TNPSC CURRENT AFFAIRS IN TAMIL | NOVEMBER 3,4

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 3 மற்றும் 4

 

  • 63 ஆவது காமன்வெல்த் பாரளமன்ற மானாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் பங்களாதேஷ் சென்றுள்ளார்
  • ஒவ்வொரு அனுமதியை பெறுவதற்கும் கால நிர்ணயம் செய்வதன் மூலம் ஒற்றைச் சாளர முறையினை வலுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு, சமீபத்தில் அவசர சட்டம் மூலமாக தமிழ்நாடு வணிக எளிதாக்கும் அவசர சட்டம் / விதிகள், 2017 ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது.
  • 53-ஆவது ஜான பீட விருதுக்கு பிரபல ஹிந்தி எழுத்தாளர் கிருஷ்ணா சோப்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கூடுதல் தகவல்கள்

 

  • ஜானபீட விருது 1961 ஆம் ஆண்டு முதல் 8 ஆவது அட்டவனை மற்றும் ஆங்கில இலக்கியத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது
  • இவ்விருதை பாரதீய ஜானபீட எனும் அமைப்பு வழங்கி வருகிறது.
  • இவ்விருதை தமிழ் நாட்டில் இருந்து அகிலன் 1975 ஆம் ஆண்டும் , 2002 ஆம் ஆண்டும் ஜெயகாந்தனும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 21 வது உலக மனநல சுகாதார மானாடு டெல்லியில் தொடங்கியது.
  • நிவேஷ் பந்து எனும் தளம் உணவு தொடர்பான அனைத்து தகவல்கள், முதலீடு கொள்கைகள் உணவுத்துறை தொடர்பான திட்டங்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
  • டெல்லி ஆளுனரின் அதிகாரம் வரம்புக்குட்பட்டது. என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்கள்

 

  • டெல்லி மத்திய அரசின் கீழ் இருக்கும் சட்டமன்றத்தை கொண்ட யூனியன் பிரதேசம் ஆகும்
  • அரசியல் அமைப்பு சட்டம், 239ஏஏ பிரிவின் படி டெல்லி யூனியன் பிரதேசம் ஆகும் , இது தான் டெல்லியின் சட்டமன்றம் மற்றும் தேசிய தலைனகர் அந்தஸ்து ஆகியவற்றை வழங்குகிறது.
  • இதன்படி மத்திய ஆட்சிப்பகுதியான டெல்லியை குடியரசுத்தலைவரின் சார்பாக ஆட்சி செய்ய துனை ஆளுனர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத்தலைவர் நியமிப்பார்.
  • டெல்லியின், நிலம் , காவல்துறை , பொது ஒழுங்கு ஆகியவை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளவை இவற்றில் மானில சட்டமன்றம் சட்டம் இயற்ற இயலாது.
  • மேலே சொன்ன மூன்று துறைகள் தவிர்த்து டெல்லி சட்டமியற்ற இயலும் ஆனால் அவை ஆளுனரின் இசைவைப் பெறவேண்டும் .
  • இது தொடர்பாக அமைச்சரவைக்கும் , ஆளுனருக்கும் முரண்பாடு இருந்தால் அந்த பிரச்சனைகள் குடியரசுத்தலைவரின் பார்வைக்கு அனுப்பவேண்டும்
  • 1992 ஆம் ஆண்டு 69 ஆவது அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லி தேசிய தலை நகர் அந்தஸ்து பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • மாணவர்களிடன் ஸ்டாம்ப் சேகரிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக தீன தயாள் ஸ்பார்ஷ் நிதியுதவித்திட்டம் துவஙக்ப்பட்டுள்ளது. SPARSH(Scholarship for Promotion of Aptitude & Research in Stamps as a Hobby)
  • மரபுசாரா எரிசக்தித் துறையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச சூரியக் கூட்டமைப்பில் (ஐஎஸ்ஏ) சர்வதேச தொழில் நிறுவனங்களும், வளர்ச்சி வங்கிகளும் இணைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அழைப்பு விடுத்துள்ளார்.

கூடுதல் தகவல்கள்

 

  • 121 நாடுகள் கொண்ட குழுதான் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு (ஐஎஸ்ஏ). இதன் தலைமையகம் இந்தியாவில் உள்ளது.
  • சூரிய சக்தி கூட்டமைப்பு நாடுகள் எனப்படுபவை , கடக ரேகை மற்றும் மகர ரேகை ஆகிய பகுதிகளுக்கிடையே சூரிய சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்
  • இது 2015 ஆம் ஆண்டு பாரிஸ் பருவ நிலை மாற்றத்தின் போது அறிவிக்கப்பட்டது. உலக வங்கி இதற்கு நிதியுதவி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக கென்னத் ஜஸ்டரை நியமிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையேயான 14 நாள் கூட்டு ராணுவப் பயிற்சி, “பிரபல் தோஸ்திக்-2017” ஹிமாசலப் பிரதேசத்தில்
  • தொடங்கியது. நான்காவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் கேரளாவில் நடைபெறவுள்ளது.இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

 

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!