TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 4-8

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 4 முதல் 8 வரை

  • டாக்டஸ் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு , பிரபல கன்னட இசைக்கலைஞ்ர் பெயரிலானா எஸ் வைத்திய நாதன் விருது வழங்கப்படுகிறது

  • உலக நாத்திகர் மானாடு திருச்சியில் மூன்று நாட்கள் நடைபெற்றது

  • உயர் கல்வியில் அதிகமான மானவர்கள் சேருவதில் இந்தியாவிலேயே தமிழ்னாடு முதலிடம் வகிக்கிறது. இது குறிப்பாக 18 முதல் 23 வயது வரையுள்ள மானவர்களை குறிப்பது ஆகும்.

  • இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக கோயம்புத்தூரின் ஆர்.எஸ்.புரம்(பி-2), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

  • குஜராத் மானில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பரேஷ் தனானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

  • பெண்களுக்கு அதிகாரளித்தலுக்காக NARI எனும் தளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் பெண்கள் தொடர்பான அனைத்து திட்டங்களையும் எளிமையாக வழங்கும்

  • மேற்கு வங்க முதலமைச்சர் மேற்கு வங்கத்திற்கென தனி இலச்சினை அறிமுகப்படுத்தி உள்ளார். அசோக சின்னத்தின் மீது Biswa Bangla என எழுதப்பட்டிருக்கும்

  • இராஜஸ்தான் மானிலம் உதய்பூரில் அனைத்து கட்சி கொறாடாக்கள் மானாடு நடைபெறுகிறது இதில் தாள்களில்லா ஆளுகை ( paperless governance ) பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

  • இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான தனி பூங்காவை தெலுங்கான அரசு துவக்கியுள்ளது

  • இந்தியாவில் மொத்தம் ஆறு மானிலங்களில் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்காக தனித் துறை செயல்பட்டு வருவதாக நாடளமன்றக் குழு தெரிவித்துள்ளது அதில் தமிழ்னாடும் ஒன்று ஆகும். மேலும் அனைத்து மானிலங்களிலும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அமைப்பதை உறுப்படுத்தும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016ல் மாற்றம் கொண்டுவரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

  • இந்தியா ஆசியான் நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தோனேசியா சென்றார்.

  • TrackChild” மற்றும் “Khoya-Paya” போன்ற செயலிகள் கானமல் போன குழந்தைகளை மீட்பதற்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆசியான் இந்தியா வெளினாடு வாழ் மானாட்டை சிங்கப்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவங்கி வைத்தார்

  • ஆறு முறை விண்வெளிக்குச் சென்று திரும்பியவரும், நிலவில் தடம் பதித்தவருமான அமெரிக்காவின் நாசா விண்வெளி முன்னாள் வீரர் ஜான் வாட்ஸ் யங் காலமானார்.

பிட்காயின் மற்றும் ப்ளாக் செயின் தொழில் நுட்பம் Bitcoin & Block Chain Technology

பிட்காயின் மற்றும் ப்ளாக் செயின் தொழில் நுட்பம்

Bitcoin & Block Chain Technology

DOWNLOAD AS PDF பிட்காயின் மற்றும் ப்ளாக் செயின் தொழில் நுட்பம்

பணத்திற்கு பல பரிமானங்கள் உண்டு – ஒன்று, அது எந்த நாட்டைச் சேர்ந்தது; இரண்டு, அந்த நாட்டு அரசால் அல்லது மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது என்பதாகும். ஆனால் எந்தவொரு நாட்டையும் சேராமல், எந்தவொரு நிறுவனத்தையும் சேராமல் கணினி மூலம் அடையாளம் தெரியாத சிலரால் உருவாக்கப்படுது பிட்காயின்.

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் (Bitcoin) என்பது சட்கோஷி நகமொட்டாவால் உருவாக்கப்பட்ட ஒரு (Cryptocurrency) எண்ணிம நாணயமுறை ஆகும். இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மெண்பொருளும்  இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல் இரு நபர்கள், தங்களிடையே பணப் பரிவர்த்தனை செய்வதையும், அந்தப் பரிவர்த்தனையை உறுதி செய்து, அதே நேரத்தில் இருவரின் அடையாளங்களைப் பாதுகாத்து வைக்கவும் ஒரு கனித கனினி முறையை பயன்படுத்தி செயல்படுகிறது

பெரும்பாலான நாணயமுறைகளைப் போலன்றி பிட்காயின் நாணயத்தைக் கட்டுப்படுத்தும் நடுவண் அமைப்பு ஏதும் இல்லை. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவது மூலம் இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன மோசடிகளை தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமெ செலவளிக்க  முடியும் . ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.

ப்ளாக் செயின் தொழில் நுட்பம்

ப்ளாக் செயின் தொழில் நுட்பம் என்பது ஒரு திறந்த வெளி மின்  பேரேடு( electronic open Ledger)  யார் வேண்டுமானாலும் இந்த மின்னனு பேரேட்டில் மாற்றம் செய்ய இயலும் ஆனால் இதில் மாற்றம் செய்வதற்கு பரிவர்த்தனையில் உள்ள இருவரும் இனைந்து கனித குறியீடுகளை அடிப்படையாக வைத்து மட்டுமே  மாற்றம் செய்ய இயலும். எடுத்துக்காட்டாக விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் முன்னர் கொடுக்கப்ப்பட்ட தகவல்களை மாற்றிக்கொள்ள இயலும் ஆனால் விக்கிபீடியாவை பொறுத்தவரையில் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மையம் ஒன்று இருக்கும் அதன்மூலமும் தகவல்களை கட்டுப்படுத்த இயலும்.

ஆனால் ப்ளாக் செயின் தொழில் நுட்பத்தில் மூன்றாம் நபர் இல்லாமல் அதில் ஈடுபட்டிருக்கும் இருவரும் ஒப்புதலுடன் தான் மாற்றம் செய்ய முடியும், அதே போல் திறந்த வெளி மின் பேரேட்டை அனைத்து பயனாளர்களும் பார்க்கும் வண்ணம் இருக்கும். எனவே யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக பிட்காயின் பரிவர்த்தனை நடைபெற இயலாது. சில குறுப்பிட்ட கால அளவில் நடைபெறும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும், ஒரு ப்ளாக் (Block) என்ற அளவில் ஒன்று சேர்க்கப்படும். பிறகு அந்த ப்ளாக் ஏற்கனவே உள்ள ஒரு ப்ளாக் செயினில் சேர்க்கப்படும். பிட்காயின் சமூகத்தில் உள்ளவர்கள் இந்த ஓப்பன் லெட்ஜர் மற்றும் ப்ளாக் செயின் உருவாக்கத்தில் ஈடுபடுகின்றனர்.

கவனத்தில் கொள்ளக்கூடியவை

  • இங்கே பிட்காயினைப் பொறுத்தவரை எந்த ஒரு மூன்றாம் நபரும் கண்கானிக்க முடியாது. உதாராணமாக வங்கியில் இனையப்பரிவர்த்தனை மூலம் நாம் இன்னொருவருக்கு பணம் அனுப்பினால் அது பணம் அனுப்பிய நமக்கு , பணம் பெற்றவர் மற்றும் ஆகிய மூவரும் அறிய இயலும் ஆனால் ப்ளாக் செயின் தொழில் நுட்பத்தில் பிட்காயின் இயங்குவதால் பணம் அனுப்பியவருக்கும் பணத்தை பெற்றவருக்கும் மட்டுமே பரிவர்த்தனை பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

  • மேலும் இது அரசாலோ பிற மத்திய வங்கியாலோ அனுமதிக்கப்பட்ட கட்டளைப் பணம் (Fiat money) கிடையாது .

  • இந்தியாவில் இப்பணம் சட்டவிரோத பணமாக கருதப்படும்

TNPSC CURRENT AFFAIRS IN ENGLISH | Current Affairs January 1- 3 | Tamilnadu E- governance Policy | Satyendra Nath Bose

Current Affairs January 1- 3 | Tamilnadu E- governance Policy  | Satyendra Nath Bose

  • With a view to clear the huge pendency of documents and enabling the Public to get back their registered documents quickly and also to realize the Government revenue blocked in these documents, a ‘Samadhan Scheme’ is being introduced in the Registration Department with effect from 3.1.2018.

  • The Tamil Nadu government has launched an e-governance policy to provide various services digitally

Special Features of the policy

  • Establishing an integrated environment for delivering seamless Government to Citizen (G2C), Government to Employee (G2E), Government to Government (G2G) and Government to Business (G2B) services in a cost-effective manner, besides increasing productivity levels within government are some of the key objectives of the policy.

  • A State-level apex committee for e-Governance headed by the Chief Secretary would be formed for periodic review of the implementation of the policy and would provide necessary guidelines for its implementation.

  • The departments would earmark 0.5 per cent of their annual budget for e-Governance and would be encouraged to increase the same to three per cent in a phased manner over a period of five years.

  • Considering the mobile phone penetration among the people, all departments  would ensure that their applications are compatible to mobile access and utilise the common mobile infrastructure provided by Government of India and the State government like Mobile Service Delivery Gateway (MSDG) etc

  • Mobile applications will be developed in English and Tamil Language using open standards, to the extent possible. The State Portal and Government Departmental Portals will be made ‘mobile compliant’ in due course

  • The policy made it clear that the departments would ensure use of Open Source and Open Standard technologies for software development, unless the use of proprietary technology is unavoidable. This would enable respective departments to prevent vendor lock-in, unnecessary cost on user licences and long-term cost liabilities.

  • Chitraveenamaestro N. Ravikiran has been selected for this year’s Sangita Kalanidhi award.

  • The State government has named former High Court judge B. Rajendran as the chairpersonof the Real Estate Appellate Tribunal (REAT) for Tamil Nadu and the Union Territory of Andaman and Nicobar Islands.

  • Former ambassador to China and current secretary (economic relations), VijayKeshav Gokhale, has been named as India’s next foreign secretary

  • State-owned gas utility GAIL India Ltd today said it has commissioned the country’s secondlargest rooftop solar power The firm has installed a 5.76 MWp (Mega Watt peak) solar plant at its petrochemical complex at Pata in Uttar Pradesh

  • Assam the first draft of an updated National Register of Citizens (NRC) for the State listed. Applicants whose names appear in NRC, 1951, or any electoral rolls of the State up to midnight of March 24, 1971, and their descendants and all Indian citizens, including their children and descendants who have moved to Assam post March 24, 1971.

Additional Information

Assam Accord

  • The Assam Accord (1985) was a Memorandum of Settlement (MoS) signed between representatives of the Government of India and the leaders of the All Assam Student Union  Movement in New Delhi on 15 August 1985. It brought an end to the Assam Agitation and accepted to provide Citizenship for those who migrated up to midnight of March 24, 1971, and their descendants and all Indian citizens, including their children and descendants who have moved to Assam post March 24, 1971. Article 6a inserted in Constitution of India to provide Citizenship to those who migrated Assam amending Indian Citizenship act 1955.

  • Google has developed a text-to-speech artificial intelligence (AI) system that will confuse you with its human-like articulation. The tech giant’s text-to-speech system called “Tacotron 2”.

  • Prime minister inagurated a year-long celebration of the 125th year of Acharya Satyendra Nath Bose, who was born on this day in 1894.

Satyendra Nath Bose

Satyendra Nath Bose was one of the world’s pioneering theoretical, widely called the ‘Father of the God Particle’ for his work on the Boson, a class of particles named after him because they the obey Bose–Einstein statistics. His work on quantum mechanics in the early 1920s laid the foundation for Bose–Einstein statistics and the theory of the Bose–Einstein condensate.

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 1 முதல் 3 வரை 2018| அசாம் ஒப்பந்தம் | சத்தியேந்திர நாத் போஸ்| தமிழ்நாடு மின்னாளுகை கொள்கை

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 1 முதல் 3 வரை 2018| அசாம் ஒப்பந்தம் | சத்தியேந்திர நாத் போஸ்| தமிழ்நாடு மின்னாளுகை கொள்கை

  • அதிக அளவில் நிலுவையாக உள்ள ஆவணங்களைத் தீர்வு செய்யும் நோக்குடன், பொது மக்களும் தங்களது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை விரைவாகத் திரும்பப் பெறவும், இத்தகைய ஆவணங்களில் முடங்கியுள்ள அரசு வருவாயை வசூலிக்கவும் ஏதுவாக, பதிவுத் துறையில் 3.1.2018 முதல் சமாதானத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

  • முதலமைச்சர் பழனிச்சாமி மின்னாளுமைக் கொள்கை 2017 (e-Governance Policy 2017 ) வெளியிட, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு அம்சங்கள்

  • மின்னாளுமைக் கொள்கை, 2023-ஆம் ஆண்டுக்குள் அரசின் சேவைகள் அனைத்தையும் இணையத்தின் வாயிலாக வழங்குதல்

  • பொது சேவை மையங்கள் மற்றும் கைபேசி செயலிகள் மூலம் அரசின் சேவைகளை பொதுமக்கள் பெற வழிவகை செய்தல்

  • அரசின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரித்தல் ஆகியவற்றை தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டுள்ளது.

  • அரசுத் துறைகளின் மின்னாளுமை சிறப்பு முயற்சிகளுக்கென ((e-Governance Initiatives) தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள விரிவான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பினை (Comprehensive IT Infrastructure) சீரான முறையில் பயன்படுத்திட வழிகாட்டுதலையும் வழங்கும்.

  • இதன் மூலம் அரசுத் துறைகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான அரசின் சேவைகள் தங்குதடையின்றி மின்னணு முறையில் வழங்கிட இயலும்.

  • மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள தர நிலைகள் மற்றும் கொள்கைகளை (National Standards and Policies) உள்ளீடாகக் கொண்டுள்ள இம்மின்னாளுமைக் கொள்கை, மின்னாளுமையில் மீத்தரவுகளுக்கான (Metadata) தரநிலைகள், திறந்தநிலை மென்பொருள்கள் (Open Source Software) பயன்பாடு மற்றும் தமிழ்க் கணினிப் பயன்பாட்டுத் தரநிலைகள் (Tamil Computing Standards), கணினி-மென்பொருள்-தரவு ஆகியவற்றிற்கு இடையேயான பொதுவான கட்டமைப்பு (Framework), தரநிலைகள் (Standards), பெயர்வுத்திறன் (Portability), இயங்குதன்மை (Inter-operability) ஆகியவற்றை உறுதிசெய்யும்.

  • சித்திரவீனா ரவிச்சந்திரன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான சங்கீத கலா நிதி விருதினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கினார்கள்

  • தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலாளராக விஜய் கோகலேவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் இவர் பதவியேற்பார்

  • நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கூரைமேல் சூரிய மின்சக்தி நிலையத்தை கெயில் நிறுவனம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.

  • அசாம் தேசிய மக்கள் பதிவேட்டின் முதல் வரைவை இந்திய ரிஜிஸ்டர் வெளியிட்டுள்ளார். இதன்படி 1971, மார்ச், 24 க்கு முன்னர் பங்களாதேஸிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்

கூடுதல் தகவல்கள்

அசாம் ஒப்பந்தம்

1980 களில் அசாம் மானிலத்தில் அசாம் அனைத்து மானவர்கள் இயக்கம் மற்றும் பிற இயக்கங்கள் பங்களாதேசிலிருந்து குடிபெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்க கூடாது என பல்வேறு தீவிரவாத போராட்டங்கள் நடைபெற்றது . இதனை முன்னிட்டு 1985 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் அசாம் அனைத்து மாணவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி  1971-க்குப் பிறகு இடம்பெயர்ந்த எவருக்கும் குடியுரிமை வழங்கக் கூடாது என்கிறது அசாம் ஒப்பந்தம்.

2016 ஆம் ஆண்டு அசாமில் இருக்கும் இடம் பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்பில் புதிதாக சரத்து 6A என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 திருத்தப்பட்டுள்ளது.

தற்போது ஏன் செய்தியில் ?

இந்த ஒப்பந்தம் 2005 ஆம் ஆண்டு வரையில் ஏதும் செய்யப்படவில்லை ஆனால் 2005இல் அப்போதைய மத்திய அரசிற்கும் அசாம் மானில் அரசிற்கும் இடையே அசாம் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் படி குடியுரிமை வழங்கபடவும் கணக்கெடுப்பு நடைபெற்றது ஆயினும் பாதியிலே இது நின்று விட்டது இதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு அசாமில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் இதனை முறையாக செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது. இதன்படி இப்போது அசாம் தேசிய மக்கள் தொகை பதிவேடு வெளியிடப்பட்டிருக்கிறது.

  • கூகுளின் புதிய செயற்கை நுண்ணறிவின் மூலம் வாய்மொழியினை எழுத்தாக்கும் “Tacotron 2 , எனும் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • இயற்பியல் விஞ்ஞாணி சத்யேந்திர நாஸ் போஸின் 125 ஆவது பிறந்த நாளை இந்த ஆண்டுமுழுவதும் கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்தார்.

சத்தியேந்திர நாத் போஸ்

  • கொல்கத்தாவில் பிறந்த இயற்பியல் விஞ்ஞானி சத்தியேந்திர நாத் போஸ் துகள் இயந்திரவியல் துறையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் இனைந்து பணியாற்றினார்

  • போஸ் ஐன்ஸ்டீனின் நிலை  எனப்படுவது என்னவெனில் அதிக குளீருட்டப்பட்ட பருப்பொருளின் ஐந்தாவது நிலையை குறிப்பதாகும்.

  • 2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் – போஸான் அல்லது கடவுள் துகள் என அழைக்கப்பட்ட அந்த பெயரின் இறுதியில் போஸான் என்ற பெயர் சத்தியேந்திர நாத் போஸ் குவாண்டம் கொள்கையில் அவரது ஆராய்ச்சிகள் இத்துகள் கண்டுபிடிப்புக்கு உதவியதற்காக போஸான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முன்னாள் உள்ள ஹிக்ஸ் என்பது மற்றொரு அறிவியலாளரின் பெயர் ஆகும்.

 

TAMILNADU POLICE RECRUITMENT – 2017 18 – DETAILED NOTIFICATION , SYLLABUS , BOOK LIST

தமிழ்நாடு காவல்துறை- இரண்டாம்  நிலைக்காவலர் மற்றும் தீயனைப்போர்  பதவிக்கான போட்டித்தேர்வு- 2017 -18 – பாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்கள்

DOWNLOAD DETAILED POLICE NOTIFICATION SYLLABUS BOOK LIST

கல்வித்தகுதி- 10 ஆம் வகுப்பு

விண்ணப்பிக்க இறுதி நாள் ; 27/1/2018

கட்டணம்; 130 ரூபாய்

இனையதள முகவரி : https://reg.tnusrbonline.org:8680/TNU/LoginAction_input.action

வயதுவரம்பு  – 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்

  1. பொதுப்பிரிவினர்(OC)- 24 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் 01/07/1993க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும் ( BC, MBC,SC,ST, SCA,SCM) அல்லாதோர்;
  2. பிற்படுத்தப்பட்டோர்-மிக 26 வயதுக்கு  உட்பட்டவர், 01/07//1991 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும் ( BC,MBC, DNC)  ஆகியோர் இதில் அடங்குவர்.
  3. ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் – 29 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ( SC,ST,SCA) , 01/07/1988 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒபிசி( OBC)  என்பது கிடையாது எனவே ஓபிசி யை குழப்பிக்கொள்ளாதீர்கள்

மேற்சொன்ன மூன்றும் பொதுவாக அனைத்து தரப்பினரக்குமானது

  1. முன்னாள் இராணுவத்தினர் 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். 01/07/1972க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
  2. ஆதரவற்ற விதவைகள் அனைத்துப் பிரிவினருக்கும் உச்சபச்ச வயது வரம்பு 35 ஆகும் . 01/07/1982க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

அடிப்படை தகுதிகள்

உடல் தகுதி ஆண்கள்

உயரம்

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர்.

( OC,BC,MBC,DNC,BCM)

குறைந்தபட்ச அளவு 170 செ.மீ
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் ( SC,ST,SCA) குறைந்தபட்ச அளவு , 167 செ.மீ

 மார்பளவு

சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீ
மூச்சடக்கிய விரிவாக்கம் ( மூச்சடக்கிய விரிவாக்க நிலையில் 86 செ.மீ) குறைந்த அளவு விரிவாக்கம் 5 செ.மீ ( அதாவது உங்கள் மார்பளவு 81 செ.மீ இருந்து 5 செ.மீ  மூச்சடக்கிய நிலையில் 86 செ.மீ ஆக இருக்க வேண்டும் என்பது.

பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள்

உயரம்

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர்.

( OC,BC,MBC,DNC,BCM)

159 செ.மீ
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் ( SC,ST,SCA) 157 செ.மீ

எழுத்துத் தேர்வு விவரங்கள்

  1. பொது அறிவு ( 50 வினாக்கள்)
  2. உளவியல் ( 30 வினாக்கள்)

கொள்குறிவகையில் தேர்வு வடிவில் வினாக்கள் இருக்கும்

உடல்தேர்வு விவரங்கள்

  1. உடல் திறன் போட்டி – 15 மதிப்பெண்கள்
  2. சிறப்பு செயல்பாடுகள் ( NSS , NCC, விளையாட்டு போன்றவை சான்றிதழ்கள் -5 மதிப்பெண்கள்

குறிப்பு : இத்தேர்விற்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்காக 20 சதவிதம் முன்னுரிமை தரப்பட்டுள்ளது . அதற்கான சான்றிதழ் வாங்கி விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். இவை பின்னர் ஏற்றுக்கொள்ளப்படாது.

பாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டியவை

எழுத்துத்தேர்வு 10-ம் வகுப்பு வரைக்கான பாடத்திட்ட தரத்தில் இருக்கும்.

  • தமிழ் செய்யுள்நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள், செய்யுள்நூல் விவரங்கள், தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்

படிக்கவேண்டிய நூல்கள்

6 லிருந்து 10 வரையுள்ள தமிழ் பாடப்புத்தகங்கள் மற்றும்  TNPSC  நடத்திய பொதுத் தமிழுக்கான பழைய கேள்வித்தாள்கள்.

  • ஆங்கிலம் : ஆங்கிலகவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்கள் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்

படிக்கவேண்டிய நூல்கள்

TNPSC  நடத்திய பொதுத் தமிழுக்கான பழைய கேள்வித்தாள்களை விடைகளுடன் படியுங்கள்

  • கணிதம் சிறிய கணக்குகள் ( பழைய TNPSC வினாத்தாளில் உள்ள கணக்குகளை பயிற்சி செய்தாலே போதுமானது ) கூடுதலாக கணியன் கனிதப் புத்தகம் படிக்கலாம்
  • பொது அறிவியல்:

              நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன், உணரும் திறன் உள்ள நல்ல கல்வித் திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வினாக்கள் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவிகளிலிருந்து கேட்கப்படும். அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள், மனிதனின் உடற்செயலியல், நோய்கள், அதன்விளைவுகள், நோய்களை சரிசெய்யும் முறை, அதை தடுக்கும்முறை, தேவையான உணவு உட்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலைகாத்தல், மரபியல், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம், மற்றும் சூழ்நிலையியல், சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள், இயக்கம், நியூட்டனின் இயக்க விதிகள், பொருட்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தின் இயற்கை பண்புகள்

படிக்கவேண்டிய நூல்கள்

  • 6 லிருந்து 10 வரையுள்ள அறிவியல் பாடப்புத்தகம் மற்றும் பழைய TNPSC வினாத்தாள்களை விடைகளுடன் படியுங்கள்.
  • இந்திய வரலாறு:

சிந்துசமவெளி நாகரிகம், வேதகாலம் ஆரிய மற்றும் சங்ககாலம் மற்றும் மெளரியவம்சம், புத்த மற்றும் ஜைன மதம் குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள், பல்லவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள் மற்றும் முகமதியர்கள் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுறை தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.

படிக்கவேண்டிய நூல்கள்

  • 6,7,8 சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள வரலாறு பகுதி மட்டும் ( பழைய வினாத்தாள்கள் விடைகளுடன்)
  • புவியியல்

 புவி, புவியின் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல் தன்னைத்தானே சுற்றுதல் மற்றும் அதன் விளைவுகள், புவியின் அமைப்பு, இந்தியா அமைந்துள்ள இடம், காலநிலை, பருவகால மாற்றங்கள் மற்றும் வானிலை, மழை பொழிவு, இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள், பயிர்கள் பயிரிடும்முறை, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள், மலைப்பிரதேசங்கள், தேசிய பூங்காக்கள், முக்கிய துறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள், முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள், காடு மற்றும் காடுசார்ந்த வாழ்க்கைகள், மக்கள் தொகை பரவல் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள்.

  படிக்கவேண்டிய நூல்கள்

  • 6 லிருந்து 10 வரை உள்ள புவியியல் பாடப்பகுதி
  • இந்திய தேசிய இயக்கம் :

இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல். விடுதலை போராட்டத்தில் பாலகங்காதர திலகள், கோபாலகிருஷ்ண கோகலே, தாதாபாய் நெளரோஜி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பலர், இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, மகாகவி பாரதியார், வ.உசிதம்பரம், சுப்ரமணியசிவா, இராஜாஜி மற்றும் மற்றவர்களின் பங்களிப்பு.

படிக்கவேண்டிய நூல்கள்

  • 10ஆம் வகுப்பு வரலாற்றுப் பகுதியில் 1857 ஆம் ஆண்டு பெருங்கலகம் பாடத்திலிருந்து தமிழ் நாட்டில் சமூக மாற்றங்கள் வரை படியுங்கள். தலைவர்களைப் பற்றி படிப்பதற்கு  மனோரமா பொது அறிவுப்புத்தகம் அல்லது விகடன் பொது அறிவுப் புத்தகத்தை படிக்கலாம்.
  • நடப்பு நிகழ்வுகள்

 சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகள், இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள், புதியதொழில் வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, வரலாற்று நிகழ்வுகள். இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்மந்தப்பட்ட வேலைகள், விளையாட்டுகள், தேசிய பன்னாட்டு விருதுகள், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள், ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துகளின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள், பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொது தொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், இன்றைய தினத்தைய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.

படிக்கவேண்டிய நூல்கள்

  • தினமனி அல்லது தமிழ் இந்து செய்தித்தாள்
  • மனானா நடப்பு நிகழ்வுகள் புத்தகம்
  • iya.competitiveexam.in
  • உளவியல் (Psychology)

அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன்: இப்பகுதியில் உள்ள வினாக்கள், போட்டியாளர்கள் வினாக்களை புரிந்துகொண்டு அவரவர் புத்திக்கூர்மையை பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளை கண்டுபிடித்து பதிலளிக்கும் வண்ணம் இருக்கும். மேலும் இப்பகுதியில், பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களை கொண்டதாகவும் இருக்கும்.

படிக்கவேண்டிய நூல்கள்

  • சக்தி அல்லது ஈகிள் ஐ புத்தகம் வெளியிடும் புத்தத்தை வாங்கிக்கொள்ளுங்கள். மற்றும் பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள கணக்குகள்
  • எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் எனப்படும் இதழில் வரும் ரயில்வே மற்றும் SSC தேர்வின் வினாக்களை படித்து கொள்ளுங்கள்.

இவை அனைத்துடன். போலிஸ் தேர்வுக்கென்று சக்தி அல்லது ஈகிள் ஐ போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் காவலர் தேர்வுக்கான அனைத்து பழைய வினாக்களும் தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கும்.

 வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்

திருநெல்வேலி

சந்தேகம் இருந்தால் m.iyachamy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

TNPSC GROUP II INTERVIEW EXPLAINED | DEPARTMENT RELATED| CURRENT ISSUES

Dear Aspirants

I first congratulate those who cleared the mains because you are taken two steps towards your success by passing Prelims and Main examination. The book tries to guide the typical process of TNPSC Interview. It discuss the myths and misconception and the basic philosophy of interview preparations and what the interviewer seeks to find the right candidate for service not a job. If you notice the Notification of the recruitment TNPSC said it invites application for the post of Combined Civil service Examination only.

I believe that any aspirants who get an interview call have the calibre to be a successful person. The interview plays a important role of final judgment of Success. The board do not seek any specific personality train, Aspirants come in many personality types just like the common man. The board only seeks to weed out the candidate who may not be fit for a service under the government among the aspirants. The focus of the book is to help in your interview preparation to get your success. The book divided into various topics that guide you various aspects of interviews and point towards factors lead to success in interviews.

DOWNLOAD LINK

 A GUIDE TO TNPSC INTERVIEW 1

Wish you all the Success

Iyachamy Murugan

Iyachamy Academy

Chennai

 

( I request the readers to share their feedback of the book through m.iyacahamy@gmail.com or 9952521550 via Whatsapp)

 

INTRODUCTION TO INTERVIEW

[embedyt] https://www.youtube.com/watch?v=A-pG7oEbGCg[/embedyt]

VIDEO – 1

[embedyt] https://www.youtube.com/watch?v=eJoUpIzoJr4[/embedyt]

VIDEO – 2

[embedyt] https://www.youtube.com/watch?v=q09PRIxHakQ[/embedyt]

MOCK INTERVIEW 1

[embedyt] https://www.youtube.com/watch?v=-QFIAoRPYoY[/embedyt]

MOCK INTERVIEW 2

[embedyt] https://www.youtube.com/watch?v=A0dTnkVd5Hc[/embedyt]

MOCK INTERVIEW 3

[embedyt] https://www.youtube.com/watch?v=lwJU_Zlb52Y[/embedyt]

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL |Current Affairs for CCSE IV JUNE 2017 TAMIL |ENGLISH

Iyachamy Academy Presents

Current Affairs for CCSE IV -2018

June Current Affairs

  • Prime Minister NarendraModi was on three nation visit to Portugal, United State and Netherlands from June 24th to 27th, 2017.
  • The Urban Development Ministry launched the ‘City Liveability Index’ to measure the quality of life in 116 major cities of the country.
  • The Tamil Nadu Human Development Report 2017-kanyakumari tops followed by virudhunagar , Tutucorin , Chennai and kanchi puram. Bottom districts are Perambalur and Villupuram, 
  • June 14, 2017, three public sector oil marketing companies – Indian Oil Corporation (IOC), Bharat Petroleum Corporation Limited (BPCL) and Hindustan Petroleum Corporation Ltd (HPCL) signed an agreement to jointly set up the world’s largest refinery and petrochemical complex at Ratnagiri district of Maharashtra
  • Social Progress Index 2017 was released by the nonprofit organization ‘Social Progress Imparative’. India has been ranked 93rd in total of 128 countries in 2017
  • 17th Summit of the Heads of the Member States of the Sanghai Cooperation Organization (SCO) concluded in Astana, KazakhstanIndia and Pakistan were granted the status of the member countries of the organization
  • India is the largest recipient of remittances sent by its citizens working abroad followed by China, Philippines, Mexico and Pakistan
  • ‘Global Innovation Index -2017’, India has been ranked 60th
  • 2017, the incumbent President of Iran, Dr. Hassan Rouhani got a decisive victory
  • In the Global Peace Index -2017, India is placed at 137th position
  • Montenegro became the 29th member of North Atlantic Treaty Organization (NATO)
  • World Investment Report (WIR) 2017 was released by UNCTAD (United Nations Conference on Trade and Development)
  • the target set up by Government of India for Renewable Energy Sector by 2022175 GW
  • June 29, 2017, India’s latest communication satellite, GSAT-17 was launched using the European Ariane 5 Launch Vehicle from Kourou, French Guiana.
  • Researchers from America have discovered 2D magnet
  • Pakistan won the Champions Trophy final defeating India at the Oval by 180 runs. Golden bat – Shikhar Dhawan (India), highest of 338 runs
  • Srikanth Kidambio became the first Indian player to win the men’s singles title of the Indonesia Open Super Series
  • Stephen Cottalorda of France has been appointed as the first foreign coach for Indian female boxers
  • Palbinder Kaur Shergill became the first turbaned (amritdhari) Sikh woman to be appointed judge of the Supreme Court of British Columbia in New Westminster (Canada)
  • Central Board of Excise and Customs made the famous Bollywood actor Amitabh Bachchan as the brand ambassador of Goods and Services Tax (GST)
  • Central Government appointed senior IAS officer Rajiv Gouba as the new Home Secretary
  • Renowned law expert Neeru Chadha was elected as the first Indian woman judge of the International Tribunal for the Law of the Sea (ITLOS).
  • He was the 17th Chief Justice of the India from 1985 to 1986. He is credited with introducing Public Interest Litigation (PIL) in Indian judicial system. In 2007, Justice Bhagwati was awarded the Padmabhushan.
  • Government appointed Hoshiar as the new registrar of copyrights.
  • Indian cricketer Sachin Tendulkar has been associated with the ‘Super Dad’ campaign. It is a new UNICEF initiative
  • Preet Gill was elected as the first female Sikh MP for the UK parliament elections.
  • United Nations General Assembly elected the foreign minister of Slovakia Miroslav Lajcak as the president of 72nd General Assembly
  • Ram Shankar Katheria as the Chairman of the National Commission for Scheduled Castes.
  • The building of Taj Mahal Palace Hotel (Hotel Taj), located in Mumbai, became country’s first trademarked building.
  • Man Booker International Prize for 2017 was awarded to David Grossman (Israel), author of ‘A Horse walks in a Bar’.
  • Vice President Hamid Ansari launched ‘M Power’ programme under the ‘Anuyatra campaign’ of Government of Kerala for persons with special needs
  • the Central Government constituted a committee for preparation of final draft of National Education Policy under the Chairmanship of eminent Scientist Dr K. Kasturirangan
  • June 17, 2017, President Pranab Mukherjee dedicated the last section of the first phase of Bengaluru Metro Rail Project, popularly known as ‘Namma Metro’ to the city
  • Government of India announced to implement India’s first Rural LED Street Lighting Project in Andhra Pradesh.
  • NITI Aayog launched SATH (Sustainable Action for Transforming Human capital) programme with the State Governments.
  • Assam’s famous ‘Ambubachi Festival’ began on June 22, 2017.
  • World Hydrography Day’ was celebrated all over the world on June 21, 2017
  • On June 8, 2017, World Oceans Day was celebrated
  • World Milk Day was celebrated on June 1, 2017 all over the world.
  • Kerala government announced the implementation of Green Protocol for Environment friendly weddings
  • Odisha become the first state in the country to have a blood bank for the cattle
  • Priyanka Chopra was appointed as the ambassador for Skill India campaign of National Skill Development Corporation.
  • N N Vohra has been appointed as the new President of the India International Centre (IIC)
  • ISRO’s Polar Satellite Launch Vehicle PSLV-C38 successfully launched the 712 kg Cartosat-2 Series Satellite along with other co-passenger satellites on June 23, 2017 from Satish Dhawan Space Centre (SHAR), Sriharikota. PSLV-C38 CARRIED 31 satellites
  • Bengaluru become India’s first city to deliver diesel at home
  • Nisha Dutt has been awarded Social Entrepreneur of the Year award at the 7th Asian Award held in London
  • Indore has become the India’s first city to use robot to control its ever growing and unruly traffic
  • Axis bank first Indian bank to launch bio-degradable prepaid gift cards
  • world’s first hybrid “aeroboat” capable of travelling on land, water, snow and sand has been built by joint venture between India and Russia
  • Habibganj near Bhopal is set to become India’s first private railway station
  • India ranked among 63 countries in the 2017 IMD World Competitiveness Index
  • Varanasi Indian city will get the country’s first ‘freight village’ spread over around 100 acres.
  • Sharjah as named World Book Capital for the year 2019
  • first-ever International MSME Day 2017 was celebrated on 27th June
  • first United Nations Oceans Conference was held at USA
  • USA .withdraw itself from 2015 Paris Agreement on Climate Change
  • M S Dhoni became the first Indian batsman to hit more than 200 sixes in One Day International (ODI) cricket.
  • Unnatam farmer market opened In dindugul
  • Tamil poet S. Abdul Rahman, popularly known as ‘Kavikko,’ passed away in Chennai . When he got the Sahitya Akademi award in 1999 for his collection of poems, Aalapanai
  • Tamilnadu Assembly passes GST Bill on June 19/06/2017
  • To create awareness throughout the world against child labour, every year June 12 is observed as ‘World Day Against Child Labour’
  • Puratchi Thalaivar MGR Centenary Inagural Function Started from Madurai ( 30.
  • The 64 gram smallest satellite created by a six-member student team led by 18-yearold Thiru. Rifath Sharook of Pallapatti, Karur District won the first prize in the competition recently held by the American Space Agency NASA

ஜீன் மாத நடப்பு நிகழ்வுகள்

  • பிரதமர் நரேந்திர மோதி மூன்று நாடுகளுக்கு, அமெரிக்கா , போர்ச்சுகல், மற்றும் இஸ்ரேலுக்கு பயனம் சென்றார். இஸ்ரேல் நாட்டுக்குச் செல்லும் முதல் இந்தியப்பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது
  • மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நகர வாழ்க்கைக் குறியீடு என்ற ஆய்வினை 116 இந்திய நகரங்களில் செயல்படுத்த உள்ளது.
  • தமிழ்னாடு மனித வள மேம்பாட்டு அறிக்கை 2017ன் படி கன்னியாகுமரி முதலிடம், விருதுனகர், 2, தூத்துக்குடி 3 , சென்னை 4 , காஞ்சிபுரம் 5 வது இடத்தைப் பெற்றுள்ளது. கடை இடம் , பெரம்பலூர் மற்றும் விழுப்புரம்
  • பொதுத்துறை நிறுவனஙக்ளான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் பாரத் பெட்ரோலியம் , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் அமைப்பு இனைந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மகாராஷ்ட்ராவின் ரத்னகிரி மாவட்டத்தில் அமைக்க உள்ளன.
  • சமூக வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 93வது இடம் பெற்றுள்ளது
  • 17வது சாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சி மானாடு கஜகஸ்தான் தலைனகர் அஸ்தானாவில் நடைபெற்றது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இவ்வமைப்பின் உறுப்பினர்களாக இனைந்தது
  • உலக புத்தாக்க குறியீடு 2017ல் இந்தியா 60 வது இடம் பெற்றுள்ளது
  • இரான் அதிபர் டாக்டர் ஹசன் ரஹானி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
  • நாட்டோ அமைப்பின் 29வது உறுப்பு நாடாக மாண்டினிக்ரோ இனைந்தது
  • உலக முதலீட்டு அறிக்கை வெளியிடப்பட்டது
  • இந்தியாவில் புதுப்பிக்கதக்க எரிசக்தி உற்பத்தியில் 2022 ஆம் ஆண்டிற்குள் 75 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது
  • அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞாணிகள் 2டி காந்தத்தை கண்டறிந்துள்ளனர்
  • ஐசிசி யின் சேம்பியன் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது
  • சிரிகாந்த கிடாம்பியோ இந்தோனேசிய திறந்த நிலைப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியராவார்.
  • இந்திய பெண்களுக்கான குத்துசண்டை பயிற்சியாளாராக பிரான்சைச் சார்ந்த ஸ்டீபன் காட்டலெரெடோ நியமிக்கப்பட்டுள்ளார்
  • பால்பிந்தர் சிங் செர்ஜில் கனடா நாட்டில் டர்பன் வைத்த சீக்கியர் முதல் முறையாக அந்த நாட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் ஜி எஸ் டி யின் தூதுவராக அமிதாப் பச்சனை நியமித்துள்ளது
  • ராஜிவ் கவுபா புதிய உள்துறைச் செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சர்வதேச கடல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக இந்தியாவைச் சார்ந்த நீரு சாத்தா நியமிக்கப்பட்டுள்ளார்
  • இந்தியாவின் 17வது தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பகவதி காலமானார். இவர்தான் பொது நல வழக்கு முறையை அங்கீகரித்த முதல் நீதிபதி. இவர் 2007 ஆம் ஆண்டு பத்மபூசன் விருது பெற்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்
  • காப்புரிமை பதிவாளராக ஹோசியர் என்பவரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது
  • யுனிசெப்பின் புதிய பிரச்சாரமான சூப்பர் டாட் பிரச்சாரத்திற்கு சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்துள்ளது
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையின் தலைவராக மிர்சலோவ் லாஜக் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ராம் சங்கர் கட்டாரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவிலேயே முதல் முறையாக வணிகக்குறியீட்டினைப் பெற்ற முதல் கட்டிடம் மும்பை தாஜ் ஹோட்டல் ஆகும்
  • 2017 ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருது இஸ்ரேலைச் சார்ந்த டேவிட் கிராஸ்மான் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவர் எழுதிய பாருக்குச் சென்ற குதிரை என்ற நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டது
  • அனுயாத்ரா என்ற சிறப்பு திட்டத்தினை மாற்றுத்திறனாளிகளுக்காக கேரளா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தினை துனைக் குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார்.
  • மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வடிவத்தை தயார் செய்ய கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது
  • பெங்களூரு மெட்ரோவின் கடைசி தடத்தினை குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார். நம்ம மெட்ரோ என பெங்களூரு மெட்ரோ அழைக்கப்படுகிறது
  • ஊரக எல்.ஈ.டி தெரு விளக்கு திட்டம் ஆந்திராவில் முதல் முறையாக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
  • நிதி ஆயோக் சாத் எனும் மனித மேம்பாட்டுத்திட்டத்தினை மானில அரசுகளுடன் இனைந்து நடத்த உள்ளது
  • அஸ்ஸாமின் பிரபல அம்புபாச்சி திருவிழா நடைபெற்றது
  • உல்க ஹைட்ரோகிராபி தினம் ஜீன் 21 கடைபிடிக்கப்பட்டது
  • உலக கடல் தினம் ஜீன் 8
  • உலக பால் தினம் ஜீன் 1
  • திருமணத்தில் உணவுப் பொருட்கள் வீனாவதை தடுக்க பசுமை ஒப்பந்தம் என்ற திட்டத்தினை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
  • இந்தியாவிலேயா முதல்முறையாக கால நடைகளுக்கான இரத்த வங்கியை ஒரிசா அமைக்க உள்ளது
  • பிரியங்கா சோப்ரா திறன் மேம்பாட்டு திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • இந்திய சர்வதேச மையத்தின் தலைவராக காஷ்மீர் ஆளுனர் என்.என் வோரா நியமிக்கப்பட்டுள்ளார்
  • ஜீன் 23 அன்று பி.எஸ்.எல்.வி 38 மூலம் 712 கிலோ எடையுள்ள கார்ட்டோசேட் – 2 விண்ணில் செலுத்தப்பட்டது.இது மொத்தம் 31 செயற்கை கோள்களை விண்ணிற்கு எடுத்துச் சென்றது
  • வீட்டிற்கே சென்று டீசல் வினியோகும் செய்யும் திட்டம் பெங்களூரில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • போக்குவரத்திற்காகா ரோபாட்டை அறிமுகப்படுத்தியுள்ள இந்தியாவின் முதல் நகரம் இந்தூர்
  • ஆக்ஸிஸ் வங்கி மக்கிப்போகக்கூடிய புதிய வகை ப்ரிபெய்டு கார்டுகளை அறிமுகபடுத்தக்கூடிய முதல் வங்கி ஆகும்
  • போபால் அருகே உள்ள ஹாபிகஞ் இந்தியாவின் தனியார்மயமாக்கப்பட்ட முதல் ரயில்வே நிலையம்
  • இந்தியாவின் முதல் சரக்கு கிராமம் அமைய உள்ள இடம் வாரணாசி ஆகும்
  • 2019 ஆண்டிற்கான உலக புத்தக தலைனகரமாகா சார்ஜா அறிவிக்கப்பட்டுள்ளது
  • உலகின் முதல் சிறு குறுந்தொழில்கள் தினம் ஜீன் 27ம் தேதி கொண்டாடப்பட்டது
  • ஐக்கிய நாடுகள் சபையின் முதல் கடல் மானாடு அமெரிக்காவில் நடைபெற்றது
  • பாரிஸ் ஒப்பத்தந்தில் இருந்து அமெரிக்க பின் வாங்கியுள்ளது
  • மகேந்திர சிங் தோனி 200 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனயை புரிந்துள்ளார்.
  • உன்னதம் உழவர் சந்தை திண்டுகல்லில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது
  • சென்னை: சாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 1964-ல் கவிக்கோவின் முதல் கவிதைத்தொகுப்பு ‘பால்வீதி’ வெளியானது. பூப்படைந்த சப்தம்’, ‘தொலைப்பேசிக் கண்ணீர்’, ‘காற்று என் மனைவி’, ‘உறங்கும் அழகி’, ‘நெருப்பை அணைக்கும் நெருப்பு’ உள்பட 17-க்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. ஆலாபனை நூலுக்கு 1999 ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். சொந்தச் சிறைகள்’, ‘மரணம் முற்றுப்புள்ளி அல்ல’, ‘முட்டைவாசிகள்’, ‘அவளுக்கு நிலா என்று பெயர்’, ‘கரைகளே நதியாவதில்லை’
  • தமிழ்னாடு சட்டசபை ஜீன் 16 அன்று சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
  • சர்வதேச குழந்தை தொழிலாளார் ஒழிப்பு தினம் ஜீன் 12 அன்று கொண்டாடப்பட்டது.
  • புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
  • நாசாவால் வைக்கப்பட்ட போட்டியில் உலகின் மிக சிறிய செயற்கைக் கோளை ( 64 கிராம்) கருரைச் சேர்ந்த ரிபாத் சாருக் வென்றுள்ளார்,

 

DOWNLOAD IYACHAMY ACADEMY APP FOR DAILY CURRENT AFFAIRS

https://play.google.com/store/apps/details?id=com.cloudsindia.iyachamynews&hl=en

 

WISH YOU ALL THE BEST

MORE CURRENT AFFAIRS WILL BE UPDATED KINDLY WATCH WEBSITE | OUR APP

 

 

TNPSC- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு விண்ணப்பிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு  விண்ணப்பிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள்

நான் நிரந்தரப்பதிவில் தவறுதலாக சில விவரங்களை பதிவு செய்துவிட்டேன். அதனை என்னால் மாற்ற முடியவில்லை. என்ன செய்வது?

நிரந்தரப்பதிவில் உங்களது பெயர், பிறந்த நாள், மதம், மற்றும் ஜாதி ஒதுக்கீட்டு பிரிவு (Communal Category) SSLC பதிவு எண், தேர்வான மாதம் மற்றும் வருடம் போன்ற சில முக்கியமான விவரங்களை நீங்கள் மாற்ற முடியாது. எனவே இவ்விவரங்ககைளை பதிவு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் ஒரே ஒருமுறை மட்டுமே நீங்கள் ஒரு சில விவரங்களை மாற்றிக்கொள்ளலாம். உங்களால் அவ்விவரங்களை மாற்ற முடிய வில்லை எனில் தகுத்த ஆதாரங்களுடன் apdtech2014@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை மனு அனுப்ப வேண்டும். அதனை பரிசீலித்த பின்னர் உங்கள் தகவல் சரியானதாக இருந்தால் அதனை தேர்வாணையத்தின் உதவியுடன் மாற்றிட இயலும். உங்களது கோரிக்கைகளை நீங்கள் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரி மூலமாகவே அனுப்பவேண்டும்.

எனது நிரந்தரப்பதிவின் பயனாளர் குறியீடு (USER ID) மற்றும் கடவுச்சொல் (PASSWORD) ஆகியவற்றை மறந்துவிட்டேன்? என்ன செய்வது?

உங்களது பயனாளர் குறியீடு (USER ID) ஐ தெரிந்துகொள்ளவும் மற்றும் கடவுச்சொல் (PASSWORD) ஐ மாற்றிக்கொள்ளவும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வசதிகள் உள்ளன. அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக தேர்வாணையத்தினை அணுக வேண்டியதில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை பயன்படுத்தி திரும்ப பெறலாம்.

https://www.i-register.co.in/tnpscotrpwd/frmForgotPassword.aspx

https://www.i-register.co.in/tnpscotrpwd/frmForgotLoginId.aspx

நான் நிரந்தரப்பதிவு செய்யும்போது “Details already exists” என்று செய்தி வருகிறது ஏன்?

நீங்கள் ஏற்கனவே உங்களது விவரங்களை நிரந்தரப்பதிவில் பதிவு செய்திருந்தால் இந்த செய்தி வரும். எனவே ஏற்கனவே பதிவு செய்த தகவல்களை கொண்டு மீண்டும் பதிவு செய்ய முடியாது

பயனாளர் குறியீடு (USER ID) ஐ தெரிந்துகொள்ளவும் மற்றும் கடவுச்சொல் (PASSWORD) மாற்றிக்கொள்ள முயலும்போது “Invalid User Details” என்ற தகவல் வருகிறது ஏன்?

பயனாளர் குறியீடு (USER ID) ஐ தெரிந்துகொள்ளவும் மற்றும் கடவுச்சொல் (PASSWORD) ஐ மாற்றிக்கொள்ளவும் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த சரியான தகவல்களை உள்ளிடு செய்தால் மட்டுமே அதற்கான தகவல்கள் கிடைக்கும். தவறான தகவல்களை உள்ளிடு செய்தால் “Invalid User Details” என்ற தகவல் மட்டுமே வரும். அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல.

 

நான் நிரந்தரப்பதிவில் பதிவு செய்துவிட்டேன். ஆனால் பதிவினை ஆக்டிவேட் செய்ய எனக்கு OTP வரவில்லை.

நீங்கள் தவறான மொபைல் ஃபோன் எண்-ஐ பதிவு செய்திருந்தாலோ அல்லது பதிவு செய்த எண் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலோ அல்லது உங்களின் மொபைல் ஃபோன் மொபைல் நெட்வொர்கிலிருந்து தொடர்ந்து 4 மணி நேரம் தொடர்பில் இல்லாமல் இருந்தாலோ உங்களது கைபேசி எண்ணுக்கு OTP வராது. நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்னுக்கு ஒரு முறை மட்டுமே OTP எண் அனுப்பி வைக்கப்படும்.

OTP இல்லையென்றால் நான் எனது கணக்கினை ஆக்டிவேட் செய்ய முடியாதா?

உங்களது கணக்கினை ஆக்டிவேட் செய்வதற்கான இணைப்பு (link) நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அதனை கிளிக் செய்தும் தங்களது கணக்கினை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்

நான் தவறுதலாக வேறு ஒருவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்-ஐ பதிவு செய்துவிட்டேன். அதனை எப்படி மாற்றுவது?

கவலைப்படத்தேவையில்லை. நீங்கள் உங்கள் நிரந்தரப்பதிவின் கணக்கில் உள்நுழைந்து “Edit Profile” ஐ கிளிக் செய்து மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்களை மாற்றிக்கொள்ளலாம்.

நான் நிரந்தரப்பதிவில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தினை இணையவழியே செலுத்திவிட்டேன். ஆனாலும் எனக்கு இன்னும் நிரந்தரப்பதிவுக்கான கணக்கு ஆக்டிவேட் ஆகாமல் நிலுவையில் உள்ளது.

பொதுவாக இணையவழியே கட்டணம் செலுத்தினால் உடனடியாக பணப்பரிமாற்றம் நிகழ்ந்து உங்களது கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும். ஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் பணப்பரிமாற்றம் நடைபெற்றும் உங்களது கணக்கு ஆக்டிவேட் ஆகாமல் இருந்தால் நிரந்தரப்பதிவில் Applicant Login என்ற பக்கத்தில் “PAYMENT STATUS” ஐ கிளிக் செய்து உங்களது விவரங்களை உள்ளிடு செய்து நீங்கள் எத்தனை முறை பணம் செலுத்தியுள்ளிர்கள் அதில் எத்தனை முறை தோல்வி அடைந்துள்ளது எம்முறை பணப்பரிமாற்றம் சரியாக நடைபெற்றுள்ளது என்ற விவரங்ககளை தெரிந்துகொண்டு அதனை கிளிக் செய்து UPDATE செய்தால் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.

நான் நிரந்தரப்பதிவுக்கான கட்டணம் ரூபாய் 150 ஐ செலுத்தி என்னுடைய கணக்கினை ஆக்டிவேட் செய்துவிட்டேன். இனி நான் தேர்வுக்கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியது அவசியமா?

ரூபாய் 150 என்பது நிரந்தரப்பதிவுக்கான கட்டணம் மட்டுமே. நீங்கள் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படாதவராகவோ அல்லது தேர்வுக்கட்டணச்சலுகை பெற தகுதியில்லாதவராக இருப்பின், குறிப்பிட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக்கட்டணத்தை கண்டிப்பாகச் செலுத்த வேண்டும். இல்லையேல் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

நான் எனது நிரந்தரக்கணக்கின் விவரங்களை மறந்துவிட்டேன். எனவே நான் புதிதாக ஒரு நிரந்தரக்கணக்கு தொடங்கலாமா?

தேர்வாணையத்தின் அறிவுரைகளின்படி, ஒருவர் ஒரே ஒரு நிரந்தரக்கணக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். தவறான விவரங்களைக்கொடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரக்கணக்கு வைத்திருப்பவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் அவர்களது விவரங்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது கண்டறியப்படும் என்பதால் தவறான விவரங்களைக்கொடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரப்பதிவுகளை பதிவு செய்ய வேண்டாம்.

நீங்கள் ஏற்கனவே நிரந்தரப்பதிவு செய்து அதன் விவரங்களை மறந்துவிட்டால், தங்களது. பெயர், பிறந்த தேதி, எஸ்.எஸ்.எல்.சி பதிவு எண், எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் எண் மற்றும் தேர்ச்சி பெற்ற மாதம், வருடம் ஆகியவற்றை குறிப்பிட்டு APDTECH2014@GMAILCOM என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை மனு அனுப்பி நிரந்தரப்பதிவின் பயனாளர் குறியீடை (LOGIN ID) அறிந்து கொள்ளலாம்.

நான் தெரியாமல் தவறுதலாக ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரப்பதிவுகள் செய்துவிட்டேன்? என்ன செய்வது?

தேர்வாணையத்தின் அறிவுரைகளின் படி ஒரு விண்ணப்பதாரர் ஒரே ஒரு முறை மட்டுமே நிரந்தரப்பதிவில் பதிவு செய்ய வேண்டும். தேர்வாணையம் கோரும் மிகச்சரியான விவரங்களை பதிவு செய்தால் ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரப்பதிவினை பதிவு செய்ய இயலாதபடி விண்ணப்பம் வடிவமைக்கப்படுள்ளது. நீங்கள் தவறான தகவல்களை பதிவு செய்தால் மட்டுமே இரண்டாவது முறை பதிவு செய்ய இயலும். ஒருவேளை தவறுதலாக ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்துவிட்டால் எந்தப் பதிவில் சரியான தகவல்களை பதிவு செய்துள்ளிர்களோ அந்த பயனாளர் குறியீட்டினையே அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க பயன் படுத்தவும், ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர் குறியீட்டினைப் பயன்படுத்தி ஒரே தேர்வுக்கோ அல்லது பல்வேறு தேர்வுக்கோ விண்ணப்பித்திருந்தால் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதோடு, தவறான தகவல்களை அளித்திருந்தால் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலிருந்து தாங்கள் விலக்கி வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

விண்ணப்பத்தினை சமர்ப்பித்த பின்னர் சில விவரங்களை மாற்ற கோரி அனுப்பப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமா?

பரிசீலிக்கப்படாது. எனவே விண்ணப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

எனது பெயரை மாற்றம் செய்துவிட்டேன். அது அரசிதழிலும் வெளியாகியுள்ளது. ஆனால் சான்றிதழ்கள் அனைத்திலும் பழைய பெயர் மட்டுமே உள்ளது. எந்த பெயரில் விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருமுறை பெயர் மாற்றம் செய்து அது அரசிதழில் வெளியாகிவிட்டால் மாற்றம் செய்த பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருவேளை தங்களது விண்ணப்பத்தில் பழைய பெயர் இருப்பின் அதனை சான்றிதழ் சரிபார்ப்பின் போது அதனை தெரிவித்துக்கொள்ளலாம்.

நான் தொகுதி 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தேன், ஆனால் விண்ணப்பத்தில் எனது பிறந்த நாள் தவறாக உள்ளது. மாற்ற முடியவில்லை.

தங்களது பெயர், தாய், தந்தை பெயர், பிறந்த தேதி, மதம், பிறந்த இடம், சொந்த மாவட்டம், மதம், சாதி பிரிவு, எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் விவரங்கள் போன்றவை நிரந்தரப்பதிவில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுவதால் அவற்றை தேர்வுக்கான விண்ணப்பத்தில் மாற்ற இயலாது. அவற்றை நிரந்தரப்பதிவில் மாற்றம் செய்த பின்னரே தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நான் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டுமா?

நீங்கள் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி வகுப்பினராக இருந்தாலோ அல்லது மாற்றுத்திறனாளி அல்லது ஆதரவற்ற விதவையாக இருந்தாலோ நீங்கள் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்களிக்கப்படுவீர்கள். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே மூன்று முறை தேர்வுக்கட்டணச்சலுகை பெற முடியும். முன்னாள் இராணுவத்தினர் இரண்டுமுறை கட்டணச்சலுகை துய்க்க முடியும். கட்டணச்சலுகையை மூன்று / இரண்டு முறை பயன்படுத்தியவர்கள் அதன் பின்னர் தேர்வுக்கட்டணம் கண்டிப்பாகச் செலுத்த வேண்டும்.

நான் ஏற்கனவே ஒரு நிரந்தரப்பதில் மூன்று முறை கட்டணச்சலுகையை பயன்படுத்திவிட்டேன். மீண்டும் ஒரு புதிய நிரந்தரப்பதிவு செய்து மீண்டும் மூன்று முறை கட்டணச்சலுகை பெறலாமா?

ஏற்கனவே கூறியதுபோல் ஒருவர் ஒரே ஒரு நிரந்தரப்பதிவு மட்டுமே செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரப்பதிவு செய்து அதன் மூலம் இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் கட்டணச்சலுகையை பயன்படுத்தினால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தவறான தகவல் கொடுத்த காரணத்திற்காக நீங்கள் தேர்வு எழுதுவதிலிருந்து ஒதுக்கி வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

#நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?

வாங்கலாம் , பயன்படுத்தலாம் ஆனால் 10 ஆம் வகுப்பிற்கு மட்டுமே வாங்கி விண்ணப்பிக்க வேண்டும் , பட்ட்ப்படிப்பில் நீங்கள் வாங்கி இருந்து விண்ணப்பித்தால் இத்தேர்வுக்கு அது செல்லாது.

#ஏன் 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும்?

எந்த ஒரு தேர்வுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி என்னவோ அதை தமிழ் வழியில் படித்திருந்தால் நீங்கள் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீடு பெறமுடியும். குருப் 4 தேர்வைப் பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தான் கல்வித்தகுதி எனவே 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும். எ.கா நீங்கள் 9 வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்திருந்தாலும் 10 ஆம் வகுப்பு தமிழ் வழியில் படித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் இதற்கு தகுதியானவர்தான்.

#அப்படியென்றால் , கல்லூரியில் வாங்கவா அல்லது பள்ளியில் வாங்கவா?

10 ஆம் வகுப்பு எங்கு படித்தீர்களோ அந்த பள்ளியில் வாங்கவேண்டும். ஏற்கனவெ வாங்கியிருந்தால் தேவையில்லை . தனியராக தேர்ச்சி பெற்றிருந்தால் உங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஆதாரமாக வைத்து பள்ளிக்கல்வித்துறையில் வாங்க வேண்டும்.

 

ஆதாராம் : தமிழ்நாடு அரசுப்பணியாளார் தேர்வாணையம்

 

 

 

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – டிசம்பர் 5 , 6 நடப்பு நிகழ்வுகள்

                         டிசம்பர் 5 , 6 நடப்பு நிகழ்வுகள்

  • தமிழக வேளாண் ஆராய்ச்சி மையங்களை இடம் மாற்றக் கூடாது. கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள மத்திய கடல் நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் ஆகிய நிறுவனங்களை இடமாற்றம் செய்யக்கூடாது என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

  • வரிச்சலுகை கோரி சர்வதேச நீதிமன்றத்தை நாடிய நிஸான் கார் நிறுவனத்துக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
  • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி.கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள இரண்டு உலைகள் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் பெற்றவை. வி.வி.இ.ஆர். வகையிலான இந்த அணு உலை, அழுத்த நீர் அணு உலைப் பிரிவைச் சேர்ந்தவை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆக்சைடு எரிபொருளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • ராஜிவ் காந்தி மானஸ் சேவா விருதினை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் செழியன் ராமு குடியரசுத்தலைவரிடம் இருந்து விருதினைப் பெற்றார்.
  • நகர்ப்புற வாழ்வாதார திட்டமான – தீனதயாள் அந்தியோஜனா திட்டத்தினை செயல்படுத்துவதில் தமிழ் நாடு 14 வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் கேராளவில் வயனாடு மாவட்டத்தில் உள்ள பனாசுரா சாகர் அனையில் 500 கிலோவாட் உற்பத்தி திறனுடன் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
  • உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் முத்தலாக் முறையை பின்பற்றுகிறவர்களை கட்டுப்படுத்த இது தொடர்பாக சட்டம் அவசியம் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சையது கயோருல் ஹசன் ரிஸ்வி கூறியுள்ளார்.
  • உலகிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக தகவல் தொழில்னுட்ப மையம் அமைக்கப்படும் என தெலுங்கான அரசு அறிவித்துள்ளது.
  • இந்தியாவிலேயே முதல்முறையாக 12வயதுக்கு குறைந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை மத்திய பிரதேச அரசு கொண்டுவந்துள்ளது.
  • இந்தியப் பெண் தாரா தற்போது, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் பொருளாதார ஆலோசகர்கள் சபையில் இணைந்துள்ளார்.
  • சூரிய சக்தி கூட்டமைப்பு சர்வதேச ஒப்பந்தம் சார்ந்த உலக அரசாங்களுக்குகிடையேயான சர்வதேச ஒப்பந்தமாக டிசம்பர் 6 முதல் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.

கூடுதல் தகவல்கள்

  •  சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு என்பது உலகில் கடக மற்றும் மகரரேகை பகுதிகளுக்கிடையே சூரிய ஒளி அதிகம் கிடைக்கக்கூடிய நாடுகளை கொண்ட ஒரு சர்வதேச கூட்டமைப்பு இந்த நாடுகள் சூரிய சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது என்பது இதன் நோக்கமாகும்
  • பாரிஸ் பருவ நிலை மானாட்டில் இந்தியாவால் முன் மொழியப்பட்ட திட்டமாகும்.
  • சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் தலைமையம் இந்தியாவில் அமைந்துள்ளது
  • இதுவரை 46 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது . 19 நாடுகள் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது
  • இக்கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இது பற்றி கலந்துரையாட தகவல்களை பரிமாற Digital Infopedia எனும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் வெளினாட்டு வர்த்தகக் கொள்கை 2015-20ன் இடைகால மறுஆய்வு வெளியிடப்பட்டுள்ளது
  • 6வது சர்வதேச சுற்றுலாச் சந்தை அசாம் தலைனகர் கவுஹாத்தியில் துவங்குகிறது.
  • இந்தி பட உலகின் பழம்பெரும் நடிகர் சசி கபூர் காலமானார். சினிமா துறையில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதினை 2015 ஆம் ஆண்டு இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எமர்சன் நங்கக்வா தலைமையிலான புதிய அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்றது

HOW TO PREPARE AND WHAT TO PREPARE FOR TNPSC GROUP II INTERVIEW

Interview

(The Articles try to answer the basic things for TNPSC Group I & II Interview)

DOWNLOAD HOW TO PREPARE TNPSC GROUP II INTERVIEW

Common Misconceptions

  • An interview is a type of “test” where an applicant sits passively and answers questions
  • Interviews involve unpredictable questions
  • One cannot prepare for an interview; it is best to just “wing-it”
  • Interviewers are looking for ways to trap the interviewee
  • If you were unable to answer all the questions, you did poorly

TNPSC Interview About

The candidate will be interviewed by a Board who will have before them a record of his/her career. He/she will be asked questions on matters of general interest. The object of the interview is to assess the personal suitability of the candidate for a career in public service by a Board of competent and unbiased observers. The test is intended to judge the mental calibre of a candidate. In broad terms this is really an assessment of not only his intellectual qualities but also social traits and his interest in current affairs.

Generally state Public service Commission Interview is differs from UPSC and Other Job Interviews. It’s purely based on the candidate information when he applied for it the Questions falls in the following categories

  1. Self Introduction
  2. District profile
  3. Graduation related questions
  4. Current Issues India/ Tamilnadu
  5. Department related questions those who are working with govt
  6. Various post related questions in Group II / I
[embedyt] https://www.youtube.com/watch?v=A-pG7oEbGCg[/embedyt]

SELF INTRODUCTION

First thing you should thank the interviewer for shortlisted

Name:                             am XYZ (say with confidentially)

Place:                    XYZ (any important things Associated with your Place, if you are from Tiruchy then say am Rock Fort City)

Qualification:      say your qualification with major subject if you have higher percentage in your graduation then disclose otherwise just says degree with your college / university name. Awards if any

Experience          if you have any work experience whether Govt / private (if you joined post after mains result say it don’t hide). Year of experience with designation.

Family Background: when you talk about your family member first mentioning with number. Start with mentioning your parents then come down to siblings no need to mention their name just the profession or occupation they do. (For example including family consist of four members, my father working as XYZ profession, mother working as XYZ , Sister working as XVYS profession)

Role model:         say your role model and justify why you chose him as role model?

Hobby:        learn to phrase your hobby with unique way. For example instead of simply saying cycling as your hobby you could phrase it as I like up cycling in the during early morning.

Kindly keep in mind the below things (they may try to make u nervous by asking such simple things)

  • Your roll number
  • Height / weight /age
  • Meaning of your name
  • Why you choosing govt job as a career
  • Famous personalities related with your hobby
  • Questions asked in the mains examination ( they may make nervous you)

What to prepare?

  1. Prepare from your basic Graduation related questions. (Pick two topics you know very well they may ask)
  2. District profile
  • History
  • Politics
  • Personalities
  • Culture
  • Tourism
  • General statistics (census 2011)
  • Recent developments and current affairs
  • Personalities
  • Development
  • Social problems
  1. Current Issues happening in India/Tamilnadu ( will be Given when mock Interview Conducted in IYACHAMY ACADMEY )
  2. Department related questions those who are working with govt ( for Example any one working with Revenue dept he must know the dept hierarchy and various policies and schemes ) ( will be Given when mock Interview Conducted in IYACHAMY ACADMEY )
  3. Various post related roles and responsibilities ( Sub register , DCTO , Revenue Inspector like ) ( will be Given when mock Interview Conducted in IYACHAMY ACADMEY )

General Advice

  • Greet the interviewer first
  • Wait until you are offered a chair before sitting. Sit upright and always look alert and interested. Be a good listener as well as a good talker. Smile!
  • Be confident: the key of a successful interview is confidence.
  • Speak clearly and vary your tone to show you are interested and enthusiastic.
  • Take time to think about each question before answering so that you can give a good response.
  • Listen to questions carefully and let the interviewer lead the conversation. If you don’t understand a question, ask for it to be explained or repeated.
  • It’s essential that whichever language you speak in, you should have a good command over the language.
  • Speak clearly and concisely, so you express your thoughts in the best way possible.
  • Remember to maintain eye contact with the interviewer’s
  • Research about various posts before your interview and prepare at least 2-3 questions that you will ask the interviewer about the job/course/organization.
  • Practice positive body language.
  • Remember not to fidget, stand still and relaxed and while sitting sit casually.
  • Take note of the surroundings. Sometimes questions may be just asked to test your observation powers.
  • Before the interview practice with a friend/relative and record your answers. You will be able to listen/see where you fumble and where you need to improve.
  • Focus on speaking positively and avoiding negativity. This gives a more positive effect of your interview and will more likely get you a positive response.
  • Be professional while you speak.
  • Be polite and calm. Showing anger is definitely not a good idea.
  • Remember to reach the venue early and arrive for the interview on time.

Dress code

  • Wear clean clothes. Your clothes must be well-washed, ironed and without any stains.
  • Avoid wearing too tight or too loose clothes.
  • Women should preferably wear formal Indian wear to the interview. If you are not comfortable with a sari, a salwar suit would do. Make sure whatever you wear is of a light color. It should be cotton.
  • Very little or no make-up is fine.
  • Avoid high heels unless you are comfortable walking in them and they don’t make a lot of noise.
  • Tie your hair neatly.
  • Men should wear light colored formal shirts and dark trousers.
  • A neck-tie is ok if you are comfortable.
  • Wear formal well-polished shoes with dark socks.
  • Avoid expensive and flashy jeweler.
  • You can wear a formal watch

Attention

Those who want to take classes & mock interview at IYACHAMY Academy Register to 9952521550 or iyachamyacademy@gmail.com  with your Name and District and Educational Qualification. After the Mock interview is over the Candidates will get Current affairs and Department related information those who working with government and Qualification related question paper.

https://iyachamy.com/downloads/tnpsc-group-ii-main-oral-test-guidance-noc-pstm-conduct-certificate-format/