TNPSC GROUP I & II PRELIMS AND MAINS ADMISSION DETAILS

ADMISSION OPEN

 TNPSC GROUP I & II PRELIMS & MAINS

  • Admission closes on March 2 Week, 2018

  • For every class batch only 30 students will be admitted

  • For Online only 50 will be admitted

  • For Mains Notes will be provided in Tamil & English Prior to the Test

  • For Prelims notes will be provided for limited topics

  • All Classes includes if you join classes no need to pay separately for tests

  • All classes will be handed bilingual

PROGRAMS OFFERED

COURSE

CLASS COACHING FEE

ONLINE CLASS FEE

DURATION

GROUP I PRELIMS

15,000

10,000

UPTO EXAM

GROUP I & PRELIMS & MAINS

35000

25000

UPTO EXAM

GROUP I MAINS TEST ALONE

20,000

18,000

UPTO EXAM

MAINS POSTAL TEST

—–

15000

UPTO EXAM

GROUP 1 TEST BATCH  PRELIMS

3800

4500 ( POSTAL)

UPTO EXAM

GROUP II PRELIMS

10,000

7500

UPTO EXAM

GROUP II PRELIMS & MAINS

18000

15000

UPTO EXAM

GROUP II TEST BATCH  PRELIMS

2500

2500© 3000 (POSTAL)

UPTO EXAM

GROUP II MAINS   CLASS WITH TEST

16000

10000

UPTO EXAM

GROUP II MAINS TEST ALONE

13000

8000

UPTO EXAM

Class Timings Saturday and Sunday ( 10-5)

HOW TO JOIN CLASS

  1. Can join directly in institute

  2. Fees can be paid online for account details contact 9952521550

  3. Once fee paid send copy of receipt to admniyachamy@gmail.com or 7418521550 whatsapp

  4. For test batches of preliminary and group ii mains no installment.

Online Class Details

  1. Once you joined you will be provide user id and password. You can watch the Classes live and at the same will be available in recorded.

இனையவகுப்பில் இனைந்த உடன் உங்களுக்கு பிரத்யேக பயனாளர் குறியீடு மட்டும் கடவுச் சொல் வழங்கப்படும். நீங்கள் இணைய வகுப்பினை நேரலையாகவோ மற்றும் பழைய வகுப்புகளையும் தேர்வு முடியும் வரையில் பார்க்க இயலும்.

  1. For Postal Mains test batches the fee including, evaluation, answer sheets, and courier charges, material. அஞ்சல் வழிப் பயிற்சியில் உங்கள் கட்டணமானது, விடைத்தாள் , அஞ்சல் செல்வு, பாடக் குறிப்புகள் , மதிப்பீடு அனைத்தையும் உள்ளடக்கியது.

For Any Assistance Call 9952521550

IYACHAMY ACADEMY

NO 172, GROUND FLOOR, (OPPOSITE TO ANNACHI KADAI), THIRUGNANASAMBANDAR STREET,

TIRUVALLEESWARAR NAGAR, THIRUMANGALAM

ANNA NAGAR WEST, CHENNAI – 40 PH: 7418521550, 9952521550, 044-48601550

 

 

TNPSC GROUP I & II PRELIMS CLASSES SCHEDULE | IYACHAMY ACADEMY

TNPSC GROUP I & II PRELIMINARY CLASSES DETAILS 2018

 CLASSROOM COACHING AND ONLINE COACHING 

DATE

TOPICS TO BE COVERED

11/3/18

Morning : India’s location   , Vedic period, Buddhism & Jainism  , Mahajanapada

Afternoon: Main Concepts of life science‐The cell‐basic unit of life‐Classification of living organism

18/3/18

Morning: Highest Common Factor (HCF)‐Lowest Common Multiple (LCM)

Afternoon: Nutrition and dietetics‐Respiration‐Excretion of metabolic waste‐Bio‐ communication.

25/3/18

Morning: Mauryan Empire, Gupta Empire and Culture related till Gupta Period

Afternoon : ‐ Blood and blood circulation‐Endocrine system‐

1/4/18

Morning: Simplification – Percentage-Ratio and Proportion

Afternoon : Reproductive system‐ Genetics the science of heredity

8/4/18

Morning : Entire Medieval India

Afternoon : Environment, ecology, health and hygiene, Bio‐ diversity and its conservation

15/4/18

Morning: ‐Simple interest‐Compound interest

Afternoon : Human diseases, prevention and remedies‐ Communicable diseases and non‐ communicable diseases‐

22/4/18

Morning : Area‐Volume‐Time and Work

Afternoon: ‐Alcoholism and drug abuse‐Animals, plants and human life.

29/4/18

Morning : Nature of Indian economy ‐ Five‐year plan models‐an assessment ‐ Land reforms & agriculture

Afternoon : Basic Law and its Application -Inventions and discoveries ‐ National scientific laboratories ‐ Science glossary

Note: this schedule is temporary and subject to modify 

Regards

Iyachamy Academy, Chennai

தேர்வு நோக்கில்மத்திய பட்ஜெட் 2018 | IYACHAMY ACADEMY

மத்திய பட்ஜெட் 2018 -19 மற்றும் பட்ஜெட் தொடர்பானவை தேர்வு நோக்கில்

CLICK TO DOWNLOAD AS PDF தேர்வு நோக்கில் மத்திய பட்ஜெட்

பட்ஜெட் என்றால் என்ன?

ஒரு ஆச்சரியமான தகவல், இந்திய அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே கிடையாது. அரசின் ஆண்டு நிதி அறிக்கை என்ற பதமே உள்ளது. இதற்கு அரசின் ஆண்டு வரவு – செலவுக் கணக்கு என்று அர்த்தம். அதனால்தான் பொதுவாக, இதனை பட்ஜெட் என்று அழைக்கிறோம். அரசியல் சட்டப் பிரிவு 112ன்படி, அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு நிதி அறிக்கையை நாடாளுமன்றம் (அ) சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய குடியரசுத்தலைவர்/ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இந்த உரையில் அரசின் முக்கிய வருவாய் சேர்க்கும் வழிகள், செலவுகள் போன்ற அம்சங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைப்பார். அதேநேரத்தில், வருவாய் பெறும் வழிகள், செலவுக்கான விரிவான கணக்குகள் எல்லாம் தனித் தனி அறிக்கைகளாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.

இந்த அறிக்கைகளை எல்லாம் விவாதத்துக்கு ஏற்றுக்கொண்டதாக சட்டமன்றம் குரல் வாக்குமூலம் அறிவிக்கும். இப்படிச் செய்வதாலேயே பட்ஜெட் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அர்த்தமாகாது. வரி வருவாய் வழிகளையும், செலவு செய்யும் வகைகளையும் தனித்தனியாக விவாதித்து, அதற்கான சட்டங்களைச் சட்டமன்றம் ஏற்படுத்தும். அச்சட்டங்களை நடைமுறைப்படுத்த ஆளுநர் / குடியரசுத் தலைவர் இசைவு வழங்கிய பின்னரே, பட்ஜெட் நடைமுறைக்கு வரும்.

நிதிநிலை அறிக்கையின் வளர்ச்சி ( Evolution of Budget )

நிதிநிலை அறிக்கை ஒரு நாட்டினுடைய நிதியியலின் தன்மையை ஒவ்வொரு ஆண்டும் எதிரொலிக்கும் ஒரு கருவியாகும். பொருளியல் அறிஞர் வில்ட7 விஸ்கி “நிதியியலின் அரசியல்” என்ற நூலில் (The politics of the budgetary process by Aaron Wilda vsky, 1964) “ஒரு ஆண்டின் நிதி நிலை அறிக்கையினுடைய அள வையும் கூறுகளையும் மிகப் பெரிய அளவில் உறுதி செய்யும் காரணி, அதற்கு முந்தைய ஆண் டின் நிதிநிலை அறிக்கையேஆகும்” (The largest determining factor of the size and content of this year’s budget is last year’s budget) என்று துல்லியமாகக் கணித்துள்ளார். நிதிநிலை அறிக்கைகள் காலமும், பொருளாதாரச் சூழ்நிலை களும் வழங்கிய பாடத்தை ஏற்று பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ளன.

18ஆம் நூற்றாண்டின் நிதி நிலை அறிக்கை என்பது வருவாய் செலவு இனங்களில் ஆண்டு அறிவிப்பாக மட்டும் இருந்த நிலை மாறி, காலப்போக்கில் ஒரு நாட்டினுடைய வளத்தைப் பெருக்கு வதற்கும், பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும், ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற் கும், வரிவிதிப்பில் சமத்துவ நெறியைக் கடைபிடிப்பதற்கும் உரிய படிமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

21ஆம் நூற்றாண்டில் எல்லா தரப்பு மக்களும் எதிர்பார்க்கும் ஒரு ஆண்டு நிதி அறிக்கையாக, ஒரு அரசியல் பொருளாதார அமைப்பாக மலர்ந்துள்ளது. நாடுகளின் தன்மைகளுக்கு ஏற்ப நிதி நிலை அறிக்கைகள் உருவாககப் படுகின்றன. 1950இல் இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை நடை முறைப்படுத்தத் தொடங்கிய பிறகு, திட்டக்குழுவால் எதிர்ப்பார்க்கப்படும் இலக்குகளை எட்டுவதற்குத் துணை செய்யும் நிதியியல் பொருளாதார ஆவணமாக நிதிநிலை அறிக்கை திகழ்ந்தது. உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளைக் கடைபிடிக்கும் இக்காலக்கட்டத்திலும் நிதிநிலை அறிக்கையின் தன்மைகள் மாறி வந்தாலும், ஆற்ற வேண்டிய மக்கள் நலம் சார்ந்த பொறுப்புகள் பெருகி வருகின்றன.

நிதியியல் பொருளாதாரத்திலும், பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவ திலும் நடுவண் அரசும், மாநில அரசுகளும் சம பங்கினை வகிக் கின்றன. கூட்டாட்சி இயலைப் பின்பற்றுகின்ற, பெரும் மக்களாட்சி அமைப்பாக விளங்குகிற இந்தியாவில் பொது நிதியியலைச் சிறப்புற வழிநடத்துவதிலும், மக்கள் நலத் திட்டங்களை நிறை வேற்றுவதிலும் நடுவண் அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உரிமைகளும், கடமைகளும் சரிசம அளவில் உள்ளன .

சில தகவல்கள்

  • பட்ஜெட் என்பது ப்ரெஞ்சு மொழிச்சொல், பட்ஜெட் என்றால் சிறிய பை என்பது பொருள்

  • பட்ஜெட் முறை இந்தியாவில்பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1860 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.ஜேம்ஸ் வில்சன் என்ற ஆங்கிலேயர் முதன் முதலாக பட்ஜெட்டினை தாக்கல் செய்து பேசினார்.

  • சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் முதல் பட்ஜெட்டினை தமிழகத்தைச் சார்ந்த முதல் நிதி அமைச்சர் ஆர்.கே சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.

  • பாகிஸ்தானின் பிரதமராக இருந்த லியாகத் அலிகான் இடைக்கால அரசில் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தார்.

  • பட்ஜெட் என்பது அரசின் வளங்களை எவ்வாறு மக்களுக்கு பிரித்தளிப்பது என்பதை அடிப்படையாக கொண்டது. ஆண்டுதோறும் பட்ஜெட்டினை குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன் இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 112ன் படி பாராளமன்றத்தில் தாக்கல் செய்யப்ட்டு பாரளமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டும்.

  • இந்தியாவிற்கான நிதி ஆண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 ஆம் தேதி ஆகும்.

  • பட்ஜெட் என்பதை எதிர்பார்க்கப்பட்ட வரவு மற்றும் செலவு என்பதை உள்ளடக்கியதாகும்,அதாவது 2018 ஏப்ரல் 1 முதல் 2019 மார்ச் வரை இந்திய அரசின் வருவாய் இவ்வளவு எதிர்பார்க்கப் படுகிறது, இவ்வாறு வரக்கூடிய வருவாயை எவ்வாறு செலவு செய்வது அதாவது திட்டங்களின் மூலம் மக்களுக்கு எவ்வாறு அளிப்பது என்பதாகும்.

மத்திய நிதி நிலை அறிக்கை 2018 – 19 சிறப்பு அம்சங்கள்

  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை அரசு வழங்கி வருகிறது. சவுபாக்யா திட்டத்தின் கீழ், 4 கோடி வீடுகளுக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

  • 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலமாக 800க்கும் மேற்பட்ட மருந்துகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ஸ்டென்ட்கள் விலை கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

  • ஏழைகளுக்கு இலவச டயாலிசிஸ் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு வீட்டுவசதித்திட்டங்களில் வட்டியில் பெருமளவு நிவாரணம் அளிக்கப்படுகிறது.

  • அரசின் அனைத்து சேவைகளும், பேருந்து அல்லது ரயில் டிக்கெட்களாக இருந்தாலும் அல்லது தனிநபர் சான்றிதழாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • மூத்த குடிமக்களுக்குச் சலுகைகள்: சேமிப்பின் வட்டி வருவாய் தள்ளுபடிக்கான உச்சவரம்பு ரூ. 50 ஆயிரமாக உயர்வு .பிரதம மந்திரி வயா வந்தனா யோஜனா 2020 மார்ச் வரை நீடிப்பு. தற்போதைய முதலீட்டு உச்சவரம்பு ரூ. 15 லட்சமாக உயர்வு

  • ரூ.1லட்சத்திற்கும் அதிகமான நீண்டகால முதலீட்டு ஆதாயங்களுக்கு அட்டவணைப்படுத்தும் பயனை அனுமதிக்காமல், பத்து சதவீத வரிவிதிக்கப்படும்

  • சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் இதன் கீழ் 1.5 லட்சம் மையங்களும் சுகாதார சேவையை மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே கொண்டு வந்து அளிக்கும். இந்த மையங்கள் தொற்று இல்லாத நோய்கள் ம்ற்றும் தாய் சேய் சேவைகள் உட்பட முழுமையான சுகாதார சேவைகளை அளிக்கும். இவை அத்தியாவசிய மருந்துகளையும் பரிசோதனை சேவைகளையும் இலவசமாக அளிக்கும். இந்த முன்னோடி திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 1200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிறுவன சமூக பொறுப்புணர்வு மூலம் தனியார் துறையின் பங்களிப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களின் நன்கொடைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

  • தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்:- தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் என்பது ஆயுஷ்மான் பாரத் கீழ் வரும் இரண்டாவது முன்னோடித் திட்டமாகும். இந்த திட்டம் 10 கோடி ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஓராண்டில் (சராசரியாக 50 கோடி பயனாளிகள்) 5 லட்சம் ரூபாய் வரை இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை சிகிச்சைகளை மருத்துவமனையில் சேர்ந்து பெற அளிக்கும். இது உலகின் மிகப்பெரிய சுகாதார வசதிக்கான அரசின் உதவி அளிக்கும் திட்டமாக இருக்கும். இந்த திட்டத்தை எளிதாக நடைமுறைப்படுத்த போதிய நிதி அளிக்கப்படும்.

  • பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதிலாக டிஜிட்டல் பலகைகளை படிப்படியாக கொண்டுவர அரசுஉத்தேசித்துள்ளது. இதற்காக ரைஸ் எனப்படும் கல்வியில் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு முறை தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார். இந்த திட்டத்திற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

  • பழங்குடியினத்தை சேர்ந்த சிறார்களுக்கு அவர்களுக்கு உகந்த சூழலில் சிறந்த தரமான கல்வியை அளிக்க வேண்டியது அவசியம் என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.  இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில்2022 ஆம் ஆண்டுக்குள், ஐம்பது சதவீத பழங்குடியினர் மக்கள் தொகை அல்லது குறைந்தது இருபதாயிரம் பழங்குடியினர் வசிக்கும் ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி ஏற்படுத்தப்படும்

  • வதோதராவில் சிறப்பு ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்

  • ஏர்இண்டியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை உட்பட24மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சிமேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

  • நாட்டிலுள்ள ரயில்வே ஒன்றிணைப்பை வலுப்படுத்துவதில் அரசின் நோக்கத்தை கவனத்தில் கொண்டு 2018­19க்கான பொது நிதிநிலை அறிக்கையில் இந்த அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • 18 ஆயிரம் கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதை, 3வது மற்றும் 4வது பாதைப்பணிகள், 5 ஆயிரம் கிலோமீட்டர் பாதையை அகலமாக்குவது, பெரும்பாலும் அனைத்து பாதைகளையும் அகல ரயில் பாதைகளாக மாற்றுவது ஆகியவை இதில் அடங்கும். 2017­18ல் 4000 கிலோ மீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்படவுள்ளது

  • நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் வடிமைக்கப்படவுள்ளன.

  • இந்தியாவின் முதலாவது அதிவேக ரயில் திட்டமான மும்பை ­ அகமதாபாத் புல்லட் ரயில் போக்குவரத்துக்கு 2017 செப்டம்பர் 14 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதிவேக ரயில் திட்டங்களுக்கு தேவைப்படும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வதோதராவில் கல்வி நிறுவனம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

  • வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்வதை இன்னும் தீவிரமாக்கவும் எல்லா மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தவும் 372 வகையான வர்த்தக சீரமைப்புச் செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன . சரக்குகளின் சந்தைக்கென ஆன்லைன் வழி ஒற்றைச் சாளர முறையைச் செயல்படுத்தும் வகையில், சரக்கு போக்குவரத்து இணையதளத்தை (National Logistics Portal) மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வடிவமைக்க இருக்கிறது.

  • பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வியளிப்போம் திட்டத்தின்கீழ்,  2015 ஜனவரியில் தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டம்  வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதில், 2017 நவம்பர் வரை 1.26 கோடி கணக்குகளுக்கும் கூடுதலாக தொடங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் மொத்தம் ரூ. 19,183 கோடி சேர்ந்திருப்பதாகவும் அமைச்சர் தெவித்தார்.

  • 2018-19ஆம் நிதியாண்டுக்கான மொத்த செலவீனம் ரூ. 24.42 லட்சம் கோடிக்கும் கூடுதலாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதம் அதாவது, ரூ.6,24,276 கோடியாக இருக்கும், கடன்கள் மூலம் இந்த பற்றாக்குறை நிறைவு செய்யப்படும்.

  • பொதுத்துறை, தனியார் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் துறைகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த தொழில்துறைக்கு சாதகமான பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்திக் கொள்கை 2018ஐ அரசுகொண்டு வரும்

  • இதுவரை அறிவிப்பு செய்யப்படாத காரிப் பருவ பயிர்களுக்கு உற்பத்திச் செலவைவிட குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு அளவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக (MSP)நிர்ணயிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது

  • 2018-19 ஆம் ஆண்டில் விவசாயக் துறைக்கு வங்கிகள் மூலம் அளிக்கும் கடன் அளவை ரூ.11 லட்சம் கோரியாக உயர்த்துவதாக அரசு அறிவித்தது

  • உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் போன்ற அழுகும் தன்மை உள்ள வேளாண் பொருட்களின் விலை ஏற்ற இறக்கப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு “பசுமை பாதுகாப்புத் திட்டம்” தொடங்கப்படுவதாக 2018-19 பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார்

  • தற்பதுள்ள 22,000 ஊரக சந்தைகளை மேம்படுத்தி, கிராம வேளாண்மை சந்தைகளாக (GRAMS-களாக)தரம் உயர்த்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மீன்வளத் துறைக்கு மீன்வள மற்றும் நீர்வாழ் உயின கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் (FAIDF), கால்நடை பராமரிப்புத் துறையில் கட்டமைப்புத் தேவைகளுக்கு நிதி வசதி அளிக்க கால்நடை பராமரிப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் (AHIDF)ஆகியவை உருவாக்கப்படும்.

  • மூங்கிலை “பசுமையான தங்கம்”என்று குறிப்பிட்ட திரு ஜேட்லி, ரூ.1290 கோடியில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய மூங்கில் தொலைநோக்குத் திட்டம் தொடங்கப்படும் .

  • வரி செலுத்தும் மாத ஊதியம் பெறுபவர்களுக்கு வரிச் சலுகை அளிக்கும்விதமாக வருமானத்திலிருந்து தற்போதைய போக்குவரத்துப் படி, மருத்துவச் செலவினத்தை திரும்ப பெறுதல் ஆகியவற்றுக்கு விலக்கு அளிப்பதற்குப் பதிலாக, நிர்ணய குறைப்பாக ரூ. 40,000-த்தை குறைத்துக் கொள்ளப்படும்.

  • கிராமங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் அற்றவையாக ஆக்கவும்  கிராமவாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக இயற்கை உயிரி-வேளாண் ஆதாரங்கள் நிறைந்த கிராமம் எனப்படும் கோபர்-தன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  • சாலைகள் துறையில் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாரத்மாலா பாரியோஜனா, அதன் முதல்கட்டத்தில் ரூ. 5,35,000 கோடி மதிப்பிலான 35,000 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.

  • சிவில் விமான போக்குவரத்து துறையில், விமான நிலையங்களின் திறனை ஐந்து மடங்குக்குமேல் விரிவாக்கி, ஆண்டுக்கு பத்து கோடி விமானப் பயணங்களை கையாள்வதற்கென நவநிர்மான் என்ற திட்டம் 2018-19ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.

  • மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எனப் பெயர் மாற்றம்.

பட்ஜெட் சில சுவாரஸ்ய தகவல்கள்

  • 1947ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 87 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

  • 25மத்திய நிதி அமைச்சர்களை சுதந்திர இந்தியா கண்டுள்ளது

  • 4நிதி அமைச்சர்கள் பிரதமராகி உள்ளனர். அவர்கள், மொரார்ஜி தேசாய், சரண் சிங், விபி சிங், மற்றும் மன்மோகன் சிங்.

  • 2நிதி அமைச்சர்கள் குடியரசு தலைவராகி உள்ளனர். அவர்கள், ஆர். வெங்கட்ராமன் மற்றும் பிரணாப் முகர்ஜி.

  • ஒரே குடும்பத்தில் மூன்று பேர்

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள். 1958ம் ஆண்டு ஜவகர்லால் நேரு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிறகு அவரது மகள் இந்திரா காந்தி 1970ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய, பிறகு 1987ம் ஆண்டு ராஜீவ் காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

  • இந்தியப் பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்தி தான், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மதியத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகு 1999ம் ஆண்டு வரை பொது பட்ஜெட் என்பது பிப்ரவரி மாதம் கடைசி நாளில் மாலை 5 மணிக்குத்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

    அதன்பிறகு பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதும், வாஜ்பாயி பிரதமரானார். மத்திய நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா பொறுப்பேற்றார். அப்போதுதான் பட்ஜெட்டை முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை மாற்றப்பட்டது.

  • இந்த ஆண்டிலிருந்து பிப்ரவரி 1 ஆம் தேதியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

  • இரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இனைக்க பிபேக் தேப்ராய் குழு 2016ல் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டின் அங்கங்கள்

வருவாய் :

அரசுக்குச் சேர வேண்டிய வரி மற்றும் இதர வருவாய்கள் வருவாய் கணக்கில் சேர்க்கப் படுகிறது. அரசின் செலவுகள் இந்த வருவாயின் மூலம் சரி செய்யப்படுகிறது.

வரி வருவாய் :

மத்திய அரசு வசூலிக்கும் வரிகள் மற்றும் சுங்க வரிகள் இதில் அடங்கும்.

இதர வருவாய்கள் :

அரசின் முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டி மற்றும் ஈவுத் தொகை, சேவைகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் இதர வகைகளில் அரசுக் குக் கிடைக்கும் வருவாய் இதர வருவாய்களாகும்.

வருவாய் மூலமான செலவினங்கள் :

சாதாரணமாக அரசுத் துறைகளையும் பல்வேறு சேவைகளையும் அரசின் கடன் வைப்பு மூலமான வட்டி விகிதங்களை நிர்வகிப்பதற்கு இந்த வகையில் செலவுகள் செய்யப்படுகின்றன. இதையே வேறு வகையில் சொல்வதானால், அரசு வகையில் சொத்துக்கள் ஏதும் உருவாக்கப் படாத செலவுகள், வருவாய் மூலமான செலவுகள் எனப்படுகிறது. அனைத்து மாநில அரசுகளுக்கும் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள், மற்றும் இதர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடுகளில் வருவாய் மூலமான செலவுகளாகும். இதில் சிலவகை சொத்துக்களை உருவாக்குவதற் கும் இருக்கலாம்.

மூலதனம் வரவு செலவு திட்டம் :

மூலதன வரவுகள் மற்றும் வழங்கல்கள் இதில் அடங்கும். பொதுக்கணக்கு பரிமாற்றங்களும் இந்த வரிகளில் உள்ளன.

மூலதன வருவாய் :

சந்தைக்கடன் என அழைக்கப்படும் பொதுமக்களிடம் இருந்து கடனாக பெறப்படும் மூலதனங்கள், ரிசர்வ் வங்கியிடம் அரசு பெறும் கடன்கள், கருவூல ரசீதுகளை இதர பிரிவினருக்கு விற்பனை செய்ததன் மூலமும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறும் கடன்கள், மத்திய அரசு நிறு வனங்களுக்கு அளித்த கடன்கள் மூலமான வசூல் ஆகியவை மூலதன வருவாய் எனப்படுகிறது.

மூலதன வழங்கல்கள் :

நிலம், கட்டிடங்கள், இயந்திரங்கள், கருவிகள் மற்றும் பங்குகளில் செய்யப்படும் முதலீடுகள் ஆகியவற்றுக்காகச் செய்யப்படும் செலவுகள் மூலதனச் செலவுகள் எனப்படுகிறது. மேலும், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், தொழில் நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கும் கடன்கள் முன் பண உதவி ஆகியவை இந்த வகையில் அடங்கும்.

நிதி உதவிக்கான வேண்டுகோள் :

ஒவ்வொரு ஆண்டும் செலவினங்கள் மதிப்பீடு நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டு மக்களவையில் வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு அமைச்சகம் மற்றும் துறைக்கு ஒரு நிதி உதவி குறித்த கோரிக்கை சமர்ப்பிக்கப்படும். பெரிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ஒன்றுக்கும் மேற் பட்ட நிதி உதவி குறித்த கோரிக்கை வைக்கப்படும்.

நிதி மசோதா :

அரசின் புதிய வரிகள், தற்போதுள்ள வரி முறையில் மாற்றங்கள், நிர்ணயிக்கப் பட்ட காலக் கெடுவுக்கு அப்பால் செயல்படுத்த வேண்டிய வரி முறை ஆகியவற்றில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படுவது நிதி மசோதா.

செயல்பாட்டு வரவு செலவு திட்டம் :

அமைச்சகங்களின் செயல்பாடுகள்திட்டங்கள், நடவடிக்கைகள், ரூ. 100 கோடி அதற்கும் மேற்பட்ட மத்திய அரசு திட்டங் கள் குறித்த தனி அறிக்கைகள் ஆகிய தனிப்பட்ட அமைச்சகத்தின் வரவு செலவுத் திட்டமாகும்.

குறிப்பிட்ட திட்டத்திற்கான மசோதா :

மக்களவையின் ஒப்புதல் பெற்ற பிறகு, குறிப்பிட்ட திட்டத்திற்கான நிதியை மொத்த நிதியிலிருந்து பெறுவதற்காக நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்காக சமர்ப்பிக்கப் படுவது இந்த வகை மசோதா வாகும்.

வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறை :

வருவாய் மற்றும் மூலதனக் கணக்கு ஆகியவற்றின் மூலம் மொத்த செலவில் வருவாய் மட்டும் கழித்தால் கிடைப்பது பற்றாக்குறையாகும்.

நிதி பற்றாக்குறை :

வருவாய் மற்றும் கடனல்லாத மூலதனத்தில் கிடைக்கும் வருவாய்க்கு கடன்கள், திருப்பி செலுத்தப்படும் தொகைகள் ஆகியவற்றின் மூலமான செலவு களுக்கும் இடையே ஏற்படும் பற்றாக்குறை நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது.

முதன்மை பற்றாக்குறை :

நிதிப் பற்றாக் குறை யில் வட்டிக்கான தொகையை செலுத்திய பிறகு கிடைப்பது முதன்மை பற்றாக்குறை.

வழங்க வேண்டிய நிலுவைத் தொகை :

அந்த ஆண்டில் உலகின் பல பகுதிகளில் செய்யப்பட்ட நிதி பரிமாற்றம் மற்றும் நாட்டின் வர்த்தகம் குறித்த அறிக்கை.

மூலதன லாப வரி :

ஏற்கனவே விலை கொடுத்துப் பெறப்பட்ட சொத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் அதிகப் படியான தொகையின் மீதான வரியே மூலதன லாப வரி எனப் படுகிறது.

பணமாற்றம் :

சர்வதேச அளவில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட சொத்துக்கான வெளிநாட்டு பணத்தை வேறு ஒரு நாட்டின் பணத்துக்காக மாற்றிக் கொள்வது அல்லது சர்வதேச கையிருப் புக்காக மாற்றிக் பணமாற்றம். கொள்வது

இறக்குமதி பொருள் மீதான எதிரீட்டு வரி:

இறக்குமதி செய்யப்படும் பொருள் மீது வரி விதிக்கப்படுவதால் உள்நாட்டில் அந்த பொருளின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக இதர நாடுகளில் உள்ளதைப் போன்று முறைசாரா வர்த்தக நடைமுறைகளை உருவாக்கும்.

நேரடி வரி :

வருமானம், சொத்து மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் வியாபாரம் ஆகியவற் றுக்கு அரசு விதிக்கும் வரி.

நிதிக் கொள்கை :

வரி மற்றும் அரசு செலவினங்களையும் வரியையும் கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நிதிக் கொள்கை.

மறைமுக வரி :

பொருட்களுக்கும் சேவைகளுக்கும் அரசு வசூலிக்கும் வரி மறைமுக வரி எனப்படு கிறது.

பணக்கொள்கை

பொருளாதாரத்தில் செலவினங்களைக் கட்டுப்படுத்த பணம் வழங்கல், கடன், வட்டி விகிதம் ஆகியவற்றை ஒழுங்கு படுத்துவதற்கான பொருளாதாரக் கொள்கையே இதுவாகும்.

தேசியக் கடன் :

உள்நாட்டிலும் வெளிநாட் டிலிருந்தும் கடன் வழங்கிய வர்கள் மத்திய அரசு செலுத்த வேண்டிய கடன் தொகை.

பொதுக் கடன் :

பல் வகைக் கடன் மற்றும் தேசியக் கடனுக்கு அரசே முழுப் பொறுப்பாகும். தேசியத் தொழிற்சாலைகள், உள்ளூர் அதிகார அமைப்புகளின் கடன்களும் இதில் அடங்கும்.

கருவூல மசோதா :

அரசுக்காக குறுகிய கால கடன் பெறுவதற்கான மசோதா.

மதிப்பு கூட்டுவரி :

பொருட்கள் அல்லது சேவைகளுக்கு அதன் உற்பத்தி நிலையிலிருந்து நுகர்வு நிலை வரை வரி வசூலிக்கப்படும் வரி, விற்பனை விலைக்கும் உற்பத்தி விலைக்கும் இடையே உள்ள தொகைக்கு வரி விதிக்கப்படுவது.

ஆண்டு நிதி அறிக்கை :

ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31-ம் தேதி வரை மத்திய அரசின் வரவு கள் மற்றும் செலவுகள் குறித்த மதிப்பீடு அரசியல் சட்டம் பிரிவு 112இன்படி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது. அரசின் வரவுகள் மற்றும் செலவுகளை எடுத்துக் காட்டும் அறிக்கை. அரசின் மூன்று வகையான கணக்குகள் இதில் உள்ளன.

  1. ஒருங்கிணைக்கப்பட்ட நிதி

  2. தேவைக்கேற்ப செலவிடப் படும் நிதி

 3 பொதுக்கணக்கு

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி :

ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்ட கடன் மூலம் வசூலிக்கப்பட்ட வருவாய், கடன், அனைத்து வகையிலும் வசூலிக்கப்பட்ட வருவாய் இதிலடங்கும். அனைத்து “வகையான அரசு செலவுகளும் இதிலிருந்தே செய்யப்படும். நாடாளு ன்றத்தின் அனுமதியைப் பெறாமல் இதிலிருந்து நிதியை எடுக்க முடியாது.

தேவைக்கேற்ப படும் நிதி :

நாடாளுமன்றத்தில் அனுமதி பெறுவதற்குமுன் திடீரென ஏற்படும் நிதி ஒதுக்கீடுகள் அல்லது செலவினங்கள் ஈடுகட்ட குடியரசுத் தலைவரின் அனுமதி யுடன் இந்த நிதியிலிருந்து பணம் பெற முடியும். தற்போது, ரூ. 500 கோடி வரை இது போன்ற செலவுகளை ஈடுகட்ட நாடாளு மன்றம் அனுமதி அளித்துள்ளது.

பொதுக் கணக்கு :

சாதாரண வகையிலான வருவாய் மற்றும் செலவினங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி சார்ந்தவை, இதர சில அரசுக் கணக்கில் உள்ள வரி மாற்றங்கள், ஆகியவற்றுக்கு அரசு வங்கிகள் போல் செயல் பட்டு நிதிக் கணக்கை நிர்வகிக்கிறது. உதாரணமாக நல நிதிகள், சிறுசேமிப்பு கணக்குகள், இதர வைப்புத் தொகைகள் போன் றவை இந்த வகையைச் சார்ந் தவையாகும். இந்த வகையில் பெறப்படும் தொகை பொதுக் கணக்கில் பாதுகாப்பாக வைக்கப் படும். பொதுவாக, இந்த தொகை அரசுக்குச் சொந்தமானதல்ல. எப்போதாவது இத்தொகை திருப்பியளிக்கப்பட வேண்டிய தாகும். இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை

நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம்

நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம் கடந்த 2003ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். நிதி ஒழுங்கை நடைமுறைக்கு கொண்டு வருதல், நிதி பற்றாக்குறையை குறைத்தல், பெருநிலை பொருளாதார மேல £ண்மையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டது. நீண்ட கால நோக்கில் நாட்டின் நிதி ஸ்திரத்- தன்மையை மேம்படுத்துவது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். வெளிப்படையான நிதி மேலாண்மை அமைப்பு , கடன்களை இன்னும் சமத்துவமான முறையில் வினியோகித்தல் ஆகியவற்றையும் இச் சட்டம் வலியுறுத்துகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நிதி நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்வதற்கும் இச்சட்டம் வகை செய்கிறது.

நோக்கம்

  • நிதி பற்றாக்குறை மற்றும் வருவாய் பற்றாக்குறையை ஒவ்வொரு ஆண்டும் எந்தளவுக்கு குறைக்கலாம் என்பதை இச்சட்டத்தின் விதிகள் தெளிவாக குறிப்பிட்டுள்ளன.

  • 2004&05ம் ஆண்டில் தொடங்கி 5 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் முதலில் இச் சட்டத்தின் நோக்கமாக இருந்தது.

  • 2008&09ம் ஆண்டில் நிதி பற்றாக்குறையை 3 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்பதும் இதன் இலக்குகளில் ஒன்றாகும்.

  • அதே நேரத்தில் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலோ இந்த சட்டத்தின் விதிகளை தளர்த்திக் கொள்ள அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்தது.

  • ஒரு நிதியாண்டில் நிதி கொள்கை குறித்து 3 அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

( இச்சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு என்,கே சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது)

மாலத்தீவின் அரசியல் குழப்பம் – இந்திய மாலத்தீவு உறவுகள்

மாலத்தீவின் அரசியல் குழப்பம் – இந்திய மாலத்தீவு உறவுகள்

குழப்பத்திற்கான காரணம்

இப்போதைய அரசியல் குழப்பங்களுக்கு காரணம், மாலத்தீவின் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு. முன்னாள் அதிபர் முகமது நஷீத், ஜும்கூரி கட்சித் தலைவர் காசிம் இப்ராஹிம், அதாலத் கட்சித் தலைவர் இம்ரான் அப்துல்லா, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முகமது நஜீம் உள்ளிட்ட 12 அரசியல் குற்றவாளிகளையும் விடுவித்து கடந்த பிப்ரவரி 1-இல் மாலத்தீவின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் மீதான வழக்குகள் மாலத்தீவின் அரசியல் சாசனத்துக்கும் சர்வதேச சட்டத்துக்கும் எதிரானவை என்றும் நீதிமன்றத்தின் மீது வழக்கு விசாரணையில் அரசியல் அழுத்தம் தரப்பட்டது என்றும் தீர்ப்பு கூறியது. அதுமட்டுமல்லாமல், 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்தது. இதன் மூலம் மாலத்தீவின் நாடாளுமன்றமான மஜ்லிஸில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலம் அடைகின்றன.

இதைத் தொடர்ந்து, காவல்துறை ஆணையர் அகமது ஆரிப் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பணிவதாக அறிவித்தார். உடனடியாக அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளப் போவதாகச் சொன்னவுடன் அவரும் மாற்றப்பட்டார். விளைவு, இளைஞர்கள் பெருந்திரளாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தெருவில் இறங்கி போராடத் தொடங்கினர்.
இப்போது மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மாலத்தீவின் முக்கியத்துவம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தென்கிழக்காக சுமார் 1000 கி.மீ. தூரத்தில் அரபிக் கடலில் இருக்கும் மாலத்தீவுக்கு புவியியல் ரீதியாக மிகப்பெரிய முக்கியத்துவம் இருப்பதால்தான் உலக நாடுகள் இந்தப் பிரச்னையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன.  ஆசியாவுக்கும், ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து நடைபெறும் இந்து மகாசமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் உலக வல்லரசுகள் அனைத்துமே மாலத்தீவுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவுக்கு மிகமிக நெருக்கமான நாடாக இருந்த மாலத்தீவு, நமது ஏனைய அண்டை நாடுகளைப் போலவே சீனாவுடனான நெருக்கத்தை சமீப காலமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பதும், மாலத்தீவின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதற்கான காரணம்.

மாலத்தீவின் அரசியல் மேம்பாடு

1968-இல் இப்ராஹிம் நசீர் தலைமையில் மாலத்தீவு சுதந்திரக் குடியரசாக தன்னை அறிவித்துக் கொண்டது என்றாலும், மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலை காணப்பட்டது. மக்கள் எழுச்சியின் விளைவாக இப்ராஹிம் ஆட்சி அகற்றப்பட்டது. மமூன் அப்துல் கயூம் 1978-இல் ஆட்சிக்கு வந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகள் மாலத்தீவில் அவரது ஆட்சிதான். மூன்று முறை அவருக்கு எதிரான புரட்சிகள் நடந்தும் வெற்றி பெறவில்லை.
அப்துல் கயூமின் ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன் வைத்தவர் முகமது நஷீத். மாலத்தீவின் மண்டேலா என்று அழைக்கப்பட்ட நஷீத், 2008-இல் நடந்த அதிபர் தேர்தலில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிபர் கயூமைத் தோற்கடித்து அதிபரானார். முகமது நஷீத் 2012-இல் மிகப்பெரிய எதிர்ப்புகள் கிளம்பியதன் பின்னணியில் பதவி விலகினார். அவர் கைது செய்யப்பட்டு தீவிரவாதக் குற்றச்சாட்டுக்காக 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது அரசியல் ரீதியான குற்றச்சாட்டு என்று கூறி அவரது உடனடி விடுதலைக்கு சர்வதேச அளவில் அழுத்தம் தரப்பட்டது.
2013-இல் அதிபர் தேர்தல் நடந்தபோது, முதல் சுற்றில் முகமது நஷீத் அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும் அவர் தண்டிக்கப்பட்டவர் என்று காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தது. மறு தேர்தலில் முன்னாள் அதிபர் கயூமின் உறவினரான அப்துல்லா யமீன் அதிபரானார். நஷீதுக்கு இங்கிலாந்து அடைக்கலம் கொடுத்தது. இப்போதும்கூட, மாலத்தீவில் கணிசமான ஆதரவை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் முகமது நஷீத்.

முட்டுக்கட்டை தொடர்கிறது

அதிபர் யமீன் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல, அவருக்கு எதிராக இருக்கும் நீதிபதிகள் கைது செய்யப்பட்டு சாதகமாக இருக்கும் நீதிபதிகள் மூலம் முன்னால் தரப்பட்ட தீர்ப்பை திருத்தி எழுத முற்பட்டிருக்கிறார். சர்வதேச அளவில் ஐ.நா. சபை, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் ஆகியவை யமீன் உச்ச நீதிமன்றத்தின்  முந்தையத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

இந்தியாவின்  நிலை

இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள். மாலத்தீவு பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, இந்தியா வாளாவிருக்க முடியாது. முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோருவதுபோல, மாலத்தீவில் இந்திய ராணுவம் தலையிடுவது என்பதும் இயலாது. ஏற்கெனவே சீனாவுடன் அதிபர் அப்துல்லா யமீன் நெருக்கமாக இருக்கும் நிலையில், எந்தவித ராணுவத் தலையீடும் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை மாலத்தீவில் தோற்றுவிக்கக் கூடும்.சீனா உடனடியாகத் தலையிடாமல் இந்தியாவுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்போவதாக தெரிவித்திருப்பது, நல்ல அறிகுறி.

ஐ.நா. சபையின் மேற்பார்வையில் தேர்தலை நடத்தவும் அதை அதிபர் அப்துல்லா யமீனும், முன்னாள் அதிபர் முகமது நஷீதும் ஏற்றுக்கொள்வதுதான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். மாலத்தீவில் ஜனநாயகம் மலர்ந்தால் மட்டுமே இந்து மகாசமுத்திரத்தில் அமைதி நிலவும் என்பதை இந்தியாவும் சீனாவும் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துமே புரிந்து கொள்ள வேண்டும்.

இதேபோன்ற நிலைமை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வரவும் குறைந்தால் மாலத்தீவின் பொருளாதாரம் தகர்ந்து விடும். அது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும். ஆகவே, உடனடியாக ராஜதந்திர ரீதியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உண்டு.

இந்திய மாலத்தீவு உறவுகள்

இந்தியாவின் ஒரு பகுதியான லட்சத் தீவுகளின் தெற்கே அமைந்துள்ளது மாலத்தீவு. நம் நாடு பிரிட்டனிடமிருந்து 1947-ல் சுதந்திரம் அடைந்தது என்றால், மாலத்தீவு 1966-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போதிலிருந்தே இரு நாடுகளும் மிகுந்த நட்போடுதான் இருந்து வந்திருக்கின்றன. 1976-ல் இரு நாடுகளும் தங்களுக்கிடையே உள்ள நீர் எல்லைகளை சிக்கலின்றி பிரித்துக் கொண்டன.

1982-ல் ஒரு சலசலப்பு. மாலத்தீவு அதிபர் மமூன் அப்துல் கயூம் என்பவர் இந்தியாவுக்குச் சொந்தமான மினிக்காய் தீவு உண்மையில் மாலத்தீவுக்கு உரியது என்றார். பரபரப்பு கிளம்பியது. உடனடியாக மாலத்தீவு அரசு அறிக்கை வெளியிட்டது – ‘நாங்கள் மினிக்காய் தீவுக்கு உரிமை கோரவில்லை’ என்று.

பிறகு 1981-ல் இரு நாடுகளுக் கும் இடையே வணிக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சார்க் அமைப்பு உருவானதிலிருந்தே இந்தியாவும், மாலத்தீவும் அதன் உறுப்பினர்கள்.மாலத்தீவு இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் அருகிலுள்ள நாடு. இதையும் மனதில் கொண்டுதான் இந்தியா, மாலத்தீவு உடனான நல்லுறவைத் தொடர வேண்டியிருக்கிறது.

1988 நவம்பரில் இலங்கையிலிருந்து ஆயுதங்களுடன் 80 தமிழ் ஈழத்துக்கான மக்கள் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாலத்தீவில் ஊடுருவினார்கள்.மாலே நகரிலுள்ள விமான நிலை யத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். ஆனால் அவர்களது மற்றொரு முக்கிய நோக்கமான `அதிபர் முமூன் அப்துல் கயூமைக் கைது செய்வது’ என்பதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. காரணம் அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துவிட்டார்.

அப்போது இந்தியப் பிரதமராக இருந்தவர் ராஜீவ்காந்தி. மாலத்தீவு அரசுக்கு ஆதரவாக 1600 ராணுவ வீரர்களை அனுப்பினார். மாலத்தீவு அரசு உதவி கோரிய அரை நாளிலேயே அந்த உதவி அளிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே மாலத்தீவு அரசைப் பற்றியிருந்த ஆபத்து நீங்கியது. இலங்கை தீவிரவாதிகளை இந்திய ராணுவம் ஒடுக்கியது. ஆபரேஷன் கேக்டஸ்: மாலத்தீவு அதிபரைக் காக்க ராணுவத்தை அனுப்பிய இந்தியா

‘இன்னொரு நாட்டின் ஊடுருவல்’ என்று இந்தியாவை அப்போது பிற நாடுகள் விமர்சிக்கவில்லை. மாறாக இந்தியாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகன், “இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ இந்தியா மதிக்கத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது’’ என்றார்.“ மாலத்தீவு ஆட்சி காப்பாற்றப் பட்டது. எங்களால் ராணுவத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கு அனுப்பியிருக்க முடியாது. இந்தியாவுக்கு நன்றி’’ என்றார் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர்.

சோவியத் யூனியன், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் இந்தியாவின் உதவியைப் பெரிதும் பாராட்டின.இதற்குப் பிறகு இந்தியாவும், மாலத்தீவும் மேலும் நெருக்க மாயின. இலங்கை அரசுடன் உரசல்கள் ஏற்படும்போதெல்லாம் இந்தியாவின் ஆதரவைப் பெரிதும் நம்பி வந்தது மாலத்தீவு.

இந்திய அரசின் பொருளா தார உதவியுடன் மாலத்தீவின் கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டன. தலைநகர் மாலேவில் இந்திராகாந்தி நினைவு மருத்துவமனை எழுப்பப்பட்டது.

சர்ச்சைகள்

ஏப்ரல் 2006-ல் இந்திய கடற் படை ஒரு மிகச்சிறந்த போர்க்கப் பலை மாலத்தீவுக்குப் பரிசாக அளித்தது. மாலத்தீவு அரசின் வேண்டுகோள் காரணமாக இந்தியா அந்த நாட்டில் தனது 2 ஹெலிகாப்டர்களை நிரந்தரமாக நிறுத்தி வைத்தது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டா என்பதை இந்த ஹெலி காப்டர்கள் அவ்வப்போது கண்காணித்துக் கொண்டிருக்கும். மாலத்தீவின் முழுக் கடல் எல்லைகளையும் பாதுகாப்பதற் கான ஒரு திட்டத்தையும் இந்தியா வடிவமைத்ததுடன், செயல்படுத்துதலிலும் இறங்கியது. ஆனால் இந்த நல்லுற வில் உண்டானது ஒரு பெரிய பின்னடைவு.

மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள விமான நிலையத்தை நவீனமயமாக்க அந்நாட்டு அரசுடன்  இந்தியாவைச் சார்ந்த ஜிஎம்ஆர் குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒப்பந்தப்படி விமான நிலையத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் 25 டாலர் தொகை வசூலிக்கப்பட்டு அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஜிஎம்ஆர் குழுமத்துக்கு வந்து சேர வேண்டும். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை இப்படி வசூலாகவில்லை என்றால் அதை மாலத்தீவு அரசு ஈடுகட்ட வேண்டும்.ஆனால் மாலத்தீவு அரசு கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்பதோடு ஒப்பந்தத்தையும் குறித்த காலத்துக்கு முன்பாகவே முடிவுக்குக் கொண்டு வந்தது.

ஜிஎம்ஆர் பிரச்சினையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் உள்ள உறவு கொஞ்சம் சரிந்தது. தவிர ஆளும் கூட்டணியில் உள்ள தலைவர்கள் சிலர் இந்தியாவுக்கு எதிராக கூறிய சில விமர்சனங்கள் இந்தியாவைக் கோபம் கொள்ள வைத்தது.

இரண்டரை கோடி டாலர் அளவுக்குச் செய்வதாக இருந்த உதவிகளை இந்தியா நிறுத்திக் கொண்டது. மாலத்தீவில் தேசிய போலீஸ் அகாடமி ஒன்றை எழுப்பித் தரவும் இந்தியா ஒப்புக்கொண்டிருந்தது. அதையும் நிறுத்தி வைத்தது.

இந்தியா எவ்வாறு அனுக வேண்டும்

பக்கத்து நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவது என்பது முதலீடு செய்வதும் தேவையில்லாமல் சலுகைகள் காட்டுவதும் அல்ல என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கும் பலன் தரக்கூடிய பரஸ்பர நலன்களைப் பாதுகாப்பது, மரியாதை தருவது என்பதாகும். இந்த விஷயத்தில் சீனாவை மிஞ்ச இந்தியாவால் முடியும். இந்தியாவின் பக்கத்து நாடுகள் புவி எல்லையையும் தாண்டி வேறு வகையிலும் இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளன.

வரலாறு, மொழி, பண்பாடு, சமையல் என்று அந்தத் தொடர்புகள் பலவகைப்படும். பாகிஸ்தானைத் தவிர வேறு எந்த நாடும் இந்தியாவைத் தனக்குப் போட்டியாளராகப் பார்ப்பதில்லை. சீனாவுடனான செயல்களில் அதன் விரோதத்தை அதே அளவுக்கு அதனிடம் திருப்பிக்காட்டலாம்; தெற்காசியாவில் அப்படியே மாற்றிச் செய்ய வேண்டும். தெற்காசியப் பகுதியில் பக்கத்தில் உள்ள நாடுகளிடம் இந்தியா பகைமை பாராட்டவே கூடாது, அவற்றின் நன்மையில் அக்கறை உள்ள நாடாகவே தொடர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.

IYACHAMY CURRENT AFFAIRS- குருப் 4 தேர்விற்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு

IYACHAMY CURRENT AFFAIRS- குருப் 4 தேர்விற்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு

CLICK DOWNLOAD CCSE IV CURRENT AFFAIRS IN TAMIL

DOWNLOAD CCSE IV EXPECTED CURRENT AFFAIRS

DOWNLOAD MOCK TEST GENERAL TAMIL – 2

DOWNLOAD MOCK TEST GENERAL KNOWLWDGE

நடப்புச் சுவடுகள் -2018

மே 2017 முதல் ஜனவரி 15 2018 வரை

பொருளடக்கம்

1 முக்கிய அமைப்புகளின் தலைவர்கள்
2 சர்வதேச அமைப்புகளின் தலைமை மற்றும் ஆண்டு
3 உலக  நாடுகளின் தலைவர்கள் , சில தகவல்கள்
4 முக்கிய மாநாடுகள்
5 முக்கிய குறீயீடுகள்
6 தமிழ்நாடு அமைப்புகள் தலைவர்கள்
7 தமிழக அரசின் விருதுகள்
8 முக்கிய கமிட்டிகள் சமீபத்தில் அமைக்கப்பட்டவை
10 புத்தகங்கள் மற்றும் ஆசிரியகள் ( சமீபத்தியவை)
11 செயலிகள் ( சமீபத்தியவை)
12 முக்கிய விருதுகள் 2017 -18 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டவை
13 மாதவாரியான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு மே 2017 முதல் ஜனவரி 15 2018 வரை
14 முக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்
15 காங்கிரஸ் மாநாடுகள் , தலைவர்கள்
16 சர்வதேச முக்கிய ஆண்டுகள்
17 இந்தியா மற்றும் உலக அளவில் முதன்மைகள்
19 ஐந்தாண்டுத்திட்டங்கள்
21 மக்கள் தொகை
22 விருதுகளும் அவை,சார்ந்த தகவல்களும்
23 மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள்
24 குருப் 1 மற்றும் 2 முதன்மைத் தேர்வு மாதிரி விடைகள்
25  குருப் 4 மாதிரி வினாத்தாள் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு

 

”எறும்பூரக் கல்லும் தேயும்”

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் எல்லோரும் தேர்வு நாளை சிலர் சிறு அச்சத்துடனும் சிலர் உற்சாகத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பீர்கள் அந்த காத்திருக்குப்பு இடையில் நடப்பு நிகழ்வுகள் தொகுப்பினை இந்த முறை புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் இதற்கு காரணம் நீங்கள்  நமது இனையதளத்தில் கொடுத்த ஆதரவுதான் எனக்கூறி  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நடப்புச் சுவடுகள் என்ற பெயர் தாங்கி மாத இதழாகவோ அல்லது குறு இதழாகவோ வெளியிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது அது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கும் குடிமைப்பணித்தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு தாய்த் தமிழில் எளிமையான முறையில் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

“எறும்பூரக் கல்லும் தேயும்” என்பது வெறும் பழமொழியல்ல ஒரு செயலின்  விடாமுயற்சியின்  தன்மையினை மிக எளிமையாக விளக்கும் ஒரு தொடர். கனவு கை கூடுதல் என்பது நிமிடப் பொழுதில் நடக்கும் நிகழ்வல்ல அது இடைவிடாத தொடர்முயற்சியின் விளைவாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 4 & வீஏஓ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையினைப் பார்த்தால் போட்டி பலமாக இருப்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுவது இயல்புதான். இப்போட்டி எவ்வாறானது எனில் நாம் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலே நெடுந்தூர ஓட்டப்போட்டியை பார்த்திருப்பீர்கள் பந்தயத்தின் துவக்கத்தில் கூட்டமாய் இருக்கும் தூரம் செல்ல செல்ல தொடர்ந்து ஒடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கும்போது வெகு சிலரே தொடர்ந்து ஓடிக்கொண்டே வெற்றி பெறுவார்கள். எனவே தேர்வுக்கு விண்னப்பித்தவர்களின் எண்ணிக்கையை வைத்து கவலை கொள்ள தேவையில்லை.

1992 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெரக் ரெமாண்ட் என்ற தடகளவீரர் ஆனால் அரை இறுதிப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருந்த  டெரக் எதிர்பாரத விதமாக வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தொடர்ந்து ஓடமுடியாமல் கடுமையான வலியால் துடித்தார். மற்ற வீரர்கள் எல்லாம் வெற்றி இலக்கை நோக்கி ஒடிக்கொண்டிருந்தனர். போட்டியை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தாலும்,தசைப்பிடிப்பு ஏற்பட்ட காலைத் தரையில் ஊன்ற முடியாமல் நொண்டிக் கொண்டே அவர் தொடர்ந்து ஓடினார்.வலியோடு அவர் தொடர்ந்து ஓட முயற்சிப்பதைக் கண்ட அனைவரும் திகைத்து நின்றனர், அவரை நிறுத்த மருத்துவர் மற்றும் மகன் முயற்சித்தும் டெரக் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்.அதற்குள் போட்டி முடிந்துவிட்டது இருந்தாலும் தொடர்ந்து ஓடியே தீருவேன் என்ற ரெட்மாண்டின் மன உறுதியை பார்த்து வியந்த ரசிகர்கள் அனைவரும் அந்த பந்தயத்தில் பரிசு வென்றவர்களுக்கு உட்கார்ந்தபடியே கரவொலி செலுத்திய ரசிகர்கள் டெரக் ரெட்மாண்டிற்கு எழுந்து நின்று கைதட்டினார்கள்.”தொடர்ந்து ஓடுங்கள் போட்டியின் துவக்கப் புள்ளிதான் நிரம்பி வழிகிறது நிறைவுப்புள்ளி காலியாகத்தான் இருக்கிறது”.

இந்த தொகுப்பானது நடப்பு நிகழ்வுகள் மட்டுமல்லாமல் பொது அறிவுப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் சில பகுதிகளும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்,

சென்னை.

9952521550.

[embedyt] https://www.youtube.com/watch?v=D4mxzJnWoBE[/embedyt]

LAST MINUTE TIPS

[embedyt] https://www.youtube.com/watch?v=ilhGgwxBfkk[/embedyt]

( குருப் 1 மற்றும் 2 முதல் நிலை முதன்மை தேர்வுக்கான வகுப்புகள் பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது, அஞ்சல் மற்றும் இணையவழிப் பயிற்சி வகுப்புகளும் உண்டு)

https://iyachamy.com/downloads/iyachamy-current-affairs-current-affairs-compilation-for-ccse-iv-in-english/

TNPSC GROUP IV CURRENT AFFAIRS-2018 TAMIL & ENGLISH- IYACHAMY CURRENT AFFAIRS

  நடப்புச் சுவடுகள் – 2018 குருப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு 

”எறும்பூரக் கல்லும் தேயும்”

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் எல்லோரும் தேர்வு நாளை சிலர் சிறு அச்சத்துடனும் சிலர் உற்சாகத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பீர்கள் அந்த காத்திருக்குப்பு இடையில் நடப்பு நிகழ்வுகள் தொகுப்பினை இந்த முறை புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் இதற்கு காரணம் நீங்கள்  நமது இனையதளத்தில் கொடுத்த ஆதரவுதான் எனக்கூறி  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நடப்புச் சுவடுகள் என்ற பெயர் தாங்கி மாத இதழாகவோ அல்லது குறு இதழாகவோ வெளியிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது அது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கும் குடிமைப்பணித்தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு தாய்த் தமிழில் எளிமையான முறையில் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

[embedyt] https://www.youtube.com/watch?v=D4mxzJnWoBE[/embedyt]

“எறும்பூரக் கல்லும் தேயும்” என்பது வெறும் பழமொழியல்ல ஒரு செயலின்  விடாமுயற்சியின்  தன்மையினை மிக எளிமையாக விளக்கும் ஒரு தொடர். கனவு கை கூடுதல் என்பது நிமிடப் பொழுதில் நடக்கும் நிகழ்வல்ல அது இடைவிடாத தொடர்முயற்சியின் விளைவாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 4 & வீஏஓ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையினைப் பார்த்தால் போட்டி பலமாக இருப்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுவது இயல்புதான். இப்போட்டி எவ்வாறானது எனில் நாம் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலே நெடுந்தூர ஓட்டப்போட்டியை பார்த்திருப்பீர்கள் பந்தயத்தின் துவக்கத்தில் கூட்டமாய் இருக்கும் தூரம் செல்ல செல்ல தொடர்ந்து ஒடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கும்போது வெகு சிலரே தொடர்ந்து ஓடிக்கொண்டே வெற்றி பெறுவார்கள். எனவே தேர்வுக்கு விண்னப்பித்தவர்களின் எண்ணிக்கையை வைத்து கவலை கொள்ள தேவையில்லை.

1992 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெரக் ரெமாண்ட் என்ற தடகளவீரர் ஆனால் அரை இறுதிப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருந்த  டெரக் எதிர்பாரத விதமாக வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தொடர்ந்து ஓடமுடியாமல் கடுமையான வலியால் துடித்தார். மற்ற வீரர்கள் எல்லாம் வெற்றி இலக்கை நோக்கி ஒடிக்கொண்டிருந்தனர். போட்டியை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தாலும்,தசைப்பிடிப்பு ஏற்பட்ட காலைத் தரையில் ஊன்ற முடியாமல் நொண்டிக் கொண்டே அவர் தொடர்ந்து ஓடினார்.வலியோடு அவர் தொடர்ந்து ஓட முயற்சிப்பதைக் கண்ட அனைவரும் திகைத்து நின்றனர், அவரை நிறுத்த மருத்துவர் மற்றும் மகன் முயற்சித்தும் டெரக் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்.அதற்குள் போட்டி முடிந்துவிட்டது இருந்தாலும் தொடர்ந்து ஓடியே தீருவேன் என்ற ரெட்மாண்டின் மன உறுதியை பார்த்து வியந்த ரசிகர்கள் அனைவரும் அந்த பந்தயத்தில் பரிசு வென்றவர்களுக்கு உட்கார்ந்தபடியே கரவொலி செலுத்திய ரசிகர்கள் டெரக் ரெட்மாண்டிற்கு எழுந்து நின்று கைதட்டினார்கள்.”தொடர்ந்து ஓடுங்கள் போட்டியின் துவக்கப் புள்ளிதான் நிரம்பி வழிகிறது நிறைவுப்புள்ளி காலியாகத்தான் இருக்கிறது”.

இந்த தொகுப்பானது நடப்பு நிகழ்வுகள் மட்டுமல்லாமல் பொது அறிவுப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் சில பகுதிகளும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்,

சென்னை.

9952521550.

(இந்த தொகுப்பு பற்றிய உங்கள் மேலாண கருத்துகளை , m.iyachamy@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளவும் மேலும் நடப்புச் சுவடுகள் இதழுக்கு சந்தா செலுத்த 9952521550 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்)

பொருளடக்கம்

1 முக்கிய அமைப்புகளின் தலைவர்கள்
2 சர்வதேச அமைப்புகளின் தலைமை மற்றும் ஆண்டு
3 உலக  நாடுகளின் தலைவர்கள் , சில தகவல்கள்
4 முக்கிய மாநாடுகள்
5 முக்கிய குறீயீடுகள்
6 தமிழ்நாடு அமைப்புகள் தலைவர்கள்
7 தமிழக அரசின் விருதுகள்
8 முக்கிய கமிட்டிகள் சமீபத்தில் அமைக்கப்பட்டவை
10 புத்தகங்கள் மற்றும் ஆசிரியகள் ( சமீபத்தியவை)
11 செயலிகள் ( சமீபத்தியவை)
12 முக்கிய விருதுகள் 2017 -18 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டவை
13 மாதவாரியான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு மே 2017 முதல் ஜனவரி 15 2018 வரை
14 முக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்
15 காங்கிரஸ் மாநாடுகள் , தலைவர்கள்
16 சர்வதேச முக்கிய ஆண்டுகள்
17 இந்தியா மற்றும் உலக அளவில் முதன்மைகள்
19 ஐந்தாண்டுத்திட்டங்கள்
21 மக்கள் தொகை
22 விருதுகளும் அவை,சார்ந்த தகவல்களும்
23 மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள்
24 குருப் 1 மற்றும் 2 முதன்மைத் தேர்வு மாதிரி விடைகள்

By the Continual creeping of ants a stone will wear away!

My hearty wishes to everyone. The much awaited group 4 examinations is nearing as I see some aspirants are awaiting with fear and some others with anxiety. Amidst this anticipation, I feel elated to publish current affairs in a book form and my effort for the same was fuelled by the support you all rendered to me in my website. Further I would also  take immense pleasure in sharing with you all that my efforts are being  propelled to publish a current affairs magazine or a booklet bearing the name “nadappu suvadugal” ,that would be a compilation of all the current events in tamil,our mother tongue ,aiding  the strenuous  preparation for both UPSC and TNPSC.

Perseverance in the hinge of all virtues. This is not merely a proverb. Our dreams would never turn true overnight unless and until there is consistent effort. One may be panic driven   when one just considers the number of persons who have applied for TNPSC group 4 and VAO exam .But one should never fail to accept the fact that these examinations are just like a marathon where the number of persons who win the race is just a minimal fraction of the mob that was at the beginning of the competition. Persistence and tenacious attitude of a person alone helps him win and the number of enrollment is just a numerical entity.

In the 400m event of the Spain Olympics in 1992, the most expected athlete Derek Redmond got a sprain in his right leg and he couldn’t move further owing to the intense pain .His co-contestants were progressing. Despite no other go left for him but to give up the game he completed the round hopping single legged, bearing the anguish. This made the audience give him a standing ovation which wasn’t given even to the winner of the event. You all should bear in mind that the get -go of every marathon is crowded and never the end point. Run continuously starting point of the competition is flooded but the end point is always empty.  To quote the words of Churchill, “Never, never, never give up”.

This Compilation is Consist of Current affairs and expected basic General Knowledge.

 

Wish You All the Success

Iyachamy Murugan,

Chennai,

9952521550.

(Kindly request the Aspirants to share your feedback through m.iyachamy@gmail.com )

1 CONSTITUTIONAL/STATUTORY/OFFICIAL BODIES
2 INTERNATIONAL ORGANIZATION AND THEIR HEADS
3 IMPORTANT STATE HEAD AROUND THE WORLD
4 IMPORTANT SUMMITS AND CONFERENCES
5 TAMILNADU OFFICIAL BODIES AND PERSONS
6 TAMILNADU GOVERNMENT AWARDS
7 IMPORTANT COMMITTEES  CONSTITUTED
8 BOOKS AND AUTHOR
9 APPS AND PORTALS
10 IMPORTANT AWARDS
11 MONTHLY CURRENT AFFAIRS
12 IMPORTANT CONSTITUTIONAL  AMENDMENTS
13 LIST OF PRESIDENTS OF THE INDIAN NATIONAL CONGRESS
14 INTERIM GOVERNMENT-1946
15 IMPORTANT YEARS ANNOUNCED BY UNO
16 STATES/UTS YEAR ESTABLISHED YEAR
17 FIRST IN INDIA AND WORLD
18 CLASSICAL AND FOLK DANCES OF INDIA
19 AWARDS AND RESPECTIVE FIELDS
20 SOME IMPORTANT SCHEMES OF  UNION GOVT
21 TAMILNADU GOVERNMENT SCHEMES
22 CENSUS 2011
23 INDIA FIVE YEAR PLANS AT A GLANCE
24 TNPSC GROUP I & II MAINS SPECIMEN ANSWER

 

IMPORTANT UPDATE : THIS TIME NO PDF WILL BE UPDATED THOSE WHO WANT TO BUY CONTACT THIS NO 8144444097 THEY WILL SEND THROUGH COURIER, TOTAL AMOUNT 100 INCLUDING POSTAL CHARGES.

இந்த முறை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு PDF ஆக பதிவேற்றம் செய்யப்பட மாட்டாது. புத்தகம் வேண்டுவோர் 8144444097 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் முகவரியை கொடுத்தால் புத்தகம் அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் செலவு உட்பட 100 ரூபாய். மேலும் கீழ்க்கண்ட இடங்களில் நேரடியாக புத்தகம் வாங்கலாம்.

1. S P Book House , Anna Nagar Chennai,
2. Book Mark , Anna Nagar , Chennai
3. Success Book House , Anna Nagar,
4.Aspira Book cente , chennai
5. Star old Book Stall , Plani
6. S P Book House Salem .
7.Malligai Book Center Madurai.

TNPSC CURRENT AFFAIRS IN ENGLISH JANUARY – 4 – 8

[et_pb_section fb_built=”1″ admin_label=”section” _builder_version=”3.0.47″][et_pb_row admin_label=”row” _builder_version=”3.19.11″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” use_custom_width=”on” width_unit=”off” box_shadow_style=”preset1″ box_shadow_horizontal=”5px” custom_margin=”||” border_radii=”on|10px|10px|10px|10px” box_shadow_color=”#0c71c3″][et_pb_column type=”4_4″ _builder_version=”3.0.47″ parallax=”off” parallax_method=”on”][et_pb_text admin_label=”Text” _builder_version=”3.19.11″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat”]

TNPSC CURRENT AFFAIRS IN ENGLISH JANUARY – 4 – 8

  • P. Balasubrahmanyamwill on January 12 receive the LV Lifetime Achievement award to mark the 75th birth anniversary of music director and violin artist L. Vaidyanathan 

  • World Atheist Conference held in Tiruchy

  • Tamil Naduwhich has the highest Gross Enrollment Ratio (GER) in higher education in the country.

  • The RS Puram police stationin the covai won the ministry of home affairs’ trophy for the best police station in the country

  • Congress MLA Paresh Dhanani is set to become the Leader of Opposition(LoP) in the Gujarat Assembly

  • The Union Ministry of Women and Child Development (WCD) has launched online portal NARI(nari.nic.in) for the empowerment of women. It has been developed by the Ministry to provide easy access to information on government schemes and initiatives for women.

  • ASEAN-India Pravasi Bharatiya Divas held in Singapore on 6-7 January, 2018 to celebrate the 25 years of strategic partnership between India and ASEAN. 

  • The Government of West Bengal. launched the official emblem Biswa Bangla” logo with Ashoka Pillar of the national emblem

  • Shri Ananthkumar to inaugurate 18th All India Whips’ Conference, to be held at Udaipur in rajasthan on 8th – 9th January,  rolling out eSansad and eVidhan is part of the agenda.

  • India’s first park for persons with disabilities to open in Hyderabad , Telengana

  • Only six out of 36 states and Union Territories of the country have dedicated departments and district social welfare officers to look into issues of disabled persons, a parliamentary panel report has said. The panel urged to amend the Persons with disabled act 2016 to establish commission separately.

  • Track Child and Khoya-Paya portals launched by Union Government to track missing children across india

  • JohnYoung, who walked on the moon, commanded the first space shuttle mission and became the first person to fly in space six times, died

[/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]