TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – டிசம்பர் 5 , 6 நடப்பு நிகழ்வுகள்

                         டிசம்பர் 5 , 6 நடப்பு நிகழ்வுகள்

  • தமிழக வேளாண் ஆராய்ச்சி மையங்களை இடம் மாற்றக் கூடாது. கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள மத்திய கடல் நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் ஆகிய நிறுவனங்களை இடமாற்றம் செய்யக்கூடாது என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

  • வரிச்சலுகை கோரி சர்வதேச நீதிமன்றத்தை நாடிய நிஸான் கார் நிறுவனத்துக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
  • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி.கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள இரண்டு உலைகள் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் பெற்றவை. வி.வி.இ.ஆர். வகையிலான இந்த அணு உலை, அழுத்த நீர் அணு உலைப் பிரிவைச் சேர்ந்தவை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆக்சைடு எரிபொருளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • ராஜிவ் காந்தி மானஸ் சேவா விருதினை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் செழியன் ராமு குடியரசுத்தலைவரிடம் இருந்து விருதினைப் பெற்றார்.
  • நகர்ப்புற வாழ்வாதார திட்டமான – தீனதயாள் அந்தியோஜனா திட்டத்தினை செயல்படுத்துவதில் தமிழ் நாடு 14 வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் கேராளவில் வயனாடு மாவட்டத்தில் உள்ள பனாசுரா சாகர் அனையில் 500 கிலோவாட் உற்பத்தி திறனுடன் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
  • உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் முத்தலாக் முறையை பின்பற்றுகிறவர்களை கட்டுப்படுத்த இது தொடர்பாக சட்டம் அவசியம் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சையது கயோருல் ஹசன் ரிஸ்வி கூறியுள்ளார்.
  • உலகிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக தகவல் தொழில்னுட்ப மையம் அமைக்கப்படும் என தெலுங்கான அரசு அறிவித்துள்ளது.
  • இந்தியாவிலேயே முதல்முறையாக 12வயதுக்கு குறைந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை மத்திய பிரதேச அரசு கொண்டுவந்துள்ளது.
  • இந்தியப் பெண் தாரா தற்போது, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் பொருளாதார ஆலோசகர்கள் சபையில் இணைந்துள்ளார்.
  • சூரிய சக்தி கூட்டமைப்பு சர்வதேச ஒப்பந்தம் சார்ந்த உலக அரசாங்களுக்குகிடையேயான சர்வதேச ஒப்பந்தமாக டிசம்பர் 6 முதல் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.

கூடுதல் தகவல்கள்

  •  சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு என்பது உலகில் கடக மற்றும் மகரரேகை பகுதிகளுக்கிடையே சூரிய ஒளி அதிகம் கிடைக்கக்கூடிய நாடுகளை கொண்ட ஒரு சர்வதேச கூட்டமைப்பு இந்த நாடுகள் சூரிய சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது என்பது இதன் நோக்கமாகும்
  • பாரிஸ் பருவ நிலை மானாட்டில் இந்தியாவால் முன் மொழியப்பட்ட திட்டமாகும்.
  • சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் தலைமையம் இந்தியாவில் அமைந்துள்ளது
  • இதுவரை 46 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது . 19 நாடுகள் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது
  • இக்கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இது பற்றி கலந்துரையாட தகவல்களை பரிமாற Digital Infopedia எனும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் வெளினாட்டு வர்த்தகக் கொள்கை 2015-20ன் இடைகால மறுஆய்வு வெளியிடப்பட்டுள்ளது
  • 6வது சர்வதேச சுற்றுலாச் சந்தை அசாம் தலைனகர் கவுஹாத்தியில் துவங்குகிறது.
  • இந்தி பட உலகின் பழம்பெரும் நடிகர் சசி கபூர் காலமானார். சினிமா துறையில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதினை 2015 ஆம் ஆண்டு இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எமர்சன் நங்கக்வா தலைமையிலான புதிய அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்றது

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!