றி ஒட்டியாணம் (அரைக்கச்சை) போன்ற அமைப்புடன் கூடிய குட்டைப் பாவாடைகளை பெண்களும், தைக்கப்படாத, நீண்ட, தளர்ச்சியான ஆடைகளை ஆண்களும் அணிந்தனர். பெண்கள் கழுத்து ஆரம், வளையல், கடகம் எனப்படும் கைக்காப்பு (bracelets), காதணி, இடுப்புக் கச்சை போன்றவற்றை அணிந்து கொண்டனர். இவைகள் தங்கம், வெள்ளி, எலும்பு, கற்கள், கிளிஞ்சல்கள் மற்றும் தந்தத்தினால் செய்யப்பட்டிருந்தன.

ஆண்களும் கையைச் சுற்றி அணியும் காப்பு வளையங்களை (Armlets) அணிந்தனர். செல்வந்தர்கள் தங்கம், வெள்ளி, தந்த ஆபரணங் களையும் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் கிளிஞ்சல், தாமிரம், வெள்ளி ஆகியவற்றால் செய்த ஆபரணங்களையும் உப யோகித்தனர். பெண்கள் சீப்பினால் தங்கள் கூந்தலை சீவும் பழக்கம் இருந்தது.

சிந்து எழுத்து முறை :

இங்கு கிடைத்துள்ள சின்னங்களின் மீது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை ஒரு சில வார்த்தைகளே. படங்களைக் கொண்ட எழுத்து முறை வளர்ச்சி யுற்றிருந்தது. மொத்தம் சுமார் 250 முதல் 400 வரை இத்தகைய பட எழுத்துக்கள் கொண்ட சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த எழுத்துக்களின் பொருள் இன்னமும் அறியப்பட வில்லை என்பது வியப்புக்குரிய தொன்றாகும்

சமய வாழ்க்கை : அவர்களது சமய வழிபாட்டின் சின்னமாக அரசமரம் விளங்கியது. அம்மக்கள் பசுபதி என்ற சிவனையும் பெண் கடவுளையும் வணங்கினர். பெண் கடவுள் உயிரோட்டத்தைப் பிரதி பலித்தது. அங்கு காணப்படும் புதை பொருட்களில் கோயில் போன்ற அமைப்பு கொண்ட கட்டடம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. சிந்து சமவெளி பசுபதி சின்னம் மக்கள் மறுபிறவியில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வருகின்றது. ஏனெனில் அவர்கள் இறந்தவர்களை புதைத்த போது அச்சடலங்களுடன் உணவு, அணிகலன்களையும் சேர்த்து புதைத்தனர். மேலும் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்திய பொருட்களையும் மிகப்பெரிய தாழிகளிலிட்டுப் புதைத்தனர்.

ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சி ;

ஹரப்பா நாகரிகம் ஏறக்குறைய 500 ஆண்டுகள் சிறப்புற்றிருந்தது. அந்த காலத்தில் மக்கள் ஒரே விதமான வீடுகளில் வசித்தனர். உணவு மற்றும் அவர்கள் உபயோகித்த கருவிகளிலும் மாற்றம் ஏதும் இல்லை. மொகஞ்சதாரோ நகரம் பலமுறை அழிவுக்குள்ளாகி மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. அந்த அழிவிற்குச் சரியான காரணங்கள் இன்னமும் நமக்குக் கிடைக்கவில்லை. இயற்கைச் சீற்றங்களான பூகம்பம், வெள்ளம் போன்றவற்றாலோ அல்லது சிந்துநதியின் திசை மாற்றத்தாலோ அந்த அழிவுகள் ஏற்பட்டிருக்கலாம். அந்நகரங்கள் ஆரியரின் படையெடுப்பினாலும் அழிந்தன. காடுகள் அழிக்கப்பட்டதும் அந்த நாகரிகம் வீழ்ச்சியுற மற்றொரு காரணம் எனலாம்.

 

Download Prehistoric – Indus Valley Civilization