நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2, 3
v கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்றார் கூடங்குளம் அணு மின்திட்ட வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர்.
v தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் 36.85 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது. அதிக அளவு நிலக்கரி, உரம், தாமிரத் தாது, சரக்குப் பெட்டகங்கள், சுண்ணாம்புக் கல், திரவ அம்மோனியா, பெட்ரோலிய பொருள்களான நாப்தா, சமையல் எரிவாயு, இரும்புப் பொருள்கள், உப்பு, பருப்பு வகைகள், கோதுமை, மக்காசோளம் போன்ற சரக்குகளை அதிக அளவில் இறக்குமதி செய்ததால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானப் பொருள்கள், சரக்குப் பெட்டக சரக்குகள், திரவ காஸ்டிக் சோடா, இயந்திரங்கள், இரும்புப் பொருள்கள், சாம்பல், இலுமனைட் மணல், கார்னெட் மணல், ஜிப்சம் மற்றும் சிமென்ட் போன்ற பொருள்களை மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்ததாலும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானப் பொருள்கள், சரக்குப் பெட்டக சரக்குகள், திரவ காஸ்டிக் சோடா, இயந்திரங்கள், இரும்புப் பொருள்கள், சாம்பல், இலுமனைட் மணல், கார்னெட் மணல், ஜிப்சம் மற்றும் சிமென்ட் போன்ற பொருள்களை மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்ததாலும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
v தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 7 போர்க் கப்பல்கள் திடீரென வருகை புரிந்தன. ஐ.என்.எஸ். சக்தி, ஐ.என்.எஸ். சத்புரா, ஐ.என்.எஸ். ஷயாத்ரி, ஐ.என்.எஸ். கோரா, ஐ.என்.எஸ். குதார், ஐ.என்.எஸ். கட்மட் மற்றும் ஐ.என்.எஸ். கான்ஜார் ஐ.என்.எஸ்.
v பொருளாதார சிக்கனத்தை கருத்தில்கொண்டு, ஒரு கிலோ எடையில் “பிக்கோ‘ செயற்கை கோள்களை உருவாக்குவதற்கு பொறியியல் துறை மாணவர்களை இஸ்ரோ ஊக்குவித்து வருவதாக விஞ்ஞானி ஜி. ஸ்ரீவித்யா தெரிவித்தார்.2019இல் சந்திராயன்-2 செயற்கைகோளை செலுத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. காங்கோசேட்-3 என்ற செயற்கைகோள் 2018 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பூமியிலிருந்து 450 கி.மீ. உயரத்தில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைகோள் மூலம், 25 செ.மீட்டர் அளவில் உள்ள பொருள்களையும் தெளிவாகப் படம் பிடிக்க முடியும். மண் வளம், வேளாண்மை, நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு, இந்த செயற்கைகோள் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
v தேசிய பஞ்சாயத்து தினத்தை வரும் 24ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
v மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் கோயில்களுக்குள் செல்வது பெண்களின் அடிப்படை உரிமை என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
vசண்டீகர் நகரில் மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்வது வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டது. இதனால், மண்ணெண்ணெய் பயன்பாடில்லாத முதல் நகரமாக சண்டீகர் அறிவிக்கப்பட்டுள்ளது.
v உத்தரகண்ட் மாநிலத்தின் நிகழ் நிதியாண்டுக்கான செலவினங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
v இந்திய ரயில் போக்குவரத்து வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில், முதல் முறையாக நாட்டிலேயே அதிக வேகத்தில் செல்லும் “கதிமான்‘ ரயிலின் சேவை வரும் 5ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
v வியத்நாம் அதிபராக அந்த நாட்டின் சர்ச்சைக்குரிய காவல்துறைத் தலைவரான டிரான் டை குவாங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
v “அரசியல் ஸ்திரத் தன்மையே இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம்‘ என்று சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் வாழும் இந்திய சமுதாயத்தினரிடையே பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, ரியாத் ஆளுநரான இளவரசர் ஃபைசல் பின் பந்தர் பின் அப்துல்லஜீஸýம், அந்நாட்டு உயர் அதிகாரிகளும் வரவேற்றனர்.
v நைஜீரியா நாட்டு அதிபரை தேர்வு செய்ய கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் அதிபரான மஹமடோ ஐசோபோ மீண்டும் வெற்றி பெற்றார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அந்நாட்டின் அதிபராக நேற்று அவர் பதவி ஏற்றார்.