நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01 2016-குருப் 2 மெயின் வினா

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 01 2016-குருப் 2 மெயின் வினா
v தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா, சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கட்ராமன் ஆணையம் தாக்கல் செய்தது. இந்தப் பள்ளிகளில் 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், 93 குழந்தைகள் உயிரிழந்தனர். 16 குழந்தைகள் தீ காயம் அடைந்தனர். முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் 2014-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
v பிஹாரில் பகுதி அளவிலான மதுவிலக்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
v பயங்கரவாதத்தை தடுப்பதில் ஐ.நா.சபை தோல்வியடைந்து வருகிறது என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை ஒடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஐ.நா. தனது முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். பெல்ஜியம் பயணத்தை முடித்து கொண்டு, அணுசக்தி பாதுகாப்பு குறித்த உச்சி நாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார். அதைத்தொடர்ந்து, ஈர்ப்பலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வசதியாக, இந்தியாவில் ஈர்ப்பலைகள் கூராய்வு மையத்தை (லிகோ) நிறுவுவது தொடர்பாக, அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மோடி மற்றும் “லிகோவிஞ்ஞானிகள் முன்னிலையில், வாஷிங்டனில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய அணுசக்தித் துறையின் செயலர் சேகர் பாசு, அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பைச் சேர்ந்த பிரான்ஸ் கோர்டுவா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வரும் 2023ஆம் ஆண்டில், இந்த ஆய்வு மையம் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பெல்ஜியம் உதவியுடன் இந்தியாவின் ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி உத்தரகாண்ட் மாநிலம், நைனிடால் அருகே நிறுவப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை (Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES) பிரதமர் மோடியும், பெல்ஜியம் பிரதமர் மிச்சேலும் இணைந்து ரிமோட்மூலம் இயக்கி தொடங்கி வைத்தனர்.

v யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரங்கள் 17 தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட உள்ளன.அண்ணாநகர் ,வேலூர் கிருஷ்ணகிரி, சேலம்-வடக்கு, ஈரோடு-மேற்கு , திருப்பூர்-வடக்கு , கோவை-வடக்கு, திண்டுக்கல் , திருச்சி- மேற்கு , கடலூர் , தஞ்சாவூர் , காஞ்சீபுரம் , விழுப்புரம் , மதுரை கிழக்கு , தூத்துக்குடி , நெல்லை , கன்னியாகுமரி  வாக்குச் சாவடிகள் என மொத்தம் 17 தொகுதிகளில் உள்ள 4,795 வாக்குச்சாவடிகளில், 5,994 இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளன.
v சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் பணியில் இருந்து வியாழக்கிழமை ஓய்வு பெற்றார்.
v ஆயுஷ் சுகாதார திட்டத்திற்கு ஆந்திர பிரதேசம், குஜராஜ் உள்ளிட்ட 6 மாநிலங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளதாக மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் யஸ்சோ நாயக் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்தவை. ஆயுர்வேதா, யுனானி, சித்தா இந்த எல்லாவற்றின் சிகிச்சை முறையிலும் யோகா பொதுவாக சேர்ந்தவைதான்.
v வர்த்தகப் பயன்பாடு கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.
v மியான்மரில் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்காக சிறப்பு “ஆலோசகர்பதவியை உருவாக்குவற்கான முயற்சிகளை அந்தக் கட்சி எம்.பி.க்கள் தொடங்கியுள்ளனர். அவரது அறவழிப் போராட்டத்துக்காக, 1991-ஆம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
v வியட்நாம் நாடாளுமன்றத்துக்கு முதல் பெண் சபாநாயகராக நூயென் தி கிம் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
v ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தாபா தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

WRITE THE APPLICATIONS OF NANO TECHNOLOGY IN MEDICINCE?-8 மார்க்



Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!